பழனியில் கோவில் ஊழியர் - பக்தர் மோதல் – நடந்தது என்ன?
Jul 23, 2025, 09:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பழனியில் கோவில் ஊழியர் – பக்தர் மோதல் – நடந்தது என்ன?

Web Desk by Web Desk
Oct 5, 2023, 02:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புகழ் பெற்ற பழனிமலையில், சுவாமி தரிசனம் செய்வது தொடர்பாகத் திருக்கோவில் ஊழியர்களுக்கும், பக்தர் ஒருவருக்கும் இடையே நிகழ்ந்த மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முருகனின் அறுபடை வீடுகளில் பழனி முருகன் திருக்கோவில் மூன்றாவது படை வீடாகப் போற்றப்படுகிறது. இந்தக் கோவில் சுமார் இரண்டு ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த மிகவும் பிரசித்தி பெற்ற திருக்கோவிலாகும்.

இந்தத் தலத்தின் மூலவர் நவபாஷானத்தால் ஆனவர். போகர் என்ற சித்தர், இந்த தலத்தின் மூலவரைப் பிரதிஷ்டை செய்துள்ளார். உற்சவராக முத்துகுமாரசாமி அருள் பாலித்து வருகிறார்.

இப்படி சிறப்பு வாய்ந்த பழனி முருகன் மலைக்கோவில், தரை மட்டத்திலிருந்து 450 அடி உயரத்தில் உள்ளது. பக்தர்கள் 690 படிகள் கடந்து திருக்கோவிலுக்குச் செல்ல வேண்டும். பழனிக்கு ஆவினன்குடி, தென்பொதிகை என்ற சிறப்புப் பெயர்களும் உண்டு.

இந்த திருக்கோவிலுக்கு, தமிழகம் மட்டுமல்லாது, கேரளா உள்ளிட்ட பல்வேறு வெளி மாநில பக்தர்களும் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த திருக்கோவில் காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு, இரவு 9 மணிக்கு நடை சாத்தப்படும்.

இந்த நிலையில், கிருத்திகை தினத்தையொட்டி, இரவு 9 மணிக்கு மேல் தனது குடும்பத்தினருடன் வந்த திருப்பூரைச் சேர்ந்த பக்தர், சுவாமி தரிசனம் செய்ய முயன்றுள்ளார். ஆனால், இரவு 9 மணிக்குமேல் மலைமேல் செல்ல அனுமதி இல்லை. மேலும், இரவு 9 மணிக்கு திருக்கோவில் நடைசாத்தப்படும் எனக் கோவில்ஊழியர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனால், இருதரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் முற்றி கைகலப்பில் முடிந்துள்ளது. இதனால், தாக்குதல் நடத்திய பக்தரைக் காவல் நிலையத்தில் ஒப்படைக்க திருக்கோவில் ஊழியர்கள் முயன்றுள்ளனர். இதனால், மோதல் மேலும் வலுவடைந்துள்ளது.

இது தொடர்பாகத் தகவல் அறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு வந்து கோவில் ஊழியர்கள் மற்றும் மோதலில் ஈடுபட்ட பக்தரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags: Palani Murugan
ShareTweetSendShare
Previous Post

மகளிர் இட ஒதுக்கீட்டை வள்ளலார் பாராட்டி இருப்பார்: பிரதமர் மோடி!

Next Post

12 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் திடீர் மாற்றம் – எந்த பதவியில் யார்-யார்?

Related News

அசுத்தமாக குடிநீர் வருவதாக முறையிட்ட மக்கள் – தண்ணீர் பாட்டிலை பிடுங்கி எறிந்த திமுக எம்எல்ஏ!

கடலூரில் சட்ட விரோத கருக்கலைப்பு தொடர்பாக 6 பேர் கைது!

மதுரை மாநகராட்சி சொத்துவரி முறைகேடு – விசாரணை குழுத் தலைவராக டிஐஜி அபினவ் குமார் நியமனம்!

4 நாள் அரசுமுறைப் பயணம் – பிரிட்டன், மலாத்தீவு நாடுகளுக்கு செல்கிறார் பிரதமர் மோடி!

சாலை வசதி இல்லாததால் உயிரிழந்தவரின் உடலை தொட்டில் கட்டி தூக்கி செல்லும் அவலம் – அண்ணாமலை கண்டனம்!

50 மாத கால ஆட்சியில் விவசாயிகளுக்கு திமுக அரசு செய்தது என்ன? இபிஎஸ் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

இடமாற்றத்தில் மகிழ்ச்சி இல்லை, நல்ல நினைவுகளுடன் செல்கிறேன் – நீதிபதி விவேக் குமார் சிங்

சிறுவன் கடத்தல் வழக்கு – விசாரணை முறையாக நடைபெறவில்லை என்றால் சிபிஐக்கு மாற்ற நேரிடும் என உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு – அப்ரூவராக மாறுவதாக முன்னாள் காவல் ஆய்வாளர் மனுத்தாக்கல்!

மழை காரணமாக தக்காளி விளைச்சல் பாதிப்பு – விலை உயர்வு!

ஆய்வுக்கு உரிய ஒத்துழைப்பு வழங்காத பட்டாசு ஆலைகளை தற்காலிகமாக மூடலாம் – தென்மண்டல பசுமை தீர்ப்பாயம்

விரிவாக்கம் செய்யப்பட்ட பிரதமர் பங்கேற்கும் தூத்துக்குடி விமான நிலைய திறப்பு விழா – பணிகள் தீவிரம்

100 நாள் வேலை திட்டம் – தமிழகத்தில் 3 ஆண்டுகளில் 19,000 போலி கணக்குகள் நீக்கம்!

அஜித்குமார் கொலை வழக்கு – தனியார் மருத்துவமனையில் சிபிஐ விசாரணை!

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பாகிஸ்தான் அதிபராகும் அசிம் முனீர் ? : முஷாரப் பாணியில் ஆட்சி – இந்தியாவிற்கான சவால் என்ன?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies