ஐஎன்எஸ் ஷல்கி என்பது இந்தியக் கடற்படையின் ஷிஷுமர் பிரிவு டீசல்-மின்சார நீர்மூழ்கிக் கப்பல் ஆகும். இதுவே இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் நீர்மூழ்கிக் கப்பல் ஆகும். இது 1987 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
இந்த கப்பல் பிப்ரவரி 7, 1992 யில் முதன்முதலில் இயக்கப்பட்டு 2016 ஆம் ஆண்டு வரை செயலில் இருந்தது. இந்த கப்பல் ஷிஷுமர் பிரிவின் மூன்றாவது நீர்மூழ்கிக் கப்பலாகும். இதை தயாரித்தவர்கள் மசாகன் டாக் ஷிப்யார்ட் லிமிடெட் ( Mazagon Dock Shipyard Limited ) நிறுவனமாகும்.
ஐஎன்எஸ் ஷல்கியின் நீளம் 64.4 மீட்டராகவும் , பீம் நீளம் 6.5 மீட்டராகவும் மற்றும் வரைவு 6 மீட்டராகவும் உள்ளது. நீர்மூழ்கிக் கப்பல் நீருக்கடியில் மூழ்கும்போது 1450 டன் மற்றும் 1850 டன் மேற்பரப்பு இடப்பெயர்ச்சியைக் கொண்டுள்ளது.
மேலும் இந்த கப்பல் 9 மோட்டார்களை கொண்டு டீசலால் இயங்குகிறது. இந்த கப்பல் நீரில் மூழ்கும் போது 22 நாட்ஸ் வேகம் கொண்டது அதாவது ஒரு மணி நேரத்திற்கு 31 கிலோ மீட்டர் வேகத்தைக் கொண்டது. மேலும் இது அதிகபட்சமாக 260 மீ ஆழம் வரை செல்லக்கூடியது.
இந்த கப்பலில் 8 அதிகாரிகள் உட்பட 40 பணியாளர்கள் உள்ளனர்.