ஆந்திரா, தெலங்கானாவில் 60 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை!
Sep 13, 2026, 05:49 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆந்திரா, தெலங்கானாவில் 60 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை!

தீவிரவாத வழக்குகளில் ஆஜரான வக்கீல்கள் வீடுகளில் அதிரடி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 2, 2023, 12:17 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் இடதுசாரி தீவிரவாத வழக்குகள், மாவோயிஸ்ட்கள் மற்றும் நக்சல் வழக்கில் ஆஜராகி வாதாடிய வழக்கறிஞர்கள் வீடுகள் உட்பட 60-க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) இன்று சோதனையில் ஈடுபட்டு வருகிறது.

ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் நக்சல்களின் ஆதிக்கும் அதிகரித்து வருகிறது. எனவே, இடதுசாரி தீவிரவாதிகள், மாவோயிஸ்ட்கள், நக்சல்கள் மற்றும் இவர்கள் தொடர்பான வழக்குகளில் ஆஜராகி வாதாடிய வழக்கறிஞர்கள் ஆகியோர் குறித்த தகவல்களை என்.ஐ.ஏ. சேகரித்தது. இதைத் தொடர்ந்து, இரு மாநிலங்களிலும் 60-க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இரு மாநிலங்களிலும் சந்தேக நபர்களின் இருப்பிடங்கள் மற்றும் மறைவிடங்களில் சோதனை நடந்து வருகிறது.

காலை முதல் தனி என்.ஐ.ஏ. குழுக்கள் மாநில காவல்துறையினருடன் இணைந்து இச்சோதனையில் ஈடுபட்டிருக்கின்றன. இது தொடர்பாக, என்.ஐ.ஏ. உயர் அதிகாரிகள் கூறுகையில், “ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானாவில் தீவிரவாதிகள், மாவோயிஸ்ட்கள், நக்கல்கள் மற்றும் இவர்கள் தொடர்பான வழக்குகளின் ஆஜரான வழக்கறிஞர்கள் உட்பட சந்தேகத்துக்குரிய நபர்களுக்குச் சொந்தமான 60 இடங்களில் சோதனை நடந்து வருகிறது” என்று தெரிவித்தனர்.

ஆந்திராவின் குண்டூர், நெல்லூர் மற்றும் திருப்பதி மாவட்டங்களிலும், தெலங்கானாவில் ஐதராபாத் உள்ளிட்ட பல்வேறு இடங்கள் என 60-க்கும் மேற்பட்ட இடங்களில் இச்சோதனை நடந்து வருகிறது. கடந்த ஜூன் மாதம் கொத்தகுடெம் பகுதியின் செர்லா மண்டலத்தில் 3 பேரிடம் இருந்து வெடிகுண்டு பொருட்கள், ட்ரோன்கள் மற்றும் லேத் இயந்திரம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 12 பேர் மீது என்.ஐ.ஏ. வழக்கு பதிவு செய்தது.

அதேபோல, கடந்த ஆகஸ்ட் மாதம் பாதுகாப்புப் படையினர் மீது மாவோயிஸ்ட்கள் தாக்குதல் நடத்தினர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து, தெலங்கானா மற்றும் சத்தீஸ்கரில் தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்தவர்களுக்குச் சொந்தமான இடங்களில் கடந்த செப்டம்பர் 9-ம் தேதி என்.ஐ.ஏ. சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது. இதன் தொடர்ச்சியாகவே தற்போதும் இச்சோதனைகள் நடந்து வருவதாகக் கூறப்படுகிறது.

Tags: NiaTelanganaRaidAndra
Share
Tweet
SendShare
Previous Post

பிச்சை எடுக்க சவூதி செல்ல முயன்ற பாகிஸ்தானியர்கள் – விமான நிலையத்தில் கைது

Next Post

ஐ.என்.எஸ். தலைவராக ராகேஷ் சர்மா தேர்வு

Related News

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

லண்டன் கார் பந்தயம் : 3-ம் இடம் பிடித்து அஜித் அணி அசத்தல்!

லண்டனில் முதலமைச்சர் விஜய் – நடிகர் அஜித் பங்கேற்ற கார் பந்தயத்தை தொடங்கி வைத்தார்!

கேரளத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு – பொதுமக்கள் அவதி!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களுக்கு விருந்து!

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies