கடல் பாதுகாப்பில் மிகுந்த கவனம் தேவை : மாநில அரசுக்கு உளவுத்துறையினர் எச்சரிக்கை!
Jul 26, 2025, 10:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கடல் பாதுகாப்பில் மிகுந்த கவனம் தேவை : மாநில அரசுக்கு உளவுத்துறையினர் எச்சரிக்கை!

Web Desk by Web Desk
Oct 6, 2023, 08:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி முதல் நாகை மாவட்டம் கோடியக்கரை வரை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசை படகு, நாட்டுப் படகுகளில் மீனவர்கள் பாக் ஜல சந்தி கடல், மன்னார் வளைகுடா கடலில் மீன் பிடித்து வருகின்றனர்.

தமிழக கடலோரம் முதல் இலங்கை வரை குறுகிய பகுதியாக உள்ளதால் எல்லை தாண்டிச் சென்று மீன்பிடிக்கும் நிலை உள்ளது. இதனால் இலங்கை கடற்படை தாக்குதல், கைது, படகுகள் மூழ்கடிப்பு போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகிறது.

தனுஷ்கோடி, ராமேஸ்வரம் கடலில் இந்தியக் கடலோர காவல் படை வீரர்கள், தமிழக மரைன் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும், கீழக்கரை, வாலி நோக்கம், ஏர்வாடி, மண்டபம், பாம்பன், தொண்டி, நம்பு தாளைப் பகுதிகளிலிருந்து கஞ்சா, பீடி இலை, பிரவுன் சுகர் போன்றவற்றைப் படகில் இலங்கைக்குக் கடத்திச் செல்வது அதிகரித்து வருகிறது. பதிலுக்கு அங்கிருந்து தங்கக் கட்டிகள் மற்றும் பணம் தமிழகத்திற்குத் திரும்பி வருகிறது.

இது வெறும் கடத்தல் சம்பவமாக மட்டுமே கருத முடியாது. காரணம், கடத்தல்காரர்களுடன், சமூக விரோத கும்பலும் ஊடுருவதுதான் மிகவும் கூர்ந்து கவனிக்க வேண்டிய விசயம். ரோந்து பணி சுணக்கத்தால் இக்கடல் பகுதி கடத்தல்காரர்களின் சொர்க்க பூமியாக மாறி வருகிறது.

உதாரணத்திற்கு, கடந்த ஓராண்டில் இலங்கையிலிருந்து 500 -க்கும் மேற்பட்ட இலங்கை அகதிகள் தனுஷ்கோடி மணல் தீட்டை, அரிச்சல்முனை கடற்கரையில் வந்திறங்கி உள்ளனர். இவர்களிடம் ரூ.1 லட்சம் முதல் 2 லட்சம் வரை கூலியாக வசூலித்துக் கொள்கின்றனர் இலங்கை படகோட்டிகள்.

இலங்கையிலிருந்து, தனுஷ்கோடிக்கு வந்து துணிச்சலுடன் அவர்களை இறக்கிவிட்டு மீண்டும் இலங்கைக்குப் பத்திரமாகத் திரும்பிவிடுகின்றனர் கடத்தல்காரர்கள்.

இது தொடர்ந்தால், அன்று மும்பையைப் போல், இன்றும் பயங்கரவாதிகள் எளிதில் இந்தியாவிற்குள் ஊடுருவிவிடுவார்கள் என்றும், எனவே, கடல் பாதுகாப்பில் மிகுந்த கவனம் தேவை என மாநில அரசுக்கு உளவுத்துறையினர் எச்சரிக்கை மணி அடித்துள்ளனர்.

விழித்துக் கொள்ளுமா தமிழக அரசு?

Tags: ramanathapuram
ShareTweetSendShare
Previous Post

9-வது ஜி-20 நாடாளுமன்ற சபாநாயகர்கள் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்!

Next Post

ஆசிய விளையாட்டு போட்டி : இந்தியாவுக்கு 100 பதக்கங்கள் உறுதி !

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies