சத்தீஸ்கரில் ரூ.27,000 கோடி வளர்ச்சித் திட்டங்கள்: பிரதமர் மோடி அடிக்கல்!
Aug 15, 2025, 12:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சத்தீஸ்கரில் ரூ.27,000 கோடி வளர்ச்சித் திட்டங்கள்: பிரதமர் மோடி அடிக்கல்!

தண்டேஸ்வரி கோவிலில் சிறப்பு வழிபாடு!

Web Desk by Web Desk
Oct 3, 2023, 01:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சத்தீஸ்கர் மாநிலத்தில் 27,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, பஸ்தார் பகுதியிலுள்ள தண்டேஸ்வரி கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தினார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல்வர் பூபேஷ் பாகல் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடக்கவிருக்கிறது. இத்தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும், எதிர்கட்சியான பா.ஜ.க.வுக்கும் நேரடிப் போட்டி நிலவுகிறது. இம்மாநிலத்தில் மொத்தமுள்ள 90 சட்டமன்றத் தொகுதிகளில் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க. வெளியிட்டிருக்கிறது. மீதமுள்ள வேட்பாளர்கள் பட்டியில் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்கிறது.

இந்த நிலையில், இன்று சத்தீஸ்கர் மாநிலத்திற்குச் சென்றிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, 27,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி நாட்டுக்கு அர்ப்பணித்திருக்கிறார். மேலும், நாகர்நாரில் 23,800 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட இரும்பு ஆலையையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த எஃகு ஆலை உயர்தர எஃகு உற்பத்தி செய்யும் ஒரு பசுமைத் திட்டமாகும்.

மேலும், துணை மற்றும் கீழ்நிலைத் தொழில்களில் ஆயிரக்கணக்கான மக்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது பஸ்தாரை உலகின் எஃகு வரைபடத்தில் இடம்பிடிக்கச் செய்வதோடு, இப்பகுதியின் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும். மேலும், அந்தகர் மற்றும் தரோகி இடையே புதிய இரயில் பாதையையும், ஜக்தல்பூர் மற்றும் தண்டேவாரா இடையேயான இரயில் பாதை இரட்டிப்பு திட்டத்தையும் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

இது தவிர, போரிடாண்ட் – சூரஜ்பூர் இரயில் பாதை இரட்டிப்புத் திட்டம் மற்றும் அம்ரித் பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் ஜக்தல்பூர் இரயில் நிலையம் மறுசீரமைப்பு ஆகிய திட்டங்களுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அதோடு, தரோகி – ராய்ப்பூர் டெமு இரயில் சேவையையும் பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த இரயில் திட்டங்கள் சத்தீஸ்கரின்
பழங்குடிப் பகுதிகளில் இணைப்பை மேம்படுத்தும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேம்படுத்தப்பட்ட இரயில் உள்கட்டமைப்பு மற்றும் புதிய ரயில் சேவை உள்ளூர் மக்களுக்கு பயனளிப்பதோடு, பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் உதவும்.

மேலும், தேசிய நெடுஞ்சாலை 43-ன் ‘குங்குரியில் இருந்து சத்தீஸ்கர் – ஜார்கண்ட் எல்லைப் பகுதி வரை’ சாலை மேம்படுத்தும் திட்டத்தையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த புதிய சாலையானது சாலை இணைப்பை மேம்படுத்தி, இப்பகுதி மக்களுக்கு பயனளிக்கும்.

Tags: development projectsunveils27000 crorePM ModiChhattisgarh
ShareTweetSendShare
Previous Post

கன்னியாகுமரி மாவட்டத்தில் காற்றுடன் கனமழை!-

Next Post

வங்கி சேவையை உயர்த்தும் தொழில்நுட்பம்!

Related News

பெரம்பலூர் அருகே திமுக எம்பி அருண் நேருவை முற்றுகையிட்ட பெண்கள்!

அமைதி நிறைந்த புதிய உலகத்தை உருவாக்குவது நமது கடமை – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் அழைப்பு!

தீபாவளியின் போது நாட்டு மக்கள் ஒரு பெரிய பரிசு காத்திருக்கிறது – பிரதமர் மோடி

79-வது சுதந்திர தினம் – கோட்டையில் தேசிய கொடி ஏற்றிய முதல்வர் ஸ்டாலின்!

100வது ஆண்டு விழாவை கொண்டாடும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் வரலாற்றை எண்ணி பெருமைப்படுகிறேன் – பிரதமர் மோடி

6 மாதங்களில் 6 போர் நிறுத்தம் – அலாஸ்காவில் ட்ரம்ப் பேட்டி!

Load More

அண்மைச் செய்திகள்

அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அஞ்சாது – பிரதமர் மோடி

திமுக-வின் பச்சை பொய்களைத் தோலுரிக்கும் “சொன்னீங்களே, செஞ்சீங்களா?” கேள்வித் தொடர் – சமூக வலைதளப் பக்கத்தில் தொடங்கும் நயினார் நாகேந்திரன்!

சுதந்திரப் போராட்ட வீரர்களின் துணிச்சலை நினைவு கூர்வோம் – அண்ணாமலை

ஒவ்வொருவரும் இல்லங்களில் தேசிய கொடி ஏற்ற வேண்டும் – நயினார் நாகேந்திரன்

சுதந்திர தின விழா கொண்டாட்டம் – தஞ்சை பெரிய கோயிலில் கூடுதல் பாதுகாப்பு!

சுதந்திர தினம் – குமரியில் போலீசார் தீவிர கண்காணிப்பு!

79-வது சுதந்திர தின விழா – செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றினார் பிரதமர் மோடி!

79-வது சுதந்திர தின விழா – செங்கோட்டையில் மூவர்ண கொடி ஏற்றுகிறார் பிரதமர் மோடி!

பயங்கரவாதத்துக்கு எதிரான வரலாற்று சான்று ஆப்ரேஷன் சிந்தூர் – குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

திமுகவிற்கு வாங்கி தான் பழக்கம்; கொடுத்து பழக்கம் இல்லை – இபிஎஸ் விமர்சனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies