கே.சி.ஆரை கூட்டணியில் சேர்க்க மறுத்து விட்டேன்: பிரதமர் மோடி!
Jun 6, 2025, 08:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கே.சி.ஆரை கூட்டணியில் சேர்க்க மறுத்து விட்டேன்: பிரதமர் மோடி!

பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் பி.ஆர்.எஸ். அரசின் ஊழலை அம்பலப்படுத்துவோம் என்றும் சூளுரை!

Web Desk by Web Desk
Oct 3, 2023, 07:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தெலங்கானாவில் 8,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி, அம்மாநில முதல்வர் கே.சந்திரசேகர ராவ் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய விரும்பியதாகவும், ஆனால், தான் மறுத்துவிட்டதாகவும் கூறியிருக்கிறார்.

கடந்த 1-ம் தேதி தெலங்கானா மாநிலத்துக்குப் பயணம் மேற்கொண்ட பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, 13,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இந்த நிலையில், இன்று மீண்டும் தெலங்கானா சென்ற பிரதமர் மோடி, 8,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், சூப்பர் தெர்மல் பவர் திட்டத்தின் முதல் அலகையும் திறந்து வைத்தார். அப்போது, 2016-ம் ஆண்டு தான் அடிக்கல் நாட்டிய திட்டத்தை தற்போது தானே திறந்து வைப்பதாக பெருமிதம் அடைந்தார்.

இதைத் தொடர்ந்து, அம்மாநிலத்தின் நிஜாமாபாத் நகரில் நடந்த பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “இதுவரை கூறாத ரகசியத்தைக் கூறப்போகிறேன்” என்று சஸ்பென்ஸ் வைத்தபடியே பேச்சைத் தொடங்கினார். “ஐதராபாத் மாநகராட்சித் தேர்தலில் பா.ஜ.க. 48 இடங்களில் வெற்றிபெற்றதும், ​​மாநில முதல்வர் கே.சந்திரசேகர ராவுக்கு பா.ஜ.கவின் ஆதரவு தேவைப்பட்டது. இத்தேர்தலுக்கு முன்பு விமான நிலையத்தில் என்னை வரவேற்றார். ஆனால், அதன் பிறகு திடீரென நிறுத்தி விட்டார்.

டெல்லியில் என்னைச் சந்திக்க வந்த கே.சி.ஆர்., உங்கள் தலைமையில் நாடு முன்னேறி வருகிறது என்று சொல்லத் தொடங்கினார். மேலும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர விரும்புவதாகவும் கூறியவர், அவருக்கு ஆதரவளிக்குமாறும் கேட்டுக் கொண்டார். ஆனால், அவரது மோசமான ஆட்சி மற்றும் அரசியல் செயல்பாடுகளால், அவருடன் பழக முடியாது என்று நான் கே.சி.ஆரிடம் கூறிவிட்டேன். மேலும், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நான் அவரை சேர்க்கவும் மறுத்து விட்டேன். காரணம், தெலங்கானா மக்களை பா.ஜ.க.வால் ஏமாற்ற முடியாது.

அதோடு, 2020 டிசம்பரில் ஐதராபாத் மாநகராட்சித் தேர்தலில் பா.ஜ.க. வென்ற 48 இடங்கள் தெலங்கானாவின் தலைவிதியை மாற்றுவதற்கான செயல்முறையின் தொடக்கமாகும். இதன் பிறகும், கே.சந்திரசேகர் ராவ் மீண்டும் என்னை அணுகி, தனது மகன் கே.டி.ராமராவிடம் (கே.டி.ஆர்.) அனைத்து “கரோபார்”களையும் ஒப்படைக்கப் போவதாகவும், என்னுடைய ஆசிர்வாதத்தைக் கோருவதாகவும் கூறினார்.

ஆனால் நான், இது ஜனநாயகம் என்றும், அவரது வாரிசை தெலங்கானா மக்கள்தான் முடிவு செய்வார்கள் என்றும் கே.சி.ஆரிடம் கூறிவிட்டேன். கே.சி.ஆர். ஒன்றும் முடிவெடுக்கும் அரசன் கிடையாது. இதன் காரணமாக, கே.சி.ஆர். எனது நிகழ்ச்சிகளை தொடர்ந்து புறக்கணித்து வருகிறார். அதேசமயம், நான் சொல்வது என்னவென்றால், ஊழல் பெருச்சாலிகளால் எனது அருகில் உட்கார முடியாது என்பதுதான். பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் பி.ஆர்.எஸ். அரசின் ஊழலை அம்பலப்படுத்துவோம்” என்று கூறினார்.

Tags: PM ModiTelangana
ShareTweetSendShare
Previous Post

குமரியில் கனமழை: ஆறுகளில் வெள்ளப்பெருக்கு!

Next Post

நியூஸ் கிளிக் அலுவலகத்திற்கு டெல்லி காவல்துறை சீல்!

Related News

கொச்சி அருகே மூழ்கிய கப்பலில் உள்ள கண்டெய்னர்களில் இருந்த பொருட்களின் பட்டியல் வெளியீடு!

பஹல்காம் தாக்குதலுக்கு காரணமானவர்களுக்கு தண்டனை அளித்த முப்படை – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன்பகவத்

ஆந்திராவில் இருந்து கிருஷ்ணகிரிக்கு தப்பி செல்ல முயற்சி – கொள்ளை கும்பல் மீது போலீஸ் துப்பாக்கிச்சூடு!

கும்பகோணம் பாணபுரிஸ்வரர் கோவிலில் ஆகமம் பயிலாமல் அபிஷேகம் செய்த விவகாரம் – அமைச்சர் சேகர்பாபு விளக்கம்!

மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்ற அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

தனது பெயர் மற்றும் குடும்ப பெயரை பயன்படுத்தி பண மோசடி – அக்ஷரா ஹாசன் குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

ஷிம்லா ஒப்பந்தம் இறந்துபோன ஆவணம் – பாக். அமைச்சர் மீண்டும் சர்ச்சை பேச்சு!

சீனாவில் நூற்றாண்டு பழமையான கட்டடங்கள் இடமாற்றம்!

ட்ரம்ப், ஜி ஜின்பிங் தொலைபேசியில் பேச்சு – வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக ஆலோசனை!

ஃபிளிப்கார்ட் நிறுவனத்திற்கு வங்கி அல்லாத நிதி நிறுவன உரிமை – ரிசர்வ் வங்கி அனுமதி!

உலகின் மிக உயரமான செனாப் ரயில் பாலம் – இன்று திறந்த வைக்கிறார் பிரதமர் மோடி!

மாநிலங்களவை தேர்தல் – அதிமுக, திமுக, ம.நீ.ம வேட்பாளர்கள் இன்று வேட்பு மனுத்தாக்கல்!

கோயில் திருவிழா தொடர்பான சர்ச்சை பேச்சு – அமைச்சர் மனோ தங்கராஜுக்கு அண்ணாமலை கண்டனம்!

பெங்களூருவில் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியான விவகாரம் – அறிக்கை தாக்கல் செய்ய கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவு!

பெங்களூருவில் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த விவகாரம் – காவல் ஆணையர் உள்ளிட்ட 5 பேர் சஸ்பெண்ட்!

அடித்து தூக்கும் இந்தியா : பிரம்மோஸ் தொடர்ந்து 155 MM பீரங்கி குண்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies