வங்கி சேவையை உயர்த்தும் தொழில்நுட்பம்!
Sep 12, 2026, 02:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வங்கி சேவையை உயர்த்தும் தொழில்நுட்பம்!

Murugesan M by Murugesan M
Oct 3, 2023, 01:46 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தியாவில் டிஜிட்டல் மயமாக்கல், வங்கிச் சேவைக்கு புதிய பரிணாமத்தை வழங்கியுள்ளது. 97 சதவீத இளம் வாடிக்கையாளர்களை மொபைல் பேங்கிங் சேவை கவர்ந்துள்ளது.

வங்கிகளில் கணக்கு தொடங்க வேண்டுமெனில், முன்பெல்லாம் நீண்ட வரிசையிலும், அதிக நாட்களும் காத்திருக்க வேண்டும். வங்கி அறிக்கை அல்லது கடன் அனுமதிக்காகவும் காத்திருக்க வேண்டும். இந்த தாமதங்கள் தவிர்க்கப்பட்டிருப்பதோடு, ஒவ்வொரு செயல்பாட்டிலும் துல்லியத்தன்மையும் வெளிப்படைத் தன்மையும் அதிகரித்திருக்கின்றன.

செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி, வங்கிகள் விரைந்து செயல்படுகின்றன. வாடிக்கையாளரின் இணையவழித் தேடுதலை அடியொற்றி, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம், வங்கிக்கு போதுமான உள்ளடக்கத்தை வழங்கி, அந்த வாடிக்கையாளருக்குச் சிறப்பான சேவையை வழங்க உதவுகின்றன. புதிய வாடிக்கையாளரை ஈர்க்கவும் இத்தொழில்நுட்பம் பயன்படுகிறது.

வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட வங்கி என்ற இலக்கை நிறைவேற்ற, என்.எல்.பி. போன்ற தொழில்நுட்பங்கள் உதவுகின்றன. வாடிக்கையாளர்களின் எழுத்து வடிவ கேள்விகளுக்கு ரோபோட்டுகள் பதிலளிக்கின்றன.

இந்தியாவில் டிஜிட்டல் மயமாக்கல் வங்கிச் சேவைக்கு புதிய பரிணாமத்தை வழங்கியுள்ளது. 97 சதவீத இளம் வாடிக்கையாளர்களை மொபைல் பேங்கிங் சேவை கவர்ந்துள்ளது.

கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள், மொபைல் வாலட்டுகள், மூன்றாம் நபர் பண பரிமாற்றச் செயலிகள், மொபைல் செயலிகள் ஆகியவற்றின் பயன்பாடு கணக்கிட முடியாத அளவுக்குப் பெருகி வருகிறது. டிஜிட்டல் மயமாக்கல் மூலம் மற்றத்துறைகளை விட வங்கித்துறை கூடுதல் பலன் பெற்றிருக்கிறது.

அடுத்த இரண்டு ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், பிளாக்செயின், ஐ.ஓ.டி., போன்றவை, வங்கிச் சேவையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதன் மூலம் மோசடிகளைக் கண்டறிதல், வாடிக்கையாளர் சேவை, நிதிப் பகுப்பாய்வு போன்றவற்றில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் சிறந்த சேவைகளை வழங்கும்.

பிளாக்செயின் தொழில்நுட்பமானது பணப் பரிவர்த்தனைகளைப் பாதுகாப்பாக மற்றும் வெளிப்படையாக பின்தொடரவும், தேவையற்ற தலையீடுகளைக் குறைக்கவும் பயன்படுத்தப்படும்.

பயோமெட்ரிக்ஸ் தொழில்நுட்பமானது இணையவழி வங்கிச் சேவைகளில் பாதுகாப்பை அதிகரிக்கவும், கடவுச் சொல் பயன்பாடுகளைக் குறைக்கவும், விரல் ரேகை மற்றும் முக அடையாளமறிதல் வங்கிகள் பயன்படுத்தும்.

மொபைல் வழி பரிவர்த்தனைகளானது ஏற்கெனவே பயன்பாட்டில் இருந்தாலும், இன்னும் எளிதாக்கவும், பாதுகாப்பை அதிகரிக்கவும் பயன்படும்.

மெய்நிகர் மற்றும் ஆகுமென்டட் ரியாலிட்டி தொழில்நுட்பமானது பயிற்சி, வாடிக்கையாளர் சேவை, மார்க்கெட்டிங் துறைகளில் மாற்றத்தை ஏற்படுத்தும்.

ஐ.ஓ.டி. தொழில்நுட்பமானது சென்சார்கள் மற்றும் இதர உபகரணங்களை வங்கிக் கருவிகளில் இணைப்பதன் வாயிலாக, புதிய வழிமுறைகளின் வாயிலாக நிதிச் சொத்துகளை பராமரிக்கவும் மேற்பார்வை செய்யவும் பயன்படும்.

வங்கித் துறையில் தொழில்நுட்பங்களின் பயன்பாடானது, பரிணாம வளர்ச்சி பெற்று, தொடர்ந்து விரிவடைந்து, வங்கிகளின் திறனை மேம்படுத்தும்.

Tags: block chain technologybanking
Share
Tweet
SendShare
Previous Post

சத்தீஸ்கரில் ரூ.27,000 கோடி வளர்ச்சித் திட்டங்கள்: பிரதமர் மோடி அடிக்கல்!

Next Post

சனாதன தர்மம் ஒன்றே மதம்: உ.பி. முதல்வர் யோகி!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies