வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிக்கிமுக்கு சுமார் 45 கோடி : மத்திய அரசு!
Mar 15, 2026, 07:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிக்கிமுக்கு சுமார் 45 கோடி : மத்திய அரசு!

Murugesan M by Murugesan M
Oct 6, 2023, 12:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிக்கிம் மாநிலத்திற்கு சுமார் 45 கோடி ரூபாய் பேரிடர் நிவாரண நிதி வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

சிக்கிம் மாநிலத்தின் வட பகுதியில் கடந்த 3-ம் தேதி இரவு மேக வெடிப்பு காரணமாக கனமழை பெய்தது. இதனால் தீஸ்தா நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

இந்த திடீர் வெள்ளப் பெருக்கால் சிக்கிம் மாநிலத்தில் 22,034 பேர் பாதிக்கப்பட்டனர். இவர்களில் 2,011 பேர் மீட்கப்பட்டதாக சிக்கிம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

திடீர் வெள்ளத்தில் ராணுவ முகாமும் சேதமடைந்ததால், அங்கிருந்த 22 வீரர்கள் உட்பட 102 பேரை காணவில்லை. இவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 4 மாவட்டங்களில் 26 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு ஆயிரக்கணக்கானோர் தங்கியுள்ளனர். வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட சிங்தாம் பகுதியை சிக்கிம் முதல்வர் பிரேம் சிங் தமாங் பார்வையிட்டார். பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வுக்கு தேவையான அனைத்து உதவிகளும் அளிக்கப்படும் என அவர் உறுதியளித்துள்ளார்.

இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிக்கிமுக்கு சுமார் 45 கோடி ரூபாய் பேரிடர் உதவியை வழங்க மத்திய அரசு இன்று ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் தொகையானது 2023-24 ஆம் ஆண்டிற்கான மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து மாநிலத்திற்கான மத்திய அரசின் பங்களிப்பாகும்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, மாநில அரசுக்கு உதவ இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம், திடீர் வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பீடு செய்ய, மத்திய அமைச்சகங்களுக்கு இடையேயான மத்திய குழுவையும் அமைத்துள்ளது.

இந்த குழு விரைவில் மாநிலத்தின் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடும் என்றும், அதன் மதிப்பீட்டின் அடிப்படையில் சிக்கிமுக்கு மேலும் கூடுதல் நிதி வழங்க ஒப்புதல் அளிக்கப்படும் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது. சிக்கிம் மாநிலத்தின் நிலைமையை மத்திய அரசு 24 மணி நேரமும் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.

தேசிய பேரிடர் மீட்புப் படை, இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்கள் மற்றும் இராணுவ வீரர்கள் அங்கு மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மின்சாரம், தொலைத்தொடர்பு மற்றும் சாலைகள், நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்து அமைச்சகங்களின் தொழில்நுட்ப குழுக்கள் மாநிலத்தில் சேதமடைந்த உள்கட்டமைப்பு மற்றும் தகவல் தொடர்பு நெட்வொர்க்குகளை மீட்டெடுத்து வருகின்றனர்.

Tags: central govermentsikkim flood
ShareTweetSendShare
Previous Post

“நன்றி மோடி ஜி” பிரசாரம்: பா.ஜ.க. சிறுபான்மை பிரிவு திட்டம்!

Next Post

பாகிஸ்தான் – நெதர்லாந்து : வெல்ல போவது யார் ?

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies