ஜே.கே.டி.எஃப்.பி. கட்சிக்குத் தடை: மத்திய அரசு அதிரடி!
Jan 14, 2026, 06:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜே.கே.டி.எஃப்.பி. கட்சிக்குத் தடை: மத்திய அரசு அதிரடி!

சட்ட விரோத சங்கமாக அறிவிப்பு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 6, 2023, 03:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவுக்கு எதிரான மற்றும் பாகிஸ்தானுக்கு ஆதரவான நடவடிக்கைகளுக்காக ஜம்மு காஷ்மீர் ஜனநாயக சுதந்திரக் கட்சியை (ஜே.கே.டி.எஃப்.பி) மத்திய அரசு 5 ஆண்டுகளுக்குத் தடை செய்து அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ஜம்மு காஷ்மீர் ஜனநாயக சுதந்திரக் கட்சி (J.K.D.F.P.), 1998-ஆம் ஆண்டு முதல் தேச விரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறது. இக்கட்சியின் உறுப்பினர்கள் இந்தியாவில் பிரிவினைவாதம் மற்றும் தீவிரவாத செயல்களை ஊக்குவித்து வருகிறார்கள். மேலும், மக்களைத் தூண்டிவிட்டு இந்தியாவின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாட்டுக்கு பாதகமான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதோடு, காஷ்மீரை தனி இஸ்லாமிய நாடாக மாற்ற விரும்புகிறார்கள்.

இந்த கட்சிக்கு எதிராக (UAPA 1967, IPC 1860, The Arms Act 1959 மற்றும் Ranbir Penal Code 1932) பல்வேறு பிரிவுகளின் கீழ் கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது தவிர, ஜம்மு காஷ்மீர் ஜனநாயக சுதந்திரக் கட்சியை நிறுவிய ஷாபிர் அகமது ஷா, பண மோசடி மற்றும் தீவிரவாதத்திற்கு நிதி திரட்டிய வழக்குகளில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் இருந்து வருகிறார். இவர், இந்தியாவுக்கு எதிராகவும் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் பிரச்சாரத்தில் ஈடுபடும் முக்கிய பிரிவினைவாதி.

மேலும், இந்த அமைப்பு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினர் மீது கல்வீச்சு தாக்குதல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. தவிர, இந்த அமைப்பின் உறுப்பினர்கள் நாட்டின் அரசியலமைப்பு அதிகாரம் மற்றும் அரசியலமைப்பு சட்டத்துக்கு முற்றிலும் விரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். எல்லாவற்றுக்கும் மேலாக, தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளுடன் ஜே.கே.டி.எஃப்.பி.க்கு தொடர்பு இருப்பதாக உளவுத்துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுபோன்ற அரசியலமைப்பு அதிகாரத்துக்கு எதிராகவும், மாநிலத்தின் இறையாண்மைக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும் தேசவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதால், இந்த அமைப்புக்கு எதிராக உடனடி மற்றும் விரைவான நடவடிக்கை தேவை என்று உள்துறை அமைச்சகம் வலியுறுத்தியது. மேலும், நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு, பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு தீங்கு விளைவிக்கும் தேசவிரோத நடவடிக்கைகளைக் அந்த அமைப்பு தொடரும் என்றும் சுட்டிக் காட்டியது.

இதையடுத்து, ஜம்மு காஷ்மீர் ஜனநாயக சுதந்திரக் கட்சியை சட்ட விரோத சங்கமாக மத்திய அரசு அறிவித்து, அக்கட்சிக்கு 5 ஆண்டுகள் தடை விதித்திருக்கிறது.

Tags: Banned5 yearsDeclarecentral governmentJKDFP Party
ShareTweetSendShare
Previous Post

தருமபுரம் ஆதீனத்திடம் இடத்தை ஒப்படைக்க வேண்டும்- அண்ணாமலை!

Next Post

இந்திய வம்சாவளி பேராசிரியருக்கு உயரிய விருது!

Related News

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

Load More

அண்மைச் செய்திகள்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies