பழனியில் கோவில் ஊழியர் - பக்தர் மோதல் – நடந்தது என்ன?
Sep 13, 2026, 03:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பழனியில் கோவில் ஊழியர் – பக்தர் மோதல் – நடந்தது என்ன?

Murugesan M by Murugesan M
Oct 5, 2023, 02:25 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

புகழ் பெற்ற பழனிமலையில், சுவாமி தரிசனம் செய்வது தொடர்பாகத் திருக்கோவில் ஊழியர்களுக்கும், பக்தர் ஒருவருக்கும் இடையே நிகழ்ந்த மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முருகனின் அறுபடை வீடுகளில் பழனி முருகன் திருக்கோவில் மூன்றாவது படை வீடாகப் போற்றப்படுகிறது. இந்தக் கோவில் சுமார் இரண்டு ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த மிகவும் பிரசித்தி பெற்ற திருக்கோவிலாகும்.

இந்தத் தலத்தின் மூலவர் நவபாஷானத்தால் ஆனவர். போகர் என்ற சித்தர், இந்த தலத்தின் மூலவரைப் பிரதிஷ்டை செய்துள்ளார். உற்சவராக முத்துகுமாரசாமி அருள் பாலித்து வருகிறார்.

இப்படி சிறப்பு வாய்ந்த பழனி முருகன் மலைக்கோவில், தரை மட்டத்திலிருந்து 450 அடி உயரத்தில் உள்ளது. பக்தர்கள் 690 படிகள் கடந்து திருக்கோவிலுக்குச் செல்ல வேண்டும். பழனிக்கு ஆவினன்குடி, தென்பொதிகை என்ற சிறப்புப் பெயர்களும் உண்டு.

இந்த திருக்கோவிலுக்கு, தமிழகம் மட்டுமல்லாது, கேரளா உள்ளிட்ட பல்வேறு வெளி மாநில பக்தர்களும் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த திருக்கோவில் காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு, இரவு 9 மணிக்கு நடை சாத்தப்படும்.

இந்த நிலையில், கிருத்திகை தினத்தையொட்டி, இரவு 9 மணிக்கு மேல் தனது குடும்பத்தினருடன் வந்த திருப்பூரைச் சேர்ந்த பக்தர், சுவாமி தரிசனம் செய்ய முயன்றுள்ளார். ஆனால், இரவு 9 மணிக்குமேல் மலைமேல் செல்ல அனுமதி இல்லை. மேலும், இரவு 9 மணிக்கு திருக்கோவில் நடைசாத்தப்படும் எனக் கோவில்ஊழியர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனால், இருதரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் முற்றி கைகலப்பில் முடிந்துள்ளது. இதனால், தாக்குதல் நடத்திய பக்தரைக் காவல் நிலையத்தில் ஒப்படைக்க திருக்கோவில் ஊழியர்கள் முயன்றுள்ளனர். இதனால், மோதல் மேலும் வலுவடைந்துள்ளது.

இது தொடர்பாகத் தகவல் அறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு வந்து கோவில் ஊழியர்கள் மற்றும் மோதலில் ஈடுபட்ட பக்தரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags: Palani Murugan
Share
Tweet
SendShare
Previous Post

மகளிர் இட ஒதுக்கீட்டை வள்ளலார் பாராட்டி இருப்பார்: பிரதமர் மோடி!

Next Post

12 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் திடீர் மாற்றம் – எந்த பதவியில் யார்-யார்?

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies