மருதமலை கோவிலில் திடீர் தடை – என்ன காரணம்?
Jul 28, 2026, 03:26 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மருதமலை கோவிலில் திடீர் தடை – என்ன காரணம்?

Murugesan M by Murugesan M
Oct 1, 2023, 05:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவை அடுத்துள்ள புகழ் பெற்ற மருதமலை திருக்கோவிலுக்கு 5 -ம் தேதி முதல் மலைப்பாதையில் வாகனங்களில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் புகழ் பெற்றது மருதமலை முருகன் திருக்கோவில். இந்த திருக்கோவில் கோயம்புத்தூரிலிருந்து 15 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. மருத மலைமேல் அமைந்துள்ளதால் மருதன் என்று அருணகிரிநாதரால் திருப்புகழில் பாடப்பெற்றது. இந்த மலைக்கு, மருதாசலமூர்த்தி திருக்கோவில் என்றும் மற்றொரு பெயரும் உண்டு.

மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்குச் சுவாமி தரிசனம் செய்யத் தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இதனால், பக்தர்கள் வசதிக்காக பல்வேறு சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது.

பக்தர்களின் வசதிக்காக மின்தூக்கி அறை, காத்திருப்பு அறை, கட்டணச் சீட்டு வழங்கும் இடம் ஆகியவற்றுடன் மின்தூக்கி வசதி ஏற்படுத்தும் பணிகள் செய்யப்பட்டு வருகிறது.

அத்துடன், மலைசாலையில் உள்ள தார்ச் சாலையைச் சீரமைத்தல் பணியுடன், திருக்கோவிலின் மலைமேல் புதிதாக யாகசாலை மண்டபம் கட்டும் பணியும் நடைபெற்று வருகிறது.

மேலும், திருக்கோவில் தங்கரதம் உலா வரும் பாதையில் கருங்கல் தளம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

எனவே, வரும் அக்டோபர் மாதம் 5 -ம் தேதி முதல் ஒரு மாத காலத்திற்கு மலைப்பாதையில் இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்குக் கோவில் பேருந்து மற்றும் படிப்பாதையை பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் திருக்கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Tags: maruthamali temple
ShareTweetSendShare
Previous Post

ஒரே நாளில் இரண்டுப் பதக்கங்களை வென்ற இந்திய வீரர் !

Next Post

தூய்மைப்பணியில் ஈடுபட்ட ஆளுநர்!

Related News

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

இந்தியாவின் முதல் காலியம் நைட்ரைடு (GaN) சிப் : சாதித்த இந்திய ஆராய்ச்சியாளர்கள் – சிறப்பு தொகுப்பு!

விஸ்வரூபம் எடுக்கும் வினாத்தாள் கசிவு விவகாரம் : பஞ்சாப் அமைச்சர்கள் பதவி விலக போர்க்கொடி – சிறப்பு தொகுப்பு!

பட்ட கஷ்டத்திற்கு பலன் கிடைத்துள்ளது – ராஜா முத்துப்பாண்டி பெற்றோர் உருக்கம்!

காமன்வெல்த் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற முத்துப்பாண்டிக்கு முதல்வர் பாராட்டு – ரு.30 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

கோயில் காணிக்கை கூட்டணி அமைத்து கொள்ளை – உரிய நடவடிக்கை எடுக்க இந்து முன்னணி வலியுறுத்தல்!

அப்துல் கலாம் நினைவு தினம் – அண்ணாமலை மரியாதை!

பழனி கோயில் நில மோசடி விவகாரம் – சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் விசாரணைக்கு ஆஜர்!

48 மணிநேரத்தில் சுமார் 20 லட்சம் பேர் – பிரதமர் மோடியின் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடரும் Followers! 

இன்றைய தங்கம் விலை!

உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் – அனஹத் சிங்கிற்கு பிரதமர் மோடி வாழ்த்து!

கோயில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் – குற்றாலநாதன்

ரஃபேல் போர் விமானங்கள் கொள்முதல் – பிரான்ஸ் அரசின் பதில் என்ன’?

சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிடப் போவதில்லை – சித்தராமையா

மகளிர் TNPL தொடர் நடத்துவது குறித்து ஆலோசித்து முடிவு –  சீனிவாசராஜ்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies