ஆந்திரா, தெலங்கானாவில் 60 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை!
Aug 18, 2025, 07:26 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆந்திரா, தெலங்கானாவில் 60 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை!

தீவிரவாத வழக்குகளில் ஆஜரான வக்கீல்கள் வீடுகளில் அதிரடி!

Web Desk by Web Desk
Oct 2, 2023, 12:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் இடதுசாரி தீவிரவாத வழக்குகள், மாவோயிஸ்ட்கள் மற்றும் நக்சல் வழக்கில் ஆஜராகி வாதாடிய வழக்கறிஞர்கள் வீடுகள் உட்பட 60-க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) இன்று சோதனையில் ஈடுபட்டு வருகிறது.

ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் நக்சல்களின் ஆதிக்கும் அதிகரித்து வருகிறது. எனவே, இடதுசாரி தீவிரவாதிகள், மாவோயிஸ்ட்கள், நக்சல்கள் மற்றும் இவர்கள் தொடர்பான வழக்குகளில் ஆஜராகி வாதாடிய வழக்கறிஞர்கள் ஆகியோர் குறித்த தகவல்களை என்.ஐ.ஏ. சேகரித்தது. இதைத் தொடர்ந்து, இரு மாநிலங்களிலும் 60-க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இரு மாநிலங்களிலும் சந்தேக நபர்களின் இருப்பிடங்கள் மற்றும் மறைவிடங்களில் சோதனை நடந்து வருகிறது.

காலை முதல் தனி என்.ஐ.ஏ. குழுக்கள் மாநில காவல்துறையினருடன் இணைந்து இச்சோதனையில் ஈடுபட்டிருக்கின்றன. இது தொடர்பாக, என்.ஐ.ஏ. உயர் அதிகாரிகள் கூறுகையில், “ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானாவில் தீவிரவாதிகள், மாவோயிஸ்ட்கள், நக்கல்கள் மற்றும் இவர்கள் தொடர்பான வழக்குகளின் ஆஜரான வழக்கறிஞர்கள் உட்பட சந்தேகத்துக்குரிய நபர்களுக்குச் சொந்தமான 60 இடங்களில் சோதனை நடந்து வருகிறது” என்று தெரிவித்தனர்.

ஆந்திராவின் குண்டூர், நெல்லூர் மற்றும் திருப்பதி மாவட்டங்களிலும், தெலங்கானாவில் ஐதராபாத் உள்ளிட்ட பல்வேறு இடங்கள் என 60-க்கும் மேற்பட்ட இடங்களில் இச்சோதனை நடந்து வருகிறது. கடந்த ஜூன் மாதம் கொத்தகுடெம் பகுதியின் செர்லா மண்டலத்தில் 3 பேரிடம் இருந்து வெடிகுண்டு பொருட்கள், ட்ரோன்கள் மற்றும் லேத் இயந்திரம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 12 பேர் மீது என்.ஐ.ஏ. வழக்கு பதிவு செய்தது.

அதேபோல, கடந்த ஆகஸ்ட் மாதம் பாதுகாப்புப் படையினர் மீது மாவோயிஸ்ட்கள் தாக்குதல் நடத்தினர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து, தெலங்கானா மற்றும் சத்தீஸ்கரில் தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்தவர்களுக்குச் சொந்தமான இடங்களில் கடந்த செப்டம்பர் 9-ம் தேதி என்.ஐ.ஏ. சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது. இதன் தொடர்ச்சியாகவே தற்போதும் இச்சோதனைகள் நடந்து வருவதாகக் கூறப்படுகிறது.

Tags: AndraNiaTelanganaRaid
ShareTweetSendShare
Previous Post

பிச்சை எடுக்க சவூதி செல்ல முயன்ற பாகிஸ்தானியர்கள் – விமான நிலையத்தில் கைது

Next Post

ஐ.என்.எஸ். தலைவராக ராகேஷ் சர்மா தேர்வு

Related News

விடுமுறை முடிந்து ஒரே நேரத்தில் சென்னை திரும்பிய பயணிகள் – உளுந்தூர் பேட்டை சுங்கச் சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல்!

ரஷ்யா உக்ரைன் போர் நிறுத்த பேச்சுவார்த்தை – ஜெலன்ஸ்கியை இன்று சந்திக்கிறார் ட்ரம்ப்!

தமிழக ரயில் திட்டங்களுக்கு நடப்பாண்டில் ரூ.6626 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சர் எல்.முருகன்

10.5 சதவீத இடஒதுக்கீடு, சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக அமல்படுத்த வேண்டும் – டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்!

என்டிஏ குடியரசு துணை தலைவர் வேட்பாளராக சி.பி. ராதாகிருஷ்ணன் தேர்வு – பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

என்டிஏ குடியரசு துணை தலைவர் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் கடந்து வந்த பாதை!

Load More

அண்மைச் செய்திகள்

என்டிஏ குடியரசு துணைத்தலைவர் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் – பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா அறிவிப்பு!

லாஸ் வேகாஸை புரட்டிப்போட்ட அதிபர் டிரம்பின் நடவடிக்கை : பொருளாதார நெருக்கடியால் திண்டாடும் மக்கள்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் குவிந்த பக்தர்கள் – 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

AI தொழில்நுட்பத்தால் மனித குலம் அழியும் அபாயம் : தீர்வை விளக்கும் AI-யின் ‘காட் ஃபாதர்’!

அம்பத்தூர் அருகே படவட்டம்மன் கோயில் ஆடி மாத திருவிழா – பால்குடம் எடுத்த பக்தர்கள்!

இந்திய ரயில்வேயின் புதிய மைல்கல் : பறக்கத் தயாரானது ஹைட்ரஜன் ரயில்!

திமுக ஆட்சியில் அமைச்சர் வீடுகளிலேயே அமலாக்கத்துறை சோதனை – முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சனம்!

தீபாவளிக்கு இரு போனஸ் – பிரதமர் மோடி உறுதி

வாகனங்களை நிறுத்தி வழிப்பறி கொள்ளை – முற்றுகை போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவிப்பு!

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை – தேர்தல் ஆணையம் விளக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies