கடல் பாதுகாப்பில் மிகுந்த கவனம் தேவை : மாநில அரசுக்கு உளவுத்துறையினர் எச்சரிக்கை!
Sep 10, 2025, 06:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கடல் பாதுகாப்பில் மிகுந்த கவனம் தேவை : மாநில அரசுக்கு உளவுத்துறையினர் எச்சரிக்கை!

Web Desk by Web Desk
Oct 6, 2023, 08:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி முதல் நாகை மாவட்டம் கோடியக்கரை வரை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசை படகு, நாட்டுப் படகுகளில் மீனவர்கள் பாக் ஜல சந்தி கடல், மன்னார் வளைகுடா கடலில் மீன் பிடித்து வருகின்றனர்.

தமிழக கடலோரம் முதல் இலங்கை வரை குறுகிய பகுதியாக உள்ளதால் எல்லை தாண்டிச் சென்று மீன்பிடிக்கும் நிலை உள்ளது. இதனால் இலங்கை கடற்படை தாக்குதல், கைது, படகுகள் மூழ்கடிப்பு போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகிறது.

தனுஷ்கோடி, ராமேஸ்வரம் கடலில் இந்தியக் கடலோர காவல் படை வீரர்கள், தமிழக மரைன் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும், கீழக்கரை, வாலி நோக்கம், ஏர்வாடி, மண்டபம், பாம்பன், தொண்டி, நம்பு தாளைப் பகுதிகளிலிருந்து கஞ்சா, பீடி இலை, பிரவுன் சுகர் போன்றவற்றைப் படகில் இலங்கைக்குக் கடத்திச் செல்வது அதிகரித்து வருகிறது. பதிலுக்கு அங்கிருந்து தங்கக் கட்டிகள் மற்றும் பணம் தமிழகத்திற்குத் திரும்பி வருகிறது.

இது வெறும் கடத்தல் சம்பவமாக மட்டுமே கருத முடியாது. காரணம், கடத்தல்காரர்களுடன், சமூக விரோத கும்பலும் ஊடுருவதுதான் மிகவும் கூர்ந்து கவனிக்க வேண்டிய விசயம். ரோந்து பணி சுணக்கத்தால் இக்கடல் பகுதி கடத்தல்காரர்களின் சொர்க்க பூமியாக மாறி வருகிறது.

உதாரணத்திற்கு, கடந்த ஓராண்டில் இலங்கையிலிருந்து 500 -க்கும் மேற்பட்ட இலங்கை அகதிகள் தனுஷ்கோடி மணல் தீட்டை, அரிச்சல்முனை கடற்கரையில் வந்திறங்கி உள்ளனர். இவர்களிடம் ரூ.1 லட்சம் முதல் 2 லட்சம் வரை கூலியாக வசூலித்துக் கொள்கின்றனர் இலங்கை படகோட்டிகள்.

இலங்கையிலிருந்து, தனுஷ்கோடிக்கு வந்து துணிச்சலுடன் அவர்களை இறக்கிவிட்டு மீண்டும் இலங்கைக்குப் பத்திரமாகத் திரும்பிவிடுகின்றனர் கடத்தல்காரர்கள்.

இது தொடர்ந்தால், அன்று மும்பையைப் போல், இன்றும் பயங்கரவாதிகள் எளிதில் இந்தியாவிற்குள் ஊடுருவிவிடுவார்கள் என்றும், எனவே, கடல் பாதுகாப்பில் மிகுந்த கவனம் தேவை என மாநில அரசுக்கு உளவுத்துறையினர் எச்சரிக்கை மணி அடித்துள்ளனர்.

விழித்துக் கொள்ளுமா தமிழக அரசு?

Tags: ramanathapuram
ShareTweetSendShare
Previous Post

9-வது ஜி-20 நாடாளுமன்ற சபாநாயகர்கள் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்!

Next Post

ஆசிய விளையாட்டு போட்டி : இந்தியாவுக்கு 100 பதக்கங்கள் உறுதி !

Related News

இமயமலையை குடைந்து ரயில்வே சுரங்க பாதை : மலைக்க வைக்கும் ரயில்வேதுறையின் மகத்தான சாதனை!

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

ட்ரம்பிற்கு தென்கொரியா எதிர்ப்பு : ஹூண்டாய் தொழிலாளர்களுக்கு கை, கால்களில் விலங்கு!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியா மீது ட்ரம்ப் காட்டம் ஏன்? – “இந்தியர்கள் குறைந்த நன்கொடை அளித்ததும் ஒரு காரணம்”!

இந்தியாவின் முதல் Vande Bharat SLEEPER TRAIN : விமானத்திற்கு நிகரான ரயிலில் பறக்க தயாரா?

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி!

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies