டெல்லியில் 3 ஐ.எஸ். தீவிரவாதிகள் கைது!
Sep 12, 2026, 09:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டெல்லியில் 3 ஐ.எஸ். தீவிரவாதிகள் கைது!

ரூ.3 லட்சம் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டவர்கள்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 2, 2023, 01:40 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தேசிய புலனாய்வு முகமையால் ( என்.ஐ.ஏ.) தேடப்பட்டு வந்த ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் ஷாநவாஸ் சஃபி உஸாமா ஆலம் என்கிற அப்துல்லா, ரிஸ்வான் அப்துல் ஹாஜி அலி மற்றும் ஃபயாஸ் ஷேக் ஆகிய 3 பேரை டெல்லி காவல்துறை இன்று கைது செய்திருக்கிறது.

மத்தியப் பிரதேச மாநிலம் ரத்லாமைச் சேர்ந்தவர் ஷாநவாஸ் சஃபி உஸாமா. பொறியியல் பட்டதாரியான இவர், ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு, வட மாநிலங்களில் தீவிரவாத செயல்களை அரங்கேற்றத் திட்டமிட்டிருந்தார். இதற்கு, அவரது நண்பர்களாக முகமது இம்ரான், முகமது யூனுஸ் கான் மற்றும் முகமது யூனுஸ், முகமது யாகூப் சாகி ஆகியோர் உடந்தையாக இருந்திருக்கிறார்கள்.

இவர்கள் கடந்த ஜூலை 18-ம் தேதி தங்களது தீவிரவாத செயலை அரங்கேற்றுவதற்காக, புனேவில் ஒரு இருசக்கர வாகனத்தை திருட முயன்றனர். அப்போது, கோத்ருட் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, கோந்த்வாவில் உள்ள அவர்களின் வீட்டிற்கு காவல்துறையினர் சோதனைக்காக சென்றனர். அப்போது, ஷாநவாஸ் காவல்துறை வாகனத்தில் இருந்து குதித்து தப்பி ஓடிவிட்டார்.

இதைத் தொடர்ந்து, இந்த வழக்கை என்.ஐ.ஏ. விசாரித்து வந்தது. இதன் பிறகு, ஷாநவாஸ் உள்ளிட்ட 4 பேரின் புகைப்படங்களை வெளியிட்ட என்.ஐ.ஏ., மேற்கண்ட நபர்கள் பற்றி தகவல் கொடுத்தால் 3 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது. மேலும், தகவல் அளிப்பவர்களின் பெயர்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தது. இவர்களில் சிலர் கைது செய்யப்பட்ட நிலையில், ஷாநவாஸ் மட்டும் தொடர்ந்து தலைமறைவாகவே இருந்து வந்தார்.

இந்த நிலையில்தான், ஷாநவாஸ், ரிஸ்வான் அப்துல் ஹாஜி அலி மற்றும் ஃபயாஸ் ஷேக் ஆகிய 3 பேரையும் டெல்லி காவல்துறை கைது செய்திருக்கிறது. இவர்களில் ஷாநவாஸ் என்.ஐ.ஏ.வால் தேடப்பட்டு வந்த முக்கியக் குற்றவாளிகளில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களிடமிருந்து ஐ.இ.டி. எனப்படும் அதிபயங்கரமான வெடிபொருட்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பொருட்கள் மற்றும் வெடி மருந்துகள் உள்ளிட்டவற்றையும் காவல்துறயினர் பறிமுதல் செய்திருக்கிறார்கள்.

Tags: ArrestDelhi Policeisis3 terrorist
Share
Tweet
SendShare
Previous Post

மீண்டும் தங்கத்தை வென்ற இந்தியா !

Next Post

திரைப்படங்களில் மகாத்மா காந்தி!

Related News

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies