கடல் பாதுகாப்பில் மிகுந்த கவனம் தேவை : மாநில அரசுக்கு உளவுத்துறையினர் எச்சரிக்கை!
Sep 12, 2026, 10:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கடல் பாதுகாப்பில் மிகுந்த கவனம் தேவை : மாநில அரசுக்கு உளவுத்துறையினர் எச்சரிக்கை!

Murugesan M by Murugesan M
Oct 6, 2023, 08:54 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி முதல் நாகை மாவட்டம் கோடியக்கரை வரை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசை படகு, நாட்டுப் படகுகளில் மீனவர்கள் பாக் ஜல சந்தி கடல், மன்னார் வளைகுடா கடலில் மீன் பிடித்து வருகின்றனர்.

தமிழக கடலோரம் முதல் இலங்கை வரை குறுகிய பகுதியாக உள்ளதால் எல்லை தாண்டிச் சென்று மீன்பிடிக்கும் நிலை உள்ளது. இதனால் இலங்கை கடற்படை தாக்குதல், கைது, படகுகள் மூழ்கடிப்பு போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகிறது.

தனுஷ்கோடி, ராமேஸ்வரம் கடலில் இந்தியக் கடலோர காவல் படை வீரர்கள், தமிழக மரைன் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும், கீழக்கரை, வாலி நோக்கம், ஏர்வாடி, மண்டபம், பாம்பன், தொண்டி, நம்பு தாளைப் பகுதிகளிலிருந்து கஞ்சா, பீடி இலை, பிரவுன் சுகர் போன்றவற்றைப் படகில் இலங்கைக்குக் கடத்திச் செல்வது அதிகரித்து வருகிறது. பதிலுக்கு அங்கிருந்து தங்கக் கட்டிகள் மற்றும் பணம் தமிழகத்திற்குத் திரும்பி வருகிறது.

இது வெறும் கடத்தல் சம்பவமாக மட்டுமே கருத முடியாது. காரணம், கடத்தல்காரர்களுடன், சமூக விரோத கும்பலும் ஊடுருவதுதான் மிகவும் கூர்ந்து கவனிக்க வேண்டிய விசயம். ரோந்து பணி சுணக்கத்தால் இக்கடல் பகுதி கடத்தல்காரர்களின் சொர்க்க பூமியாக மாறி வருகிறது.

உதாரணத்திற்கு, கடந்த ஓராண்டில் இலங்கையிலிருந்து 500 -க்கும் மேற்பட்ட இலங்கை அகதிகள் தனுஷ்கோடி மணல் தீட்டை, அரிச்சல்முனை கடற்கரையில் வந்திறங்கி உள்ளனர். இவர்களிடம் ரூ.1 லட்சம் முதல் 2 லட்சம் வரை கூலியாக வசூலித்துக் கொள்கின்றனர் இலங்கை படகோட்டிகள்.

இலங்கையிலிருந்து, தனுஷ்கோடிக்கு வந்து துணிச்சலுடன் அவர்களை இறக்கிவிட்டு மீண்டும் இலங்கைக்குப் பத்திரமாகத் திரும்பிவிடுகின்றனர் கடத்தல்காரர்கள்.

இது தொடர்ந்தால், அன்று மும்பையைப் போல், இன்றும் பயங்கரவாதிகள் எளிதில் இந்தியாவிற்குள் ஊடுருவிவிடுவார்கள் என்றும், எனவே, கடல் பாதுகாப்பில் மிகுந்த கவனம் தேவை என மாநில அரசுக்கு உளவுத்துறையினர் எச்சரிக்கை மணி அடித்துள்ளனர்.

விழித்துக் கொள்ளுமா தமிழக அரசு?

Tags: ramanathapuram
Share
Tweet
SendShare
Previous Post

9-வது ஜி-20 நாடாளுமன்ற சபாநாயகர்கள் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்!

Next Post

ஆசிய விளையாட்டு போட்டி : இந்தியாவுக்கு 100 பதக்கங்கள் உறுதி !

Related News

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies