சனாதன தர்மம் ஒன்றே மதம்: உ.பி. முதல்வர் யோகி!
Jul 28, 2026, 08:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சனாதன தர்மம் ஒன்றே மதம்: உ.பி. முதல்வர் யோகி!

மற்றவைகள் எல்லாம் வழிபாட்டு முறைகள் மட்டுமே!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 3, 2023, 01:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று தி.மு.க. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியிருந்த நிலையில், சனாதன தர்மம் ஒன்றே மதம். மற்றவை அனைத்தும் வழிபாட்டு முறைகள் மட்டுமே என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியிருக்கிறார்.

மஹந்த் திக் விஜய் நாத்தின் 54-வது நினைவு தினம் மற்றும் தேசியத் துறவி மஹந்த் அவைத்ய நாத்தின் 9-வது நினைவு தினம் ஆகியவற்றை நினைவுகூரும் வகையில், உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள கோரக்நாத் கோவிலில் ‘ஸ்ரீமத் பகவத் கதா ஞான யாகம்’ கடந்த 7 நாட்கள் நடைபெற்றது. இதன் நிறைவு நாள் நிகழ்ச்சியில் பேசிய அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், “சனாதன தர்மம் மட்டுமே மதம். மற்ற அனைத்துப் பிரிவுகளும் வழிபாட்டு முறைகள் மட்டுமே. சனாதனம் மனித குலத்தின் மதம். அது தாக்கப்பட்டால் உலகம் முழுவதும் மனிதகுலத்திற்கான நெருக்கடி ஏற்படும்” என்றார்.

மேலும், அவர் பேசுகையில், “பகவத்தின் கதை எல்லையற்றது. குறிப்பிட்ட நாட்கள் அல்லது குறிப்பிட்ட மணி நேரங்களுக்குள் அதை முடித்து விட முடியாது. பகவத்தின் சாரத்தை பக்தர்கள் தங்களது வாழ்க்கையில் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். நாட்டின் மற்றும் சமூகத்தின் தேவைகள்தான் ஒரு துறவியின் முன்னுரிமை. மஹந்த் திக் விஜய் நாத் அப்படிப்பட்ட ஒரு துறவி. அவர் தனது காலத்தின் சவால்களை எதிர்த்துப் போராடினார்.

மஹந்த் திக் விஜய் நாத் ராஜஸ்தானின் மேவாரில் உள்ள ராணா குலத்தைச் சேர்ந்தவர். நாட்டின் சுயமரியாதைக்காகப் போராடும்போது தாய்நாட்டிற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர். சமய மற்றும் அரசியல் சடங்குகளில் ஈடுபட்டு சமுதாயத்திற்கு புதிதாக ஏதாவது செய்ய முயன்றார். மஹந்த் திக் விஜய் நாத், கோரக்ஷ்பீத்தில் சேர்ந்த பிறகு, முதலில் கல்விக்கு முக்கியத்துவம் அளித்து, மகாராணா பிரதாப் கல்வி கவுன்சிலை நிறுவினார்.

இளம் தலைமுறையினர் மத்தியில் தேசிய உணர்வை தூண்டுவதற்காக, அவர் தனது நிறுவனங்களை விரிவுபடுத்தினார். அவரால் நிறுவப்பட்ட கல்விக் கவுன்சில் ஒரு பல்கலைக்கழகத்தையே நிறுவி இருக்கிறது. தவிர, 48 கல்விப் பயிற்சி நிறுவனங்களை நிறுவி, நாடு மற்றும் சமூகம் தொடர்பான சவால்களைச் சமாளிக்க இளம் தலைமுறையினரை தயார்படுத்தும் பணியை மேற்கொண்டு வருகிறது” என்றார்.

Tags: sanatana dharmaonly religionuttar pradeshYogi Adityanath
ShareTweetSendShare
Previous Post

வங்கி சேவையை உயர்த்தும் தொழில்நுட்பம்!

Next Post

கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

Related News

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies