வங்கி சேவையை உயர்த்தும் தொழில்நுட்பம்!
Aug 15, 2025, 03:42 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வங்கி சேவையை உயர்த்தும் தொழில்நுட்பம்!

Web Desk by Web Desk
Oct 3, 2023, 01:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவில் டிஜிட்டல் மயமாக்கல், வங்கிச் சேவைக்கு புதிய பரிணாமத்தை வழங்கியுள்ளது. 97 சதவீத இளம் வாடிக்கையாளர்களை மொபைல் பேங்கிங் சேவை கவர்ந்துள்ளது.

வங்கிகளில் கணக்கு தொடங்க வேண்டுமெனில், முன்பெல்லாம் நீண்ட வரிசையிலும், அதிக நாட்களும் காத்திருக்க வேண்டும். வங்கி அறிக்கை அல்லது கடன் அனுமதிக்காகவும் காத்திருக்க வேண்டும். இந்த தாமதங்கள் தவிர்க்கப்பட்டிருப்பதோடு, ஒவ்வொரு செயல்பாட்டிலும் துல்லியத்தன்மையும் வெளிப்படைத் தன்மையும் அதிகரித்திருக்கின்றன.

செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி, வங்கிகள் விரைந்து செயல்படுகின்றன. வாடிக்கையாளரின் இணையவழித் தேடுதலை அடியொற்றி, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம், வங்கிக்கு போதுமான உள்ளடக்கத்தை வழங்கி, அந்த வாடிக்கையாளருக்குச் சிறப்பான சேவையை வழங்க உதவுகின்றன. புதிய வாடிக்கையாளரை ஈர்க்கவும் இத்தொழில்நுட்பம் பயன்படுகிறது.

வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட வங்கி என்ற இலக்கை நிறைவேற்ற, என்.எல்.பி. போன்ற தொழில்நுட்பங்கள் உதவுகின்றன. வாடிக்கையாளர்களின் எழுத்து வடிவ கேள்விகளுக்கு ரோபோட்டுகள் பதிலளிக்கின்றன.

இந்தியாவில் டிஜிட்டல் மயமாக்கல் வங்கிச் சேவைக்கு புதிய பரிணாமத்தை வழங்கியுள்ளது. 97 சதவீத இளம் வாடிக்கையாளர்களை மொபைல் பேங்கிங் சேவை கவர்ந்துள்ளது.

கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள், மொபைல் வாலட்டுகள், மூன்றாம் நபர் பண பரிமாற்றச் செயலிகள், மொபைல் செயலிகள் ஆகியவற்றின் பயன்பாடு கணக்கிட முடியாத அளவுக்குப் பெருகி வருகிறது. டிஜிட்டல் மயமாக்கல் மூலம் மற்றத்துறைகளை விட வங்கித்துறை கூடுதல் பலன் பெற்றிருக்கிறது.

அடுத்த இரண்டு ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், பிளாக்செயின், ஐ.ஓ.டி., போன்றவை, வங்கிச் சேவையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதன் மூலம் மோசடிகளைக் கண்டறிதல், வாடிக்கையாளர் சேவை, நிதிப் பகுப்பாய்வு போன்றவற்றில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் சிறந்த சேவைகளை வழங்கும்.

பிளாக்செயின் தொழில்நுட்பமானது பணப் பரிவர்த்தனைகளைப் பாதுகாப்பாக மற்றும் வெளிப்படையாக பின்தொடரவும், தேவையற்ற தலையீடுகளைக் குறைக்கவும் பயன்படுத்தப்படும்.

பயோமெட்ரிக்ஸ் தொழில்நுட்பமானது இணையவழி வங்கிச் சேவைகளில் பாதுகாப்பை அதிகரிக்கவும், கடவுச் சொல் பயன்பாடுகளைக் குறைக்கவும், விரல் ரேகை மற்றும் முக அடையாளமறிதல் வங்கிகள் பயன்படுத்தும்.

மொபைல் வழி பரிவர்த்தனைகளானது ஏற்கெனவே பயன்பாட்டில் இருந்தாலும், இன்னும் எளிதாக்கவும், பாதுகாப்பை அதிகரிக்கவும் பயன்படும்.

மெய்நிகர் மற்றும் ஆகுமென்டட் ரியாலிட்டி தொழில்நுட்பமானது பயிற்சி, வாடிக்கையாளர் சேவை, மார்க்கெட்டிங் துறைகளில் மாற்றத்தை ஏற்படுத்தும்.

ஐ.ஓ.டி. தொழில்நுட்பமானது சென்சார்கள் மற்றும் இதர உபகரணங்களை வங்கிக் கருவிகளில் இணைப்பதன் வாயிலாக, புதிய வழிமுறைகளின் வாயிலாக நிதிச் சொத்துகளை பராமரிக்கவும் மேற்பார்வை செய்யவும் பயன்படும்.

வங்கித் துறையில் தொழில்நுட்பங்களின் பயன்பாடானது, பரிணாம வளர்ச்சி பெற்று, தொடர்ந்து விரிவடைந்து, வங்கிகளின் திறனை மேம்படுத்தும்.

Tags: bankingblock chain technology
ShareTweetSendShare
Previous Post

சத்தீஸ்கரில் ரூ.27,000 கோடி வளர்ச்சித் திட்டங்கள்: பிரதமர் மோடி அடிக்கல்!

Next Post

சனாதன தர்மம் ஒன்றே மதம்: உ.பி. முதல்வர் யோகி!

Related News

’தலைவன் தலைவி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ஹைதராபாத்தில் உரிய ஆவணங்களின்றி, தங்கியிருந்த பாகிஸ்தானை சேர்ந்தவர் கைது!

தேசியக் கொடியை ஏற்றிய முதலமைச்சர் ரங்கசாமி!

சீனா : யாங் லியு புயலால் வெள்ளக்காடாக காட்சியளிக்கும் நகரம்!

குற்றால அருவிகளில் குளிக்க தடை – சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்!

ஜம்மு காஷ்மீர் : கிஷ்துவார் மாவட்டத்தில் மேக வெடிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

உலகம் முழுவதும் முதல் நாளில் மட்டும் ரூ.151 கோடியை வசூலித்த கூலி!

அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அஞ்சாது : பிரதமர் மோடி

இல்லத்தில் தேசிய கொடியை ஏற்றினார் எல். முருகன்!

பெற்றோரிடம் பாசம் காட்டினால் ஒரு லட்சம் ரூபாய் பரிசு – பாசமழை பொழிந்துள்ள அசாம் அரசு!

ரஷ்யாவில் அடுக்குமாடி கட்டடம் மீது ட்ரோன் தாக்குதல் நடத்திய உக்ரைன்!

அடிப்படை வசதி இல்லாததால் வாழ தகுதியற்றதாக மாறிய கிராமம்!

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 15 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

மீண்டும் கையேந்தும் அவலம் : IMF- நிபந்தனைகளை நிறைவேற்ற தவறிய பாகிஸ்தான்!

சின்சினாட்டி டென்னிஸ் – சின்னர், அட்மேன் அரையிறுதிக்கு தகுதி!

‘ரூட்’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies