வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிக்கிமுக்கு சுமார் 45 கோடி : மத்திய அரசு!
Sep 10, 2025, 01:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிக்கிமுக்கு சுமார் 45 கோடி : மத்திய அரசு!

Web Desk by Web Desk
Oct 6, 2023, 12:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிக்கிம் மாநிலத்திற்கு சுமார் 45 கோடி ரூபாய் பேரிடர் நிவாரண நிதி வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

சிக்கிம் மாநிலத்தின் வட பகுதியில் கடந்த 3-ம் தேதி இரவு மேக வெடிப்பு காரணமாக கனமழை பெய்தது. இதனால் தீஸ்தா நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

இந்த திடீர் வெள்ளப் பெருக்கால் சிக்கிம் மாநிலத்தில் 22,034 பேர் பாதிக்கப்பட்டனர். இவர்களில் 2,011 பேர் மீட்கப்பட்டதாக சிக்கிம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

திடீர் வெள்ளத்தில் ராணுவ முகாமும் சேதமடைந்ததால், அங்கிருந்த 22 வீரர்கள் உட்பட 102 பேரை காணவில்லை. இவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 4 மாவட்டங்களில் 26 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு ஆயிரக்கணக்கானோர் தங்கியுள்ளனர். வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட சிங்தாம் பகுதியை சிக்கிம் முதல்வர் பிரேம் சிங் தமாங் பார்வையிட்டார். பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வுக்கு தேவையான அனைத்து உதவிகளும் அளிக்கப்படும் என அவர் உறுதியளித்துள்ளார்.

இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிக்கிமுக்கு சுமார் 45 கோடி ரூபாய் பேரிடர் உதவியை வழங்க மத்திய அரசு இன்று ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் தொகையானது 2023-24 ஆம் ஆண்டிற்கான மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து மாநிலத்திற்கான மத்திய அரசின் பங்களிப்பாகும்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, மாநில அரசுக்கு உதவ இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம், திடீர் வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பீடு செய்ய, மத்திய அமைச்சகங்களுக்கு இடையேயான மத்திய குழுவையும் அமைத்துள்ளது.

இந்த குழு விரைவில் மாநிலத்தின் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடும் என்றும், அதன் மதிப்பீட்டின் அடிப்படையில் சிக்கிமுக்கு மேலும் கூடுதல் நிதி வழங்க ஒப்புதல் அளிக்கப்படும் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது. சிக்கிம் மாநிலத்தின் நிலைமையை மத்திய அரசு 24 மணி நேரமும் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.

தேசிய பேரிடர் மீட்புப் படை, இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்கள் மற்றும் இராணுவ வீரர்கள் அங்கு மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மின்சாரம், தொலைத்தொடர்பு மற்றும் சாலைகள், நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்து அமைச்சகங்களின் தொழில்நுட்ப குழுக்கள் மாநிலத்தில் சேதமடைந்த உள்கட்டமைப்பு மற்றும் தகவல் தொடர்பு நெட்வொர்க்குகளை மீட்டெடுத்து வருகின்றனர்.

Tags: central govermentsikkim flood
ShareTweetSendShare
Previous Post

“நன்றி மோடி ஜி” பிரசாரம்: பா.ஜ.க. சிறுபான்மை பிரிவு திட்டம்!

Next Post

பாகிஸ்தான் – நெதர்லாந்து : வெல்ல போவது யார் ?

Related News

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

ட்ரம்பிற்கு தென்கொரியா எதிர்ப்பு : ஹூண்டாய் தொழிலாளர்களுக்கு கை, கால்களில் விலங்கு!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

இந்தியா மீது ட்ரம்ப் காட்டம் ஏன்? – “இந்தியர்கள் குறைந்த நன்கொடை அளித்ததும் ஒரு காரணம்”!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவின் முதல் Vande Bharat SLEEPER TRAIN : விமானத்திற்கு நிகரான ரயிலில் பறக்க தயாரா?

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி!

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

ராஜஸ்தான் : முதியவரை காப்பாற்ற பைக்குடன் மருத்துவமனைக்குள் நுழைந்த இளைஞர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies