பெண்களின் பாதுகாப்பை பா.ஜ.க. உறுதி செய்யும்: பிரதமர் மோடி!
Jan 14, 2026, 05:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பெண்களின் பாதுகாப்பை பா.ஜ.க. உறுதி செய்யும்: பிரதமர் மோடி!

கடந்த 5 ஆண்டுகளில் ராஜஸ்தானை காங்கிரஸ் அழித்து விட்டதாகவும் குற்றச்சாட்டு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 2, 2023, 04:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராஜஸ்தானில் நிகழ்ந்து வரும் குற்றச் சம்பவங்கள் குறித்து தனது வேதனையை வெளிப்டுத்திய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, பெண்களின் பாதுகாப்பை பா.ஜ.க. உறுதி செய்யும். கடந்த 5 ஆண்டுகளில் மாநிலத்தை காங்கிரஸ் அழித்து விட்டது என்று கூறியிருக்கிறார்.

ராஜஸ்தான் மாநிலத்துக்குச் சென்றிருந்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, 7,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர், சித்தோர்கரில் ரோடு ஷோ நடத்திய பிரதமருக்கு கூடியிருந்த மக்கள் வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து, அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசினார்.

அப்போது, “கடந்த 5 ஆண்டுகளில் ராஜஸ்தான் மாநிலத்தை காங்கிரஸ் அழித்து விட்டது. பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளின் எண்ணிக்கை ராஜஸ்தானில்தான் அதிகபட்சமாக இருந்து வருகிறது. குற்றப் பட்டியலில் மற்றும் குற்றச் சம்பவங்களில் எந்த மாநிலம் முதலிடம் வகிக்கிறது? கலவரங்களில் மற்றும் கல் வீச்சு சம்பவங்களில் எந்த மாநிலம் முதலிடம் வகிக்கிறது? ராஜஸ்தான் மாநிலம் முதலிடம் வகிக்கிறது என்பது எனக்கு வேதனை அளிக்கிறது.

பெண்கள் மற்றும் தலித் விரோதப் போக்கில் எந்த மாநிலத்திற்கு மோசமான பெயர் உள்ளது? இதற்காகவா காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்தீர்கள்? ராஜஸ்தானில் பெண்களின் பாதுகாப்பை பா.ஜ.க. உறுதி செய்யும். மேலும், பாரதிய ஜனதா கட்சியால் மட்டுமே ராஜஸ்தானில் அனைத்துத் துறையிலும் வளர்ச்சியைக் கொண்டு வர முடியும். ராஜஸ்தானின் வளர்ச்சியே மத்திய அரசின் மிகப்பெரிய முன்னுரிமை. முதல்வர் அசோக் கெலாட் தனது தோல்வியை இப்போது ஏற்றுக் கொண்டு விட்டார்.

காங்கிரஸின் பிரியாவிடைக்கான கவுன்ட் டவுன் தொடங்கி விட்டதை முதல்வர் அசோக் கெலாட் நன்கு அறிவார். ராஜஸ்தானில் பாஜ.க. ஆட்சி அமைத்த பிறகு மக்கள் நலத் திட்டங்கள் நிறுத்தி வைக்கப்படாமல் செயல்படுத்தப்படும். முதல்வர் கெலாட் தனது பதவியை பாதுகாப்பதில் மும்முரமாக இருந்தார். அவரது கட்சி அவரது பதவியை பறிப்பதில் மும்முரமாக இருந்தது.

ராஜஸ்தான் மாநிலத்தில் தேர்வு வினாத்தாள் கசிவு அதிகம் நடக்கிறது .பாஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு, வினாத்தாள் கசிவு தடுத்து நிறுத்தப்படும் என்று ராஜஸ்தான் இளைஞர்களுக்கு நான் உத்தரவாதம் அளிக்க விரும்புகிறேன். வன்முறையில் ஈடுபடுபவர்களை வெளியேற்றுவோம். கலவரத்தை தடுத்து நிறுத்துவோம். பெண்களுக்குப் பாதுகாப்பு, வேலைவாய்ப்பு ஆகியவற்றை கொண்டு வருவோம். இதன் மூலம் ராஜஸ்தான் மாநிலம் வளர்ச்சி அடையும்” என்றார்.

இக்கூட்டம் நிறைவடைந்த நிலையில், பிரதமர் மோடி மத்தியப் பிரதேச மாநிலத்துக்குப் புறப்பட்டுச் சென்றார்.

Tags: PM ModiSpeechRajasthan
ShareTweetSendShare
Previous Post

முடங்கும் அபாயத்தில் இருந்து தப்பியது அமெரிக்கா!

Next Post

மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies