ஜே.கே.டி.எஃப்.பி. கட்சிக்குத் தடை: மத்திய அரசு அதிரடி!
Mar 15, 2026, 06:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜே.கே.டி.எஃப்.பி. கட்சிக்குத் தடை: மத்திய அரசு அதிரடி!

சட்ட விரோத சங்கமாக அறிவிப்பு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 6, 2023, 03:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவுக்கு எதிரான மற்றும் பாகிஸ்தானுக்கு ஆதரவான நடவடிக்கைகளுக்காக ஜம்மு காஷ்மீர் ஜனநாயக சுதந்திரக் கட்சியை (ஜே.கே.டி.எஃப்.பி) மத்திய அரசு 5 ஆண்டுகளுக்குத் தடை செய்து அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ஜம்மு காஷ்மீர் ஜனநாயக சுதந்திரக் கட்சி (J.K.D.F.P.), 1998-ஆம் ஆண்டு முதல் தேச விரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறது. இக்கட்சியின் உறுப்பினர்கள் இந்தியாவில் பிரிவினைவாதம் மற்றும் தீவிரவாத செயல்களை ஊக்குவித்து வருகிறார்கள். மேலும், மக்களைத் தூண்டிவிட்டு இந்தியாவின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாட்டுக்கு பாதகமான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதோடு, காஷ்மீரை தனி இஸ்லாமிய நாடாக மாற்ற விரும்புகிறார்கள்.

இந்த கட்சிக்கு எதிராக (UAPA 1967, IPC 1860, The Arms Act 1959 மற்றும் Ranbir Penal Code 1932) பல்வேறு பிரிவுகளின் கீழ் கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது தவிர, ஜம்மு காஷ்மீர் ஜனநாயக சுதந்திரக் கட்சியை நிறுவிய ஷாபிர் அகமது ஷா, பண மோசடி மற்றும் தீவிரவாதத்திற்கு நிதி திரட்டிய வழக்குகளில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் இருந்து வருகிறார். இவர், இந்தியாவுக்கு எதிராகவும் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் பிரச்சாரத்தில் ஈடுபடும் முக்கிய பிரிவினைவாதி.

மேலும், இந்த அமைப்பு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினர் மீது கல்வீச்சு தாக்குதல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. தவிர, இந்த அமைப்பின் உறுப்பினர்கள் நாட்டின் அரசியலமைப்பு அதிகாரம் மற்றும் அரசியலமைப்பு சட்டத்துக்கு முற்றிலும் விரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். எல்லாவற்றுக்கும் மேலாக, தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளுடன் ஜே.கே.டி.எஃப்.பி.க்கு தொடர்பு இருப்பதாக உளவுத்துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுபோன்ற அரசியலமைப்பு அதிகாரத்துக்கு எதிராகவும், மாநிலத்தின் இறையாண்மைக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும் தேசவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதால், இந்த அமைப்புக்கு எதிராக உடனடி மற்றும் விரைவான நடவடிக்கை தேவை என்று உள்துறை அமைச்சகம் வலியுறுத்தியது. மேலும், நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு, பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு தீங்கு விளைவிக்கும் தேசவிரோத நடவடிக்கைகளைக் அந்த அமைப்பு தொடரும் என்றும் சுட்டிக் காட்டியது.

இதையடுத்து, ஜம்மு காஷ்மீர் ஜனநாயக சுதந்திரக் கட்சியை சட்ட விரோத சங்கமாக மத்திய அரசு அறிவித்து, அக்கட்சிக்கு 5 ஆண்டுகள் தடை விதித்திருக்கிறது.

Tags: central governmentJKDFP PartyBanned5 yearsDeclare
ShareTweetSendShare
Previous Post

தருமபுரம் ஆதீனத்திடம் இடத்தை ஒப்படைக்க வேண்டும்- அண்ணாமலை!

Next Post

இந்திய வம்சாவளி பேராசிரியருக்கு உயரிய விருது!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies