ஜே.கே.டி.எஃப்.பி. கட்சிக்குத் தடை: மத்திய அரசு அதிரடி!
Sep 9, 2025, 05:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜே.கே.டி.எஃப்.பி. கட்சிக்குத் தடை: மத்திய அரசு அதிரடி!

சட்ட விரோத சங்கமாக அறிவிப்பு!

Web Desk by Web Desk
Oct 6, 2023, 03:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவுக்கு எதிரான மற்றும் பாகிஸ்தானுக்கு ஆதரவான நடவடிக்கைகளுக்காக ஜம்மு காஷ்மீர் ஜனநாயக சுதந்திரக் கட்சியை (ஜே.கே.டி.எஃப்.பி) மத்திய அரசு 5 ஆண்டுகளுக்குத் தடை செய்து அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ஜம்மு காஷ்மீர் ஜனநாயக சுதந்திரக் கட்சி (J.K.D.F.P.), 1998-ஆம் ஆண்டு முதல் தேச விரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறது. இக்கட்சியின் உறுப்பினர்கள் இந்தியாவில் பிரிவினைவாதம் மற்றும் தீவிரவாத செயல்களை ஊக்குவித்து வருகிறார்கள். மேலும், மக்களைத் தூண்டிவிட்டு இந்தியாவின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாட்டுக்கு பாதகமான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதோடு, காஷ்மீரை தனி இஸ்லாமிய நாடாக மாற்ற விரும்புகிறார்கள்.

இந்த கட்சிக்கு எதிராக (UAPA 1967, IPC 1860, The Arms Act 1959 மற்றும் Ranbir Penal Code 1932) பல்வேறு பிரிவுகளின் கீழ் கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது தவிர, ஜம்மு காஷ்மீர் ஜனநாயக சுதந்திரக் கட்சியை நிறுவிய ஷாபிர் அகமது ஷா, பண மோசடி மற்றும் தீவிரவாதத்திற்கு நிதி திரட்டிய வழக்குகளில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் இருந்து வருகிறார். இவர், இந்தியாவுக்கு எதிராகவும் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் பிரச்சாரத்தில் ஈடுபடும் முக்கிய பிரிவினைவாதி.

மேலும், இந்த அமைப்பு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினர் மீது கல்வீச்சு தாக்குதல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. தவிர, இந்த அமைப்பின் உறுப்பினர்கள் நாட்டின் அரசியலமைப்பு அதிகாரம் மற்றும் அரசியலமைப்பு சட்டத்துக்கு முற்றிலும் விரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். எல்லாவற்றுக்கும் மேலாக, தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளுடன் ஜே.கே.டி.எஃப்.பி.க்கு தொடர்பு இருப்பதாக உளவுத்துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுபோன்ற அரசியலமைப்பு அதிகாரத்துக்கு எதிராகவும், மாநிலத்தின் இறையாண்மைக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும் தேசவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதால், இந்த அமைப்புக்கு எதிராக உடனடி மற்றும் விரைவான நடவடிக்கை தேவை என்று உள்துறை அமைச்சகம் வலியுறுத்தியது. மேலும், நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு, பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு தீங்கு விளைவிக்கும் தேசவிரோத நடவடிக்கைகளைக் அந்த அமைப்பு தொடரும் என்றும் சுட்டிக் காட்டியது.

இதையடுத்து, ஜம்மு காஷ்மீர் ஜனநாயக சுதந்திரக் கட்சியை சட்ட விரோத சங்கமாக மத்திய அரசு அறிவித்து, அக்கட்சிக்கு 5 ஆண்டுகள் தடை விதித்திருக்கிறது.

Tags: central governmentJKDFP PartyBanned5 yearsDeclare
ShareTweetSendShare
Previous Post

தருமபுரம் ஆதீனத்திடம் இடத்தை ஒப்படைக்க வேண்டும்- அண்ணாமலை!

Next Post

இந்திய வம்சாவளி பேராசிரியருக்கு உயரிய விருது!

Related News

திமுக அரசு, ஒடுக்கு முறை ஆட்சி செய்வதாக தூய்மை பணியாளர்கள் குற்றச்சாட்டு!

உத்தரபிரதேசம் : வீட்டின் சுவர் இடிந்து 2 பேர் பலி – 2 பேர் காயம்!

BRICS நாடுகள் ஒன்றிணைய வேண்டுமென சீனா அழைப்பு!

ஐயப்ப பக்தர்கள் மாநாட்டுக்கு தடை கோரிய மனு – கேரள அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

விழுப்புரம் : வரிப்பணம் மூலம் தாங்களாகவே சாலையை அமைத்துக் கொண்ட மக்கள்!

ஜம்மு காஷ்மீரில் ஆம் ஆத்மி எம்எல்ஏ மெஹ்ராஜ் மாலிக் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

இமாச்சலுக்கு ரூ.1,500 கோடி நிதியுதவி – பிரதமர் மோடி

இந்தியாவின் முதல் Vande Bharat SLEEPER TRAIN : விமானத்திற்கு நிகரான ரயிலில் பறக்க தயாரா?

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை!

திருச்சி : சிறுநீரக திருட்டு விவகாரம்: அதிமுக ஆர்ப்பாட்டம்!

சோனியா காந்தியை, அவரது மகன் ராகுல் காந்தி அவமதித்ததாக குற்றச்சாட்டு!

ஹிமாச்சல பிரதேசத்தில் வெள்ள பாதிப்பு – விமானம் மூலம் பார்வையிட்ட பிரதமர் மோடி!

நீருக்கடியில் நகரம் கண்டுபிடிப்பு : 8500 ஆண்டுகள் பழமையானதா!

கனமழையால் வாரணாசி கங்கை நதியில் வெள்ளப் பெருக்கு!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றிப் பெறுவார் – உறவினர்கள் மகிழ்ச்சி!

ரூ.200 கோடி வசூலை குவித்த லோகா திரைப்படம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies