மகளிர் உரிமைத் தொகை திட்டம்: விரக்தியில் 7 லட்சம் பெண்கள்!
Oct 26, 2025, 06:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மகளிர் உரிமைத் தொகை திட்டம்: விரக்தியில் 7 லட்சம் பெண்கள்!

Web Desk by Web Desk
Oct 6, 2023, 08:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திமுக அரசு அறிமுகம் செய்துள்ள மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில், இதுவரை விண்ணப்பம் செய்தும் பணம் கிடைக்காத 7 லட்சம் பேர் மேல்முறையீடு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 115 -வது பிறந்த நாளையொட்டி மகளிர் உரிமை தொகை திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த மாதம் 15 -ம் தேதி அன்று காஞ்சிபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மகளிர் உரிமை தொகை திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்தின்கீழ் ஒரு கோடியே 63 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில், ஒரு கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டனர். மகளிர் உரிமை திட்டத்தில் நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் இ-சேவை மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள் 21-ம் ஆம் தேதி முதல் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று அரசு அறிவித்தது.

தகுதியான நபர்களுக்கு 30 நாட்களுக்குள் கோட்டாட்சியர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக அரசு உறுதி அளித்திருந்தது.

இந்த நிலையில், மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் இதுவரை 7 லட்சம் பேர் மேல்முறையீடு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 30 நாட்கள் அவகாசம் வழங்கிய நிலையில், தற்போது வரை 7 லட்சம் பெண்கள் மேல்முறையீடு செய்துள்ளனர்.

இது தொடர்பாகப் பேசிய பெண்கள் சிலர், முதலில் பெண்கள் அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை கிடைக்கும் என்றுதான் தேர்தல் நேரத்தில் திமுகவினர் பிரச்சாரம் செய்தனர். அதை நம்பி நாங்களும் ஓட்டு போட்டோம்.

ஆனால், ஆட்சிக்கு வந்த இரண்டரை வருடங்களுக்குப் பின்பு தற்போதுதான் அந்த திட்டத்தைச் செயல்படுத்தி வருகின்றனர்.

அதுவும் கூட விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் வருவதால், பெண்கள் வாக்குகளைக் குறிவைத்து ஆயிரம் வழங்குகிறார்கள். முதலிலேயே தகுதி உள்ளவர்களுக்கு மட்டும் தான் ஏன் சொல்லவில்லை. பொத்தாம் பொதுவாகச் சொல்லிவிட்டு, இப்போது ஏமாற்றுகிறார்கள். இது ஏற்றுக் கொள்ளவே முடியாது. எனவே, திமுகவுக்கு வரும் தேர்தலில் தகுந்த பாடம் புகட்டுவோம் எனத் தெரிவித்தனர்.

Tags: DMK1000 dmk
ShareTweetSendShare
Previous Post

“ராவணன்” ராகுல் காந்தி: சமூக வலைத்தளத்தில் பா.ஜ.க. கிண்டல்

Next Post

கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்ற 2 பேர் கைது !

Related News

டெல்டா விவசாயிகள் இன்னல்களுக்கு முதல்வரே காரணம் – நயினார் நாகேந்திரன்

நாமக்கல் நகரில் தனியார் அரிசி அரவை ஆலையில் மத்திய குழு ஆய்வு

ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை!

நாளை உருவாகிறது மோந்தா புயல் – சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies