காலிஸ்தான் தீவிரவாதிகள் அடாவடி!
Mar 15, 2026, 08:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காலிஸ்தான் தீவிரவாதிகள் அடாவடி!

ஸ்காட்லாந்து குருத்வாராவுக்குள் நுழைய விடாமல் இந்தியத் தூதர் தடுப்பு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 30, 2023, 01:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இங்கிலாந்துக்கான இந்திய தூதர் விக்ரம் துரைசாமி, ஸ்காட்லாந்தில் உள்ள குருத்வாராவுக்குள் நுழைய விடாமல் தடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

காலிஸ்தான் தீவிரவாத அமைப்பின் தலைவன் ஹர்தீப் சிங் நிஜர், கடந்த ஜூன் மாதம் கனடா நாட்டின் பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள சீக்கிய குருத்வாரா முன்பு மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இக்கொலையில் கனடா நாட்டிலுள்ள இந்தியத் தூதர்களுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறி, காலிஸ்தான் தீவிரவாதிகள் கூறியதோடு, அத்தூதர்களின் புகைப்படத்தையும் வெளியிட்டனர்.

இந்த சூழலில், இந்தியாவில் நடந்த ஜி20 மாநாட்டுக்கு வருகை தந்த கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடம், ஹர்தீப் சிங் கொலை, இந்திய தூதர்கள் புகைப்படம் வெளியீடு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி விவாதித்தார். மேலும், கனடாவிலுள்ள காலிஸ்தான் தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் கேட்டுக் கொண்டார்.

ஆனால், நாடு திரும்பிய கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரோடோவோ, நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோது, ஹர்தீப் சிங் நிஜர் கொலையில் இந்தியாவுக்குத் தொடர்பு இருப்பதாகக் குற்றம்சாட்டினார். மேலும், அந்நாட்டிலுள்ள இந்திய தூதரையும் வெளியேற உத்தரவிட்டார். இதனால், இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையேயான இராஜதந்திர உறவில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது.

இந்த நிலையில்தான், இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதருக்கு ஸ்காட்லாந்து குருத்வாராவில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. அதாவது, இங்கிலாந்துக்கான இந்தியத் தூதர் விக்ரம் துரைசாமி, ஸ்காட்லாந்தின் ஆல்பர்ட் டிரைவிலுள்ள கிளாஸ்கோ குருத்வாரா கமிட்டியுடன் ஒரு சந்திப்புக்குத் திட்டமிட்டிருந்தார். இதற்காக அவர் குருத்வாராவுக்குச் சென்றிருக்கிரார்.

இதையறிந்த காலிஸ்தான் தீவிரவாதிகள் விக்ரம் துரைசாமியை குருத்வாராவுக்குள் நுழையவிடாமல் தடுத்திருக்கிறார்கள். மேலும், இங்கிலாந்திலுள்ள எந்த குருத்வாராவுக்குள்ளும் இந்திய அதிகாரிகளுக்கு அனுமதி இல்லை என்றும் தெரிவித்திருக்கிறார்கள். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags: scotlandgurdwaraindian envoyEntry denied
ShareTweetSendShare
Previous Post

முதல் உலகப் போரில் இந்தியர்களின் பங்கு: லண்டனில் கண்காட்சி!

Next Post

போபால் விமான கண்காட்சி!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies