ஜே.கே.டி.எஃப்.பி. கட்சிக்குத் தடை: மத்திய அரசு அதிரடி!
Sep 12, 2026, 10:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜே.கே.டி.எஃப்.பி. கட்சிக்குத் தடை: மத்திய அரசு அதிரடி!

சட்ட விரோத சங்கமாக அறிவிப்பு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 6, 2023, 03:51 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தியாவுக்கு எதிரான மற்றும் பாகிஸ்தானுக்கு ஆதரவான நடவடிக்கைகளுக்காக ஜம்மு காஷ்மீர் ஜனநாயக சுதந்திரக் கட்சியை (ஜே.கே.டி.எஃப்.பி) மத்திய அரசு 5 ஆண்டுகளுக்குத் தடை செய்து அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ஜம்மு காஷ்மீர் ஜனநாயக சுதந்திரக் கட்சி (J.K.D.F.P.), 1998-ஆம் ஆண்டு முதல் தேச விரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறது. இக்கட்சியின் உறுப்பினர்கள் இந்தியாவில் பிரிவினைவாதம் மற்றும் தீவிரவாத செயல்களை ஊக்குவித்து வருகிறார்கள். மேலும், மக்களைத் தூண்டிவிட்டு இந்தியாவின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாட்டுக்கு பாதகமான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதோடு, காஷ்மீரை தனி இஸ்லாமிய நாடாக மாற்ற விரும்புகிறார்கள்.

இந்த கட்சிக்கு எதிராக (UAPA 1967, IPC 1860, The Arms Act 1959 மற்றும் Ranbir Penal Code 1932) பல்வேறு பிரிவுகளின் கீழ் கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது தவிர, ஜம்மு காஷ்மீர் ஜனநாயக சுதந்திரக் கட்சியை நிறுவிய ஷாபிர் அகமது ஷா, பண மோசடி மற்றும் தீவிரவாதத்திற்கு நிதி திரட்டிய வழக்குகளில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் இருந்து வருகிறார். இவர், இந்தியாவுக்கு எதிராகவும் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் பிரச்சாரத்தில் ஈடுபடும் முக்கிய பிரிவினைவாதி.

மேலும், இந்த அமைப்பு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினர் மீது கல்வீச்சு தாக்குதல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. தவிர, இந்த அமைப்பின் உறுப்பினர்கள் நாட்டின் அரசியலமைப்பு அதிகாரம் மற்றும் அரசியலமைப்பு சட்டத்துக்கு முற்றிலும் விரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். எல்லாவற்றுக்கும் மேலாக, தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளுடன் ஜே.கே.டி.எஃப்.பி.க்கு தொடர்பு இருப்பதாக உளவுத்துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுபோன்ற அரசியலமைப்பு அதிகாரத்துக்கு எதிராகவும், மாநிலத்தின் இறையாண்மைக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும் தேசவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதால், இந்த அமைப்புக்கு எதிராக உடனடி மற்றும் விரைவான நடவடிக்கை தேவை என்று உள்துறை அமைச்சகம் வலியுறுத்தியது. மேலும், நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு, பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு தீங்கு விளைவிக்கும் தேசவிரோத நடவடிக்கைகளைக் அந்த அமைப்பு தொடரும் என்றும் சுட்டிக் காட்டியது.

இதையடுத்து, ஜம்மு காஷ்மீர் ஜனநாயக சுதந்திரக் கட்சியை சட்ட விரோத சங்கமாக மத்திய அரசு அறிவித்து, அக்கட்சிக்கு 5 ஆண்டுகள் தடை விதித்திருக்கிறது.

Tags: central governmentJKDFP PartyBanned5 yearsDeclare
Share
Tweet
SendShare
Previous Post

தருமபுரம் ஆதீனத்திடம் இடத்தை ஒப்படைக்க வேண்டும்- அண்ணாமலை!

Next Post

இந்திய வம்சாவளி பேராசிரியருக்கு உயரிய விருது!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies