டெல்லியில் 3 ஐ.எஸ். தீவிரவாதிகள் கைது!
Aug 21, 2025, 07:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டெல்லியில் 3 ஐ.எஸ். தீவிரவாதிகள் கைது!

ரூ.3 லட்சம் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டவர்கள்!

Web Desk by Web Desk
Oct 2, 2023, 01:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேசிய புலனாய்வு முகமையால் ( என்.ஐ.ஏ.) தேடப்பட்டு வந்த ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் ஷாநவாஸ் சஃபி உஸாமா ஆலம் என்கிற அப்துல்லா, ரிஸ்வான் அப்துல் ஹாஜி அலி மற்றும் ஃபயாஸ் ஷேக் ஆகிய 3 பேரை டெல்லி காவல்துறை இன்று கைது செய்திருக்கிறது.

மத்தியப் பிரதேச மாநிலம் ரத்லாமைச் சேர்ந்தவர் ஷாநவாஸ் சஃபி உஸாமா. பொறியியல் பட்டதாரியான இவர், ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு, வட மாநிலங்களில் தீவிரவாத செயல்களை அரங்கேற்றத் திட்டமிட்டிருந்தார். இதற்கு, அவரது நண்பர்களாக முகமது இம்ரான், முகமது யூனுஸ் கான் மற்றும் முகமது யூனுஸ், முகமது யாகூப் சாகி ஆகியோர் உடந்தையாக இருந்திருக்கிறார்கள்.

இவர்கள் கடந்த ஜூலை 18-ம் தேதி தங்களது தீவிரவாத செயலை அரங்கேற்றுவதற்காக, புனேவில் ஒரு இருசக்கர வாகனத்தை திருட முயன்றனர். அப்போது, கோத்ருட் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, கோந்த்வாவில் உள்ள அவர்களின் வீட்டிற்கு காவல்துறையினர் சோதனைக்காக சென்றனர். அப்போது, ஷாநவாஸ் காவல்துறை வாகனத்தில் இருந்து குதித்து தப்பி ஓடிவிட்டார்.

இதைத் தொடர்ந்து, இந்த வழக்கை என்.ஐ.ஏ. விசாரித்து வந்தது. இதன் பிறகு, ஷாநவாஸ் உள்ளிட்ட 4 பேரின் புகைப்படங்களை வெளியிட்ட என்.ஐ.ஏ., மேற்கண்ட நபர்கள் பற்றி தகவல் கொடுத்தால் 3 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது. மேலும், தகவல் அளிப்பவர்களின் பெயர்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தது. இவர்களில் சிலர் கைது செய்யப்பட்ட நிலையில், ஷாநவாஸ் மட்டும் தொடர்ந்து தலைமறைவாகவே இருந்து வந்தார்.

இந்த நிலையில்தான், ஷாநவாஸ், ரிஸ்வான் அப்துல் ஹாஜி அலி மற்றும் ஃபயாஸ் ஷேக் ஆகிய 3 பேரையும் டெல்லி காவல்துறை கைது செய்திருக்கிறது. இவர்களில் ஷாநவாஸ் என்.ஐ.ஏ.வால் தேடப்பட்டு வந்த முக்கியக் குற்றவாளிகளில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களிடமிருந்து ஐ.இ.டி. எனப்படும் அதிபயங்கரமான வெடிபொருட்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பொருட்கள் மற்றும் வெடி மருந்துகள் உள்ளிட்டவற்றையும் காவல்துறயினர் பறிமுதல் செய்திருக்கிறார்கள்.

Tags: 3 terroristArrestDelhi Policeisis
ShareTweetSendShare
Previous Post

மீண்டும் தங்கத்தை வென்ற இந்தியா !

Next Post

திரைப்படங்களில் மகாத்மா காந்தி!

Related News

உள்நாட்டு விமானப் போக்குவரத்து இலவசம் – சுற்றுலா பயணிகளை ஈர்க்க தாய்லாந்து நடவடிக்கை!

நாடாளுமன்றத்தில் தொடர் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சியினர் – அமைச்சர் கிரண் ரிஜிஜு

களியக்காவிளை புதிய பேருந்து நிலைய பணிகளை விரைவுப்படுத்த வேண்டும் – பொதுமக்கள் வலியுறுத்தல்!

இந்திய பொருட்களை வாங்க தயார் : நேசக்கரம் நீட்டிய ரஷ்யா – சிறப்பு கட்டுரை!

கச்சா எண்ணெய் இறக்குமதி தொடர்பான அமெரிக்காவின் குற்றச்சாட்டு – வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மறுப்பு!

உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வருகை தமிழகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

Load More

அண்மைச் செய்திகள்

விழுப்புரம் அருகே நீட் தேர்வில் வென்று மருத்துவ கனவை நனவாக்கிய மாணவி!

தமிழகம் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறுவதைத் தடுக்க தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்!

திருநெல்வேலியில் திரளும் தாமரைச் சொந்தங்களை சந்திக்க பேராவல் கொண்டுள்ளேன் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

மணல் கடத்தலை தடுத்த பெண் விஏஓ மீது வீடு புகுந்து தாக்குதல் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – வெளிமாநில தமிழ் பள்ளிகளுக்கு மீண்டும் பாட நூல்களை வழங்க நடவடிக்கை!

அம்பலமான ராகுலின் போலி முகம் : சொல்வதெல்லாம் பொய் தொட்டதெல்லாம் தோல்வி!

ஆப்கானின் சுற்றுலாத் துறையை மேம்படுத்த influencers-ஐ கொண்டு தாலிபான்கள் விளம்பரம் : ஆபத்தானது என எச்சரிக்கை!

இலங்கை ​யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயில் தேர்த்திருவிழா கோலாகலம்!

எதிர்க்கட்சிகள் அமளி – மக்களவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies