கனடா கொலைகாரர்களின் கூடாரமாகி விடக்கூடாது: வங்கதேச அமைச்சர் ஆவேசம்!
Sep 10, 2025, 11:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கனடா கொலைகாரர்களின் கூடாரமாகி விடக்கூடாது: வங்கதேச அமைச்சர் ஆவேசம்!

மனித உரிமைகள் பற்றிய கருத்து தவறாகப் பயன்படுத்தப்படுவது துரதிருஷ்டவசமானது!

Web Desk by Web Desk
Sep 30, 2023, 04:27 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மனித உரிமைகள் பற்றிய கருத்து தவறாகப் பயன்படுத்தப்படுவது உண்மையிலேயே துரதிருஷ்டவசமானது. கனடா கொலைகாரர்களின் கூடாரமாகிவிடக் கூடாது என்று வங்கதேச வெளியுறவு துறை அமைச்சர் ஏ.கே.அப்துல் மொமன் தெரிவித்திருக்கிறார்.

கனடா நாட்டின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள சீக்கிய குருத்வாரா முன்பு, காலிஸ்தான் தீவிரவாத அமைப்பின் தலைவன் ஹர்தீப் சிங் நிஜர், கடந்த ஜூன் மாதம் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக இந்தியாவுக்கும், கனடாவுக்குமான இராஜதந்திர உறவில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது. இந்த சூழலில், மனித உரிமைகள் என்கிற பெயரில் கனடா குற்றவாளிகளுக்கு அடைக்கலம் தருவதாக வங்கதேச வெளியுறவுத்துறை அமைச்சர் ஏ.கே.அப்துல் மொமன் கூறியிருக்கிறார்.

அதாவது, பங்களாதேஷின் ஸ்தாபகத் தந்தை என்று அழைக்கப்படுபவர் ஷேக் முஜிபுர் ரஹ்மான். இவரும், இவரது குடும்ப உறுப்பினர்கள் 17 பேரும் கடந்த 1975-ம் ஆண்டு கொலை செய்யப்பட்டனர். இக்கொலையில் முக்கியக் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டவர்களில் ஒருவர் இராணுவ அதிகாரி நூர் சௌத்ரி. இவர், தற்போது கனடாவில் வசித்து வருகிறார். ஆகவே, அவரை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தருவதற்காக, நூர் சௌத்ரியை நாடு கடத்தும்படி, கனடா அரசிடம் வங்கதேச அரசு நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறது. ஆனால், கனடா அரசு மனித உரிமைகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களைக் கூறி நாடு கடத்த மறுத்து வருகிறது.

இந்த நிலையில்தான், வங்கதேச வெளியுறவுத்துறை அமைச்சர் ஏ.கே.அப்துல் மொமன் கனடாவை கடுமையாகச் சாடி இருக்கிறார். இதுகுறித்து தனியார் ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்த அப்துல் மொமன், “கனடா கொலைகாரர்களின் கூடாரமாகி விடக் கூடாது. கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பம் கஷ்டத்தில் இருக்கும்போது, கொலையாளிகள் கனடாவில் தஞ்சமடைந்து, அற்புதமான வாழ்க்கையை வாழமுடிகிறது. கனடாவின் இந்த நிலைப்பாடு மற்றும் மரண தண்டனைக்கு எதிரான நிலைப்பாடு காரணமாக அந்நாடு குற்றவாளிகளின் பாதுகாப்புக் கவசமாக மாறி வருகிறது.

மனித உரிமைகள் பற்றிய கருத்து பலரால் பல நேரங்களில் தவறாகப் பயன்படுத்தப்படுவது உண்மையில் துரதிருஷ்டவசமானது. ஏனெனில், கொலையாளிகள் மற்றும் பயங்கரவாதிகளை பாதுகாக்க மனித உரிமைகள் சில நேரங்களில் பயன்படுத்தப்படுகின்றன. இந்தியாவுடனும், கனடாவுடனும் நாங்கள் நல்ல உறவைக் கொண்டிருக்கிறோம். இரு நாடுகளும் எங்களுக்கு நண்பர்கள். கனடா குற்றவாளிகளின் கூடாரமாக மாறிவிடக் கூடாது. நாங்கள் சிலரை உடனடியாக நாடு கடத்துமாறு கனடா அரசிடம் கோரிக்கை வைத்திருக்கிறோம். ஆனால், துரதிருஷ்டவசமாக, அவர்கள் அப்பிரச்சனை குறித்து தற்போது எங்களிடம் பேசுவதில்லை” என்று கூறியிருக்கிறார்.

ஆக, கனடாவுக்கு பல்வேறு நாடுகளில் இருந்தும் அழுத்தம் அதிகரித்து வருகிறது.

Tags: CanadaattackForign ministerBangladesh
ShareTweetSendShare
Previous Post

சாதனை படைத்த கிரணுக்கு பிரதமர் வாழ்த்து !

Next Post

தாஷ்கண்ட் சர்வதேச திரைப்பட விழா!

Related News

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

இந்தியா மீது 100 சதவீதம் வரி விதிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்திய அமெரிக்க அதிபர் டிரம்ப்!

மதுரை மாநகராட்சி வரிவசூல் மோசடி வழக்கு – பெண் ஒப்பந்த ஊழியர் உட்பட 4 பேர் கைது!

வெளிநாட்டில் பிறந்த ராகுல் காந்திக்கு இந்தியர் என்ற உணர்வு வராது : நயினார் நாகேந்திரன்

குடியரசு துணைத் தலைவராக  சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி – தமிழகம் முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடிய பாஜகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

இமாச்சல பிரதேசம் – வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடம் பிரதமர் கலந்துரையாடல்!

கத்தார் தலைநகர் தோஹாவில் ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து இஸ்ரேல் வான்வழி தாக்குதல்!

குடியரசு துணைத் தலைவராக தேர்வாகியுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தலைவர்கள் வாழ்த்து!

நேபாளத்தின் அடுத்த பிரதமராகும் பாலேன் ஷா?

2026-ல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி தமிழகத்தில் மலரும் – நயினார் நாகேந்திரன்

நேபாளத்தில் வன்முறை – பிரதமர் மோடி கவலை!

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வாழ்த்து!

குடியரசு துணை தலைவரானார் சி.பி.ராதாகிருஷ்ணன் – கமலாலயத்தில் பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

நேபாளத்தில் ராணுவ ஆட்சி அமல்!

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பிரதமர் மோடி நேரில் வாழ்த்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies