பிச்சை எடுக்க சவூதி செல்ல முயன்ற பாகிஸ்தானியர்கள் – விமான நிலையத்தில் கைது
Apr 30, 2026, 08:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிச்சை எடுக்க சவூதி செல்ல முயன்ற பாகிஸ்தானியர்கள் – விமான நிலையத்தில் கைது

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 2, 2023, 12:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தானியர்கள் சவூதி அரேபியாவுக்குப் புனிதப் பயணம் செல்வதாகக் கூறி, பிச்சை எடுக்கச் செல்வது சமீபக் காலமாக அதிகரித்து வருகிறது.

பாகிஸ்தான் நாட்டில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, விலைவாசி உயர்ந்து வருவதால், அத்தியாவசியப் பொருட்களைக் கூட வாங்க முடியாத நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதன் காரணமாக, அந்நாட்டில் இருந்து பலா் பிச்சை எடுத்துப் பிழைப்பதற்காக, சவூதி அரேபியாவை நோக்கி செல்வது வழக்கமாகி உள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தான் நாட்டின் முல்தான் நகர விமான நிலையத்தில் இருந்து யாசகம் எடுப்பதற்காக சிலர் சவூதி அரேபியா செல்ல முயன்றனர். புனித யாத்திரைக்குச் செல்வது போல் மாறுவேடமிட்டு இருந்த, 11 பெண்கள், 4 ஆண்கள், ஒரு சிறுவன் உட்பட 16 பேரை மத்திய புலனாய்வு அதிகாரிகள் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், புனிதப் பயணம் செல்வதற்கான அனுமதியைப் பயன்படுத்தி சவூதி அரேபியா சென்று பிச்சை எடுப்பதை அவா்கள் ஒரு தொழிலாக செய்து வருவதும், விசா அனுமதி காலம் வரை அங்கு தங்கி பிச்சை எடுப்பதும், அதில் வரும் வருமானத்தில் பாதியை சவூதி அரேபியாவுக்கு அனுப்பும் இடைத்தரகர்களுக்கு அளித்து வருவதும் தெரியவந்துள்ளது.

வெளிநாடுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 90 சதவீதம் பிச்சைக்காரர்கள் பாகிஸ்தானைப் பூர்வவீகமாகக் கொண்டவர்கள் என்றும், இதனால் சிறைகளில் நெரிசல் அதிகமாக இருப்பதாகவும் ஈராக் மற்றும் சவூதி தூதர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags: pakisthansaudi arabia
ShareTweetSendShare
Previous Post

மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்தது

Next Post

ஆந்திரா, தெலங்கானாவில் 60 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை!

Related News

எங்கும் தாமரை மலர்வதை தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு வெளிப்படுத்தியுள்ளது – ஷெசாத் பூனாவாலா

சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு புதிய விதிமுறை – நாளை முதல் அமல்!

பெங்களூரு அரசு மருத்துவமனை சுற்றுச்சுவர் இடிந்த விபத்தில் 7 பேர் பலி – பிரதமர் மோடி இரங்கல்!

கும்பகோணம் சாரங்கபாணி கோயில் தேரோட்டம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு – ஒரு பேரல் 120 டாலராக அதிகரிப்பு!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

டெல்லி மாநகராட்சி மேயர் தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளை பயன்படுத்தியதாக புகார் – விஜய் மீது நடவடிக்கை எடுக்க குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் பரிந்துரை!

3-வது பிரசவத்திற்கும் ஓராண்டு மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம்

உத்தரப்பிரதேச மக்களை இழிவுப்படுத்தும் திமுக போன்ற கட்சிகளுடன் சமாஜ்வாதி கட்சி கூட்டணி – பிரதமர் மோடி

மேற்குவங்க இறுதிகட்ட தேர்தல் – 91.71 % வாக்குகள் பதிவு!

கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி – தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தகவல்!

ஐபிஎல் கிரிக்கெட் – மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் ஹைதராபாத் வெற்றி!

மேற்குவங்கத்தில் பாஜக ஆட்சி – தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தகவல்!

புதுச்சேரியில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி – தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தகவல்!

தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றுகிறது தவெக – ஆக்சிஸ் மை இண்டியா கருத்துக்கணிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies