சத்தீஸ்கரில் ரூ.27,000 கோடி வளர்ச்சித் திட்டங்கள்: பிரதமர் மோடி அடிக்கல்!
Mar 15, 2026, 12:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சத்தீஸ்கரில் ரூ.27,000 கோடி வளர்ச்சித் திட்டங்கள்: பிரதமர் மோடி அடிக்கல்!

தண்டேஸ்வரி கோவிலில் சிறப்பு வழிபாடு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 3, 2023, 01:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சத்தீஸ்கர் மாநிலத்தில் 27,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, பஸ்தார் பகுதியிலுள்ள தண்டேஸ்வரி கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தினார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல்வர் பூபேஷ் பாகல் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடக்கவிருக்கிறது. இத்தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும், எதிர்கட்சியான பா.ஜ.க.வுக்கும் நேரடிப் போட்டி நிலவுகிறது. இம்மாநிலத்தில் மொத்தமுள்ள 90 சட்டமன்றத் தொகுதிகளில் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க. வெளியிட்டிருக்கிறது. மீதமுள்ள வேட்பாளர்கள் பட்டியில் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்கிறது.

இந்த நிலையில், இன்று சத்தீஸ்கர் மாநிலத்திற்குச் சென்றிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, 27,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி நாட்டுக்கு அர்ப்பணித்திருக்கிறார். மேலும், நாகர்நாரில் 23,800 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட இரும்பு ஆலையையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த எஃகு ஆலை உயர்தர எஃகு உற்பத்தி செய்யும் ஒரு பசுமைத் திட்டமாகும்.

மேலும், துணை மற்றும் கீழ்நிலைத் தொழில்களில் ஆயிரக்கணக்கான மக்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது பஸ்தாரை உலகின் எஃகு வரைபடத்தில் இடம்பிடிக்கச் செய்வதோடு, இப்பகுதியின் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும். மேலும், அந்தகர் மற்றும் தரோகி இடையே புதிய இரயில் பாதையையும், ஜக்தல்பூர் மற்றும் தண்டேவாரா இடையேயான இரயில் பாதை இரட்டிப்பு திட்டத்தையும் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

இது தவிர, போரிடாண்ட் – சூரஜ்பூர் இரயில் பாதை இரட்டிப்புத் திட்டம் மற்றும் அம்ரித் பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் ஜக்தல்பூர் இரயில் நிலையம் மறுசீரமைப்பு ஆகிய திட்டங்களுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அதோடு, தரோகி – ராய்ப்பூர் டெமு இரயில் சேவையையும் பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த இரயில் திட்டங்கள் சத்தீஸ்கரின்
பழங்குடிப் பகுதிகளில் இணைப்பை மேம்படுத்தும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேம்படுத்தப்பட்ட இரயில் உள்கட்டமைப்பு மற்றும் புதிய ரயில் சேவை உள்ளூர் மக்களுக்கு பயனளிப்பதோடு, பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் உதவும்.

மேலும், தேசிய நெடுஞ்சாலை 43-ன் ‘குங்குரியில் இருந்து சத்தீஸ்கர் – ஜார்கண்ட் எல்லைப் பகுதி வரை’ சாலை மேம்படுத்தும் திட்டத்தையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த புதிய சாலையானது சாலை இணைப்பை மேம்படுத்தி, இப்பகுதி மக்களுக்கு பயனளிக்கும்.

Tags: PM ModiChhattisgarhdevelopment projectsunveils27000 crore
ShareTweetSendShare
Previous Post

கன்னியாகுமரி மாவட்டத்தில் காற்றுடன் கனமழை!-

Next Post

வங்கி சேவையை உயர்த்தும் தொழில்நுட்பம்!

Related News

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies