டெல்லியில் 3 ஐ.எஸ். தீவிரவாதிகள் கைது!
Jun 14, 2026, 08:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டெல்லியில் 3 ஐ.எஸ். தீவிரவாதிகள் கைது!

ரூ.3 லட்சம் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டவர்கள்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 2, 2023, 01:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேசிய புலனாய்வு முகமையால் ( என்.ஐ.ஏ.) தேடப்பட்டு வந்த ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் ஷாநவாஸ் சஃபி உஸாமா ஆலம் என்கிற அப்துல்லா, ரிஸ்வான் அப்துல் ஹாஜி அலி மற்றும் ஃபயாஸ் ஷேக் ஆகிய 3 பேரை டெல்லி காவல்துறை இன்று கைது செய்திருக்கிறது.

மத்தியப் பிரதேச மாநிலம் ரத்லாமைச் சேர்ந்தவர் ஷாநவாஸ் சஃபி உஸாமா. பொறியியல் பட்டதாரியான இவர், ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு, வட மாநிலங்களில் தீவிரவாத செயல்களை அரங்கேற்றத் திட்டமிட்டிருந்தார். இதற்கு, அவரது நண்பர்களாக முகமது இம்ரான், முகமது யூனுஸ் கான் மற்றும் முகமது யூனுஸ், முகமது யாகூப் சாகி ஆகியோர் உடந்தையாக இருந்திருக்கிறார்கள்.

இவர்கள் கடந்த ஜூலை 18-ம் தேதி தங்களது தீவிரவாத செயலை அரங்கேற்றுவதற்காக, புனேவில் ஒரு இருசக்கர வாகனத்தை திருட முயன்றனர். அப்போது, கோத்ருட் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, கோந்த்வாவில் உள்ள அவர்களின் வீட்டிற்கு காவல்துறையினர் சோதனைக்காக சென்றனர். அப்போது, ஷாநவாஸ் காவல்துறை வாகனத்தில் இருந்து குதித்து தப்பி ஓடிவிட்டார்.

இதைத் தொடர்ந்து, இந்த வழக்கை என்.ஐ.ஏ. விசாரித்து வந்தது. இதன் பிறகு, ஷாநவாஸ் உள்ளிட்ட 4 பேரின் புகைப்படங்களை வெளியிட்ட என்.ஐ.ஏ., மேற்கண்ட நபர்கள் பற்றி தகவல் கொடுத்தால் 3 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது. மேலும், தகவல் அளிப்பவர்களின் பெயர்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தது. இவர்களில் சிலர் கைது செய்யப்பட்ட நிலையில், ஷாநவாஸ் மட்டும் தொடர்ந்து தலைமறைவாகவே இருந்து வந்தார்.

இந்த நிலையில்தான், ஷாநவாஸ், ரிஸ்வான் அப்துல் ஹாஜி அலி மற்றும் ஃபயாஸ் ஷேக் ஆகிய 3 பேரையும் டெல்லி காவல்துறை கைது செய்திருக்கிறது. இவர்களில் ஷாநவாஸ் என்.ஐ.ஏ.வால் தேடப்பட்டு வந்த முக்கியக் குற்றவாளிகளில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களிடமிருந்து ஐ.இ.டி. எனப்படும் அதிபயங்கரமான வெடிபொருட்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பொருட்கள் மற்றும் வெடி மருந்துகள் உள்ளிட்டவற்றையும் காவல்துறயினர் பறிமுதல் செய்திருக்கிறார்கள்.

Tags: ArrestDelhi Policeisis3 terrorist
ShareTweetSendShare
Previous Post

மீண்டும் தங்கத்தை வென்ற இந்தியா !

Next Post

திரைப்படங்களில் மகாத்மா காந்தி!

Related News

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies