மகளிர் உரிமைத் தொகை திட்டம்: விரக்தியில் 7 லட்சம் பெண்கள்!
Sep 12, 2026, 11:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மகளிர் உரிமைத் தொகை திட்டம்: விரக்தியில் 7 லட்சம் பெண்கள்!

Murugesan M by Murugesan M
Oct 6, 2023, 08:59 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திமுக அரசு அறிமுகம் செய்துள்ள மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில், இதுவரை விண்ணப்பம் செய்தும் பணம் கிடைக்காத 7 லட்சம் பேர் மேல்முறையீடு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 115 -வது பிறந்த நாளையொட்டி மகளிர் உரிமை தொகை திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த மாதம் 15 -ம் தேதி அன்று காஞ்சிபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மகளிர் உரிமை தொகை திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்தின்கீழ் ஒரு கோடியே 63 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில், ஒரு கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டனர். மகளிர் உரிமை திட்டத்தில் நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் இ-சேவை மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள் 21-ம் ஆம் தேதி முதல் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று அரசு அறிவித்தது.

தகுதியான நபர்களுக்கு 30 நாட்களுக்குள் கோட்டாட்சியர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக அரசு உறுதி அளித்திருந்தது.

இந்த நிலையில், மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் இதுவரை 7 லட்சம் பேர் மேல்முறையீடு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 30 நாட்கள் அவகாசம் வழங்கிய நிலையில், தற்போது வரை 7 லட்சம் பெண்கள் மேல்முறையீடு செய்துள்ளனர்.

இது தொடர்பாகப் பேசிய பெண்கள் சிலர், முதலில் பெண்கள் அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை கிடைக்கும் என்றுதான் தேர்தல் நேரத்தில் திமுகவினர் பிரச்சாரம் செய்தனர். அதை நம்பி நாங்களும் ஓட்டு போட்டோம்.

ஆனால், ஆட்சிக்கு வந்த இரண்டரை வருடங்களுக்குப் பின்பு தற்போதுதான் அந்த திட்டத்தைச் செயல்படுத்தி வருகின்றனர்.

அதுவும் கூட விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் வருவதால், பெண்கள் வாக்குகளைக் குறிவைத்து ஆயிரம் வழங்குகிறார்கள். முதலிலேயே தகுதி உள்ளவர்களுக்கு மட்டும் தான் ஏன் சொல்லவில்லை. பொத்தாம் பொதுவாகச் சொல்லிவிட்டு, இப்போது ஏமாற்றுகிறார்கள். இது ஏற்றுக் கொள்ளவே முடியாது. எனவே, திமுகவுக்கு வரும் தேர்தலில் தகுந்த பாடம் புகட்டுவோம் எனத் தெரிவித்தனர்.

Tags: 1000 dmkDMK
Share
Tweet
SendShare
Previous Post

“ராவணன்” ராகுல் காந்தி: சமூக வலைத்தளத்தில் பா.ஜ.க. கிண்டல்

Next Post

கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்ற 2 பேர் கைது !

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies