மகளிர் உரிமைத் தொகை திட்டம்: விரக்தியில் 7 லட்சம் பெண்கள்!
Jan 14, 2026, 03:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மகளிர் உரிமைத் தொகை திட்டம்: விரக்தியில் 7 லட்சம் பெண்கள்!

Murugesan M by Murugesan M
Oct 6, 2023, 08:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திமுக அரசு அறிமுகம் செய்துள்ள மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில், இதுவரை விண்ணப்பம் செய்தும் பணம் கிடைக்காத 7 லட்சம் பேர் மேல்முறையீடு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 115 -வது பிறந்த நாளையொட்டி மகளிர் உரிமை தொகை திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த மாதம் 15 -ம் தேதி அன்று காஞ்சிபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மகளிர் உரிமை தொகை திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்தின்கீழ் ஒரு கோடியே 63 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில், ஒரு கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டனர். மகளிர் உரிமை திட்டத்தில் நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் இ-சேவை மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள் 21-ம் ஆம் தேதி முதல் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று அரசு அறிவித்தது.

தகுதியான நபர்களுக்கு 30 நாட்களுக்குள் கோட்டாட்சியர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக அரசு உறுதி அளித்திருந்தது.

இந்த நிலையில், மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் இதுவரை 7 லட்சம் பேர் மேல்முறையீடு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 30 நாட்கள் அவகாசம் வழங்கிய நிலையில், தற்போது வரை 7 லட்சம் பெண்கள் மேல்முறையீடு செய்துள்ளனர்.

இது தொடர்பாகப் பேசிய பெண்கள் சிலர், முதலில் பெண்கள் அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை கிடைக்கும் என்றுதான் தேர்தல் நேரத்தில் திமுகவினர் பிரச்சாரம் செய்தனர். அதை நம்பி நாங்களும் ஓட்டு போட்டோம்.

ஆனால், ஆட்சிக்கு வந்த இரண்டரை வருடங்களுக்குப் பின்பு தற்போதுதான் அந்த திட்டத்தைச் செயல்படுத்தி வருகின்றனர்.

அதுவும் கூட விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் வருவதால், பெண்கள் வாக்குகளைக் குறிவைத்து ஆயிரம் வழங்குகிறார்கள். முதலிலேயே தகுதி உள்ளவர்களுக்கு மட்டும் தான் ஏன் சொல்லவில்லை. பொத்தாம் பொதுவாகச் சொல்லிவிட்டு, இப்போது ஏமாற்றுகிறார்கள். இது ஏற்றுக் கொள்ளவே முடியாது. எனவே, திமுகவுக்கு வரும் தேர்தலில் தகுந்த பாடம் புகட்டுவோம் எனத் தெரிவித்தனர்.

Tags: 1000 dmkDMK
ShareTweetSendShare
Previous Post

“ராவணன்” ராகுல் காந்தி: சமூக வலைத்தளத்தில் பா.ஜ.க. கிண்டல்

Next Post

கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்ற 2 பேர் கைது !

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies