கனடா கொலைகாரர்களின் கூடாரமாகி விடக்கூடாது: வங்கதேச அமைச்சர் ஆவேசம்!
Jan 14, 2026, 04:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கனடா கொலைகாரர்களின் கூடாரமாகி விடக்கூடாது: வங்கதேச அமைச்சர் ஆவேசம்!

மனித உரிமைகள் பற்றிய கருத்து தவறாகப் பயன்படுத்தப்படுவது துரதிருஷ்டவசமானது!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 30, 2023, 04:27 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மனித உரிமைகள் பற்றிய கருத்து தவறாகப் பயன்படுத்தப்படுவது உண்மையிலேயே துரதிருஷ்டவசமானது. கனடா கொலைகாரர்களின் கூடாரமாகிவிடக் கூடாது என்று வங்கதேச வெளியுறவு துறை அமைச்சர் ஏ.கே.அப்துல் மொமன் தெரிவித்திருக்கிறார்.

கனடா நாட்டின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள சீக்கிய குருத்வாரா முன்பு, காலிஸ்தான் தீவிரவாத அமைப்பின் தலைவன் ஹர்தீப் சிங் நிஜர், கடந்த ஜூன் மாதம் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக இந்தியாவுக்கும், கனடாவுக்குமான இராஜதந்திர உறவில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது. இந்த சூழலில், மனித உரிமைகள் என்கிற பெயரில் கனடா குற்றவாளிகளுக்கு அடைக்கலம் தருவதாக வங்கதேச வெளியுறவுத்துறை அமைச்சர் ஏ.கே.அப்துல் மொமன் கூறியிருக்கிறார்.

அதாவது, பங்களாதேஷின் ஸ்தாபகத் தந்தை என்று அழைக்கப்படுபவர் ஷேக் முஜிபுர் ரஹ்மான். இவரும், இவரது குடும்ப உறுப்பினர்கள் 17 பேரும் கடந்த 1975-ம் ஆண்டு கொலை செய்யப்பட்டனர். இக்கொலையில் முக்கியக் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டவர்களில் ஒருவர் இராணுவ அதிகாரி நூர் சௌத்ரி. இவர், தற்போது கனடாவில் வசித்து வருகிறார். ஆகவே, அவரை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தருவதற்காக, நூர் சௌத்ரியை நாடு கடத்தும்படி, கனடா அரசிடம் வங்கதேச அரசு நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறது. ஆனால், கனடா அரசு மனித உரிமைகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களைக் கூறி நாடு கடத்த மறுத்து வருகிறது.

இந்த நிலையில்தான், வங்கதேச வெளியுறவுத்துறை அமைச்சர் ஏ.கே.அப்துல் மொமன் கனடாவை கடுமையாகச் சாடி இருக்கிறார். இதுகுறித்து தனியார் ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்த அப்துல் மொமன், “கனடா கொலைகாரர்களின் கூடாரமாகி விடக் கூடாது. கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பம் கஷ்டத்தில் இருக்கும்போது, கொலையாளிகள் கனடாவில் தஞ்சமடைந்து, அற்புதமான வாழ்க்கையை வாழமுடிகிறது. கனடாவின் இந்த நிலைப்பாடு மற்றும் மரண தண்டனைக்கு எதிரான நிலைப்பாடு காரணமாக அந்நாடு குற்றவாளிகளின் பாதுகாப்புக் கவசமாக மாறி வருகிறது.

மனித உரிமைகள் பற்றிய கருத்து பலரால் பல நேரங்களில் தவறாகப் பயன்படுத்தப்படுவது உண்மையில் துரதிருஷ்டவசமானது. ஏனெனில், கொலையாளிகள் மற்றும் பயங்கரவாதிகளை பாதுகாக்க மனித உரிமைகள் சில நேரங்களில் பயன்படுத்தப்படுகின்றன. இந்தியாவுடனும், கனடாவுடனும் நாங்கள் நல்ல உறவைக் கொண்டிருக்கிறோம். இரு நாடுகளும் எங்களுக்கு நண்பர்கள். கனடா குற்றவாளிகளின் கூடாரமாக மாறிவிடக் கூடாது. நாங்கள் சிலரை உடனடியாக நாடு கடத்துமாறு கனடா அரசிடம் கோரிக்கை வைத்திருக்கிறோம். ஆனால், துரதிருஷ்டவசமாக, அவர்கள் அப்பிரச்சனை குறித்து தற்போது எங்களிடம் பேசுவதில்லை” என்று கூறியிருக்கிறார்.

ஆக, கனடாவுக்கு பல்வேறு நாடுகளில் இருந்தும் அழுத்தம் அதிகரித்து வருகிறது.

Tags: CanadaattackForign ministerBangladesh
ShareTweetSendShare
Previous Post

சாதனை படைத்த கிரணுக்கு பிரதமர் வாழ்த்து !

Next Post

தாஷ்கண்ட் சர்வதேச திரைப்பட விழா!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies