ஆந்திரா, தெலங்கானாவில் 60 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை!
Jun 15, 2026, 04:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆந்திரா, தெலங்கானாவில் 60 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை!

தீவிரவாத வழக்குகளில் ஆஜரான வக்கீல்கள் வீடுகளில் அதிரடி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 2, 2023, 12:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் இடதுசாரி தீவிரவாத வழக்குகள், மாவோயிஸ்ட்கள் மற்றும் நக்சல் வழக்கில் ஆஜராகி வாதாடிய வழக்கறிஞர்கள் வீடுகள் உட்பட 60-க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) இன்று சோதனையில் ஈடுபட்டு வருகிறது.

ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் நக்சல்களின் ஆதிக்கும் அதிகரித்து வருகிறது. எனவே, இடதுசாரி தீவிரவாதிகள், மாவோயிஸ்ட்கள், நக்சல்கள் மற்றும் இவர்கள் தொடர்பான வழக்குகளில் ஆஜராகி வாதாடிய வழக்கறிஞர்கள் ஆகியோர் குறித்த தகவல்களை என்.ஐ.ஏ. சேகரித்தது. இதைத் தொடர்ந்து, இரு மாநிலங்களிலும் 60-க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இரு மாநிலங்களிலும் சந்தேக நபர்களின் இருப்பிடங்கள் மற்றும் மறைவிடங்களில் சோதனை நடந்து வருகிறது.

காலை முதல் தனி என்.ஐ.ஏ. குழுக்கள் மாநில காவல்துறையினருடன் இணைந்து இச்சோதனையில் ஈடுபட்டிருக்கின்றன. இது தொடர்பாக, என்.ஐ.ஏ. உயர் அதிகாரிகள் கூறுகையில், “ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானாவில் தீவிரவாதிகள், மாவோயிஸ்ட்கள், நக்கல்கள் மற்றும் இவர்கள் தொடர்பான வழக்குகளின் ஆஜரான வழக்கறிஞர்கள் உட்பட சந்தேகத்துக்குரிய நபர்களுக்குச் சொந்தமான 60 இடங்களில் சோதனை நடந்து வருகிறது” என்று தெரிவித்தனர்.

ஆந்திராவின் குண்டூர், நெல்லூர் மற்றும் திருப்பதி மாவட்டங்களிலும், தெலங்கானாவில் ஐதராபாத் உள்ளிட்ட பல்வேறு இடங்கள் என 60-க்கும் மேற்பட்ட இடங்களில் இச்சோதனை நடந்து வருகிறது. கடந்த ஜூன் மாதம் கொத்தகுடெம் பகுதியின் செர்லா மண்டலத்தில் 3 பேரிடம் இருந்து வெடிகுண்டு பொருட்கள், ட்ரோன்கள் மற்றும் லேத் இயந்திரம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 12 பேர் மீது என்.ஐ.ஏ. வழக்கு பதிவு செய்தது.

அதேபோல, கடந்த ஆகஸ்ட் மாதம் பாதுகாப்புப் படையினர் மீது மாவோயிஸ்ட்கள் தாக்குதல் நடத்தினர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து, தெலங்கானா மற்றும் சத்தீஸ்கரில் தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்தவர்களுக்குச் சொந்தமான இடங்களில் கடந்த செப்டம்பர் 9-ம் தேதி என்.ஐ.ஏ. சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது. இதன் தொடர்ச்சியாகவே தற்போதும் இச்சோதனைகள் நடந்து வருவதாகக் கூறப்படுகிறது.

Tags: NiaTelanganaRaidAndra
ShareTweetSendShare
Previous Post

பிச்சை எடுக்க சவூதி செல்ல முயன்ற பாகிஸ்தானியர்கள் – விமான நிலையத்தில் கைது

Next Post

ஐ.என்.எஸ். தலைவராக ராகேஷ் சர்மா தேர்வு

Related News

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies