தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, சென்னையில் உள்ள நயினார்குப்பம் மீனவ கிராமத்தில் தூய்மைப்பணியில் ஈடுபட்டார்.
மத்திய அரசு நாடுமுழுவதும் உள்ள அனைவரும் இன்று ஒரு மணி நேரம் தூய்மை இந்தியா திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளது.
மத்திய அரசின் வேண்டுகோளை நிறைவேற்றும் வகையில், மேதகு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, சென்னையில் உள்ள நயினார்குப்பம் மீனவ கிராமத்தில் தூய்மைப்பணியில் ஈடுபட்டார்.
மாபெரும் தூய்மை இயக்கத்தில் மாணவர்கள், தன்னார்வலர்கள் மற்றும் குடியிருப்புவாசிகளுடன் இணைந்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, கடற்கரையில் கிடந்த குப்பைகளை ஒரு பையில் சேகரித்தார்.
அப்போது, ஆளுநருடன் தூய்மைப் பணியில் ஈடுபட்ட மாணவர்களை அவர் ஊக்கப்படுத்தினார். இதனால், மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.