தூய்மை அறப்பணியில் தன்னார்வத்துடன் பங்கேற்க வேண்டும்!- அண்ணாமலை.
Sep 9, 2025, 06:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தூய்மை அறப்பணியில் தன்னார்வத்துடன் பங்கேற்க வேண்டும்!- அண்ணாமலை.

Web Desk by Web Desk
Sep 30, 2023, 07:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழ்நாட்டைப் பிடித்து இருக்கும், அழுக்குகளை நீக்கி, ஊழல் குப்பைகளை சுத்தம் செய்து, தூய்மையான தமிழகத்தை உருவாக்குவோம் எனத் தமிழக பாஜக மாநிலத் தலைவர்  அண்ணாமலை  தெரிவித்துள்ளார்.

2014 ஆம் ஆண்டில், நம் பாரத பிரதமர் நரேந்திர மோடி, பாரத நாட்டை தூய்மை செய்யும் தொலைநோக்குத் திட்டத்துடன், ஸ்வச் பாரத் என்று தொடங்கிய ஒரு அறச்செயல், ஸ்வச் பாரத் மிஷன் இன்று அனைத்து இல்லத்தின் அணுக்கமான பெயராக மாறியிருக்கிறது.

மனதின் குரல் நிகழ்ச்சியின் 105 வது தொகுப்பிலே, பாரதப் பிரதமர் நாட்டு மக்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தார். அதாவது, தான் வாழும் காலத்தில் தூய்மையை வலியுறுத்திய காந்தியடிகளுக்கு, மக்கள் தூய்மையான அஞ்சலி செலுத்தும் முகமாக, “ஒருநாள், ஒருமணிநேரம், ஒற்றுமையுடன்” கூடி பொது இடங்களில் சுத்தம் செய்வதன் மூலம் பங்களிக்க வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

அடுத்த நாள் தொடங்கும் காந்தி ஜெயந்தி மிகவும் வித்தியாசமாகவும், அற்புதமாகவும், தூய்மையானதாகவும், அமைய இந்த ஒரு நாள், ஒரு மணி நேரம், ஒன்றாக செய்யும் சேவை, பயனுள்ளதாக அமையும் என்று பிரதமர் கருத்து தெரிவித்திருக்கிறார்.

இந்த சிறப்பு பிரச்சாரத்திலேயே பங்கேற்கும் வகையில், அக்டோபர் ஒன்றாம் தேதி, காலை பத்து மணிக்கு, நாட்டு மக்கள் அனைவரும், தங்கள் பகுதியிலே இந்த தூய்மை அறப்பணியில் ஈடுபடலாம்.

அக்டோபர் ஒன்றாம்தேதி, மக்கள் கூடும் சந்தைகளிலும், மத வழிபாட்டு தலங்களிலும், இரயில் பாதைகளிலும், ரயில் நிலையங்களிலும், நீர் நிலைகளிலும், சமூகக் கூடங்களிலும், நகர்ப்புறம் மற்றும் கிராமச்சாலைகளிலும் துப்புரவு மற்றும் தூய்மைப் பணிகளை, சாமானிய மக்களும் பாரத தேசத்தின் தூய்மைத் தூதர்களாக, முன்னெடுத்துச் செய்யலாம்.

பாரதப் பிரதமரின் இந்த நல்ல முயற்சிக்கு, கோடிக்கணக்கான மக்கள் தங்கள் ஆதரவை https://swachhatahiseva.com/ இணையத்தின் வழியாக தெரிவித்திருக்கிறார்கள்.

தமிழ்நாட்டைப் பிடித்து இருக்கும், அழுக்குகளை நீக்கி, ஊழல் குப்பைகளை சுத்தம் செய்து, தூய்மையான தமிழகத்தை உருவாக்கும் முனைப்புடன் இயங்கிக் கொண்டிருக்கும் நம் பாரதிய ஜனதா கட்சியின் செயல்வீரர்களும், பொதுமக்களும், 5 கோடிக்கும் அதிகமான மக்கள் பங்களிப்புடன் நடைபெறும்.

இந்தத் தூய்மை அறப்பணியிலே, தன்னார்வத்துடன் பங்கேற்று, பாரதப் பிரதமரின் கரத்தை வலுப்படுத்த உறுதி ஏற்கும் படி அன்புடன் வேண்டிக்கொள்கிறேன். நல்வாழ்த்துகள். நன்றி…

Tags: PM Modik annamali bjp
ShareTweetSendShare
Previous Post

5 ஆண்டுகளில் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை இரட்டிப்பு: அமித்ஷா!

Next Post

தங்கம் வென்ற தங்கங்களுக்கு பிரதமர் வாழ்த்து !

Related News

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

ராஜஸ்தான் : முதியவரை காப்பாற்ற பைக்குடன் மருத்துவமனைக்குள் நுழைந்த இளைஞர்கள்!

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியா மீது ட்ரம்ப் காட்டம் ஏன்? – “இந்தியர்கள் குறைந்த நன்கொடை அளித்ததும் ஒரு காரணம்”!

வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட வழக்கு : ஒரு நபர் ஆணையத்திற்கு தடை – சென்னை உயர் நீதிமன்றம்

திமுக அரசு, ஒடுக்கு முறை ஆட்சி செய்வதாக தூய்மை பணியாளர்கள் குற்றச்சாட்டு!

உத்தரபிரதேசம் : வீட்டின் சுவர் இடிந்து 2 பேர் பலி – 2 பேர் காயம்!

BRICS நாடுகள் ஒன்றிணைய வேண்டுமென சீனா அழைப்பு!

ஐயப்ப பக்தர்கள் மாநாட்டுக்கு தடை கோரிய மனு – கேரள அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

விழுப்புரம் : வரிப்பணம் மூலம் தாங்களாகவே சாலையை அமைத்துக் கொண்ட மக்கள்!

ஜம்மு காஷ்மீரில் ஆம் ஆத்மி எம்எல்ஏ மெஹ்ராஜ் மாலிக் கைது!

இமாச்சலுக்கு ரூ.1,500 கோடி நிதியுதவி – பிரதமர் மோடி

இந்தியாவின் முதல் Vande Bharat SLEEPER TRAIN : விமானத்திற்கு நிகரான ரயிலில் பறக்க தயாரா?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies