டெல்லியில் 3 ஐ.எஸ். தீவிரவாதிகள் கைது!
Jul 6, 2025, 05:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டெல்லியில் 3 ஐ.எஸ். தீவிரவாதிகள் கைது!

ரூ.3 லட்சம் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டவர்கள்!

Web Desk by Web Desk
Oct 2, 2023, 01:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேசிய புலனாய்வு முகமையால் ( என்.ஐ.ஏ.) தேடப்பட்டு வந்த ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் ஷாநவாஸ் சஃபி உஸாமா ஆலம் என்கிற அப்துல்லா, ரிஸ்வான் அப்துல் ஹாஜி அலி மற்றும் ஃபயாஸ் ஷேக் ஆகிய 3 பேரை டெல்லி காவல்துறை இன்று கைது செய்திருக்கிறது.

மத்தியப் பிரதேச மாநிலம் ரத்லாமைச் சேர்ந்தவர் ஷாநவாஸ் சஃபி உஸாமா. பொறியியல் பட்டதாரியான இவர், ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு, வட மாநிலங்களில் தீவிரவாத செயல்களை அரங்கேற்றத் திட்டமிட்டிருந்தார். இதற்கு, அவரது நண்பர்களாக முகமது இம்ரான், முகமது யூனுஸ் கான் மற்றும் முகமது யூனுஸ், முகமது யாகூப் சாகி ஆகியோர் உடந்தையாக இருந்திருக்கிறார்கள்.

இவர்கள் கடந்த ஜூலை 18-ம் தேதி தங்களது தீவிரவாத செயலை அரங்கேற்றுவதற்காக, புனேவில் ஒரு இருசக்கர வாகனத்தை திருட முயன்றனர். அப்போது, கோத்ருட் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, கோந்த்வாவில் உள்ள அவர்களின் வீட்டிற்கு காவல்துறையினர் சோதனைக்காக சென்றனர். அப்போது, ஷாநவாஸ் காவல்துறை வாகனத்தில் இருந்து குதித்து தப்பி ஓடிவிட்டார்.

இதைத் தொடர்ந்து, இந்த வழக்கை என்.ஐ.ஏ. விசாரித்து வந்தது. இதன் பிறகு, ஷாநவாஸ் உள்ளிட்ட 4 பேரின் புகைப்படங்களை வெளியிட்ட என்.ஐ.ஏ., மேற்கண்ட நபர்கள் பற்றி தகவல் கொடுத்தால் 3 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது. மேலும், தகவல் அளிப்பவர்களின் பெயர்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தது. இவர்களில் சிலர் கைது செய்யப்பட்ட நிலையில், ஷாநவாஸ் மட்டும் தொடர்ந்து தலைமறைவாகவே இருந்து வந்தார்.

இந்த நிலையில்தான், ஷாநவாஸ், ரிஸ்வான் அப்துல் ஹாஜி அலி மற்றும் ஃபயாஸ் ஷேக் ஆகிய 3 பேரையும் டெல்லி காவல்துறை கைது செய்திருக்கிறது. இவர்களில் ஷாநவாஸ் என்.ஐ.ஏ.வால் தேடப்பட்டு வந்த முக்கியக் குற்றவாளிகளில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களிடமிருந்து ஐ.இ.டி. எனப்படும் அதிபயங்கரமான வெடிபொருட்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பொருட்கள் மற்றும் வெடி மருந்துகள் உள்ளிட்டவற்றையும் காவல்துறயினர் பறிமுதல் செய்திருக்கிறார்கள்.

Tags: ArrestDelhi Policeisis3 terrorist
ShareTweetSendShare
Previous Post

மீண்டும் தங்கத்தை வென்ற இந்தியா !

Next Post

திரைப்படங்களில் மகாத்மா காந்தி!

Related News

பாஜகவில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் – வானதி சீனிவாசன்

தலாய் லாமா பிறந்த நாள் – பிரதமர் மோடி வாழ்த்து!

உதகை அருகே சாலையோர பள்ளத்தில் உள்ள வீட்டின் மீது கவிழந்த கார்!

திருப்பத்தூரில் குழந்தை உள்ளிட்ட 8 பேரை கடித்த வெறிநாய் – பொதுமக்கள் அச்சம்!

அலங்காநல்லூர் அருகே சகோதரர்கள் மீது தாக்கும் நடத்திய போலீஸ் – வெளியானது வீடியோ!

பரதநாட்டிய கலைஞர் லித்திகா ஸ்ரீயின் பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சி – அண்ணாமலை பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

வார விடுமுறை – குற்றலா அருவிகளில் ஆனந்த குளியல் போட்ட சுற்றுலா பயணிகள்!

நாமக்கல் அருகே வட்டார போக்குவரத்து அலுவலர், மனைவியுடன் தற்கொலை? – தண்டவாளத்தில் கிடந்த உடல்கள்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து – ஒருவர் பலி!

இஸ்ரேலுக்கு எதிரான போருக்கு பிறகு முதன்முறையாக பொதுவெளியில் தோன்றிய ஈரான் உச்ச தலைவர் கமேனி – மொஹரம் விழாவில் பங்கேற்பு!

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு விழா : 10-ஆம் கால யாகசாலை பூஜை கோலாகலம்!

டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி பிறந்தநாள் – தலைவர்கள் புகழாரம்!

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயில் யாகசாலை பூஜை – திருவாவடுதுறை ஆதீனம் பங்கேற்பு!

ராமநாதபுரம் அருகே கோயில் நில ஆக்கிரமிப்பு தொடர்பான நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும் – பொதுமக்கள் வலியுறுத்தல்!

நெல்லையில் ஆகஸ்ட் 17ம் தேதி தொடங்குகிறது பாஜக முதல் மாநாடு – நயினார் நாகேந்திரன் அறிவிப்பு!

தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் இறுதிப்போட்டி – வெல்லப்போவது யார்?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies