பஜ்ரங்தள் யாத்திரைக்குத் தடை: தமிழகமா அல்லது தாலிபான் நாடா?
Jul 26, 2025, 07:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பஜ்ரங்தள் யாத்திரைக்குத் தடை: தமிழகமா அல்லது தாலிபான் நாடா?

விஷ்வ ஹிந்து பரிஷத் கேள்வி!

Web Desk by Web Desk
Oct 7, 2023, 01:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் பஜ்ரங்தள் யாத்திரைக்கு தமிழக அரசு தடை விதித்திருக்கும் நிலையில், இது தமிழகமா அல்லது தாலிபான் நாடா என்று விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு கேள்வி எழுப்பி இருக்கிறது.

இதுகுறித்து விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், “தேசம் காப்போம் தெய்வீகம் காப்போம் என்று இந்து பஜ்ரங்தள் யாத்திரை செப்டம்பர் 29-ம் தேதி முதல் அக்டோபர் 15-ம் தேதி வரை பாரதம் முழுவதும் நடத்தத் திட்டமிடப்பட்டது. இந்த யாத்திரை பிற மாநிலங்களில் இந்துக்களின் ஆதரவுடன் மிகச் சிறப்பாக எந்தவித பிரச்சனைகளும் இல்லாமல் நடந்து வருகிறது. ஆனால், தமிழகத்தில் மட்டும் இந்து விரோத தி.மு.க. அரசு வேண்டுமென்றே விஷ்வ ஹிந்து பரிஷத்தின் 60-வது ஆண்டு துவக்க விழா மற்றும் பொதுக் கூட்டங்கள், இளைஞர்கள் யாத்திரையை நடத்தத் தடை விதித்திருக்கிறது.

கடந்த 30-ம் தேதி கன்னியாகுமரியில் பாரத மாதா பூஜையுடன் தமிழகத்தில் விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங்தள் இளைஞர்கள் இணைந்து தேசபக்தி சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியை நடத்தவிருந்தனர். ஆனால், அவர்களை பாரத மாதா பூஜை செய்யாமல் தடுத்து காவல்துறையினர் கைது செய்தனர். இதனால், மீண்டும் அதே இடத்தில் பாரத மாதா பூஜை செய்ய வேண்டும் என்று விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங்தள் இளைஞர்கள் உணவு உண்ணாமல் தர்ணாவில் ஈடுபட்டனர். பின்னர், இரவு விடுவிக்கப்பட்டு அதே இடத்தில் பாரத மாத பூஜை நடைபெற்றது.

மேலும், அதேநாளில் விஷ்வ ஹிந்து பரிஷத்தின் 60-வது ஆண்டு தொடக்க நிகழ்ச்சி பொதுக் கூட்டம் நாகர்கோவிலில் நடைபெற்றது. இதில், அகில பாரத இணைச் செயலாளர் ஸ்தானுமாலயன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அக்டோபர் 1-ம் தேதி தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் விஷ்வ ஹிந்து பரிஷத் 60-வது ஆண்டு தொடக்க நிகழ்ச்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதேசமயம், அக்டோபர் 3-ம் தேதி தேதி விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங்தள் இளைஞர்கள் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு நினைவு அஞ்சலி செலுத்தும் விதமாகச் சிவகாசி சென்றபோது, அங்கிருந்த காவல்துறை நோட்டீஸ் விநியோகம் செய்யக்கூட அனுமதிக்கவில்லை.

அதேபோல, அக்டோபர் 4-ம் தேதி மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நடைபெறவிருந்த விஷ்வ ஹிந்து பரிஷத் 60-ம் ஆண்டு தொடக்க நிகழ்ச்சி பொதுக்கூட்டத்திற்கும் அனுமதி இல்லை என்று காவல்துறையினர் மறுப்புத் தெரிவித்து விட்டனர். ஆனால், மாநில, மாவட்ட நிர்வாகிகள் அன்றையதினம் மாலை உசிலம்பட்டியில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலை முன்பு இந்து விரோத தி.மு.க. அரசின் இச்செயலை கண்டித்து மனமுருகி வேண்டி முறையிட்டனர். இதில், கலந்து கொண்டவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

இது தவிர, அக்டோபர் 6-ம் தேதி சிவகங்கை மாவட்டம் சிங்கப்புணரி பகுதியில் நடைபெறவிருந்த விஷ்வ ஹிந்து பரிஷத் 60-ம் ஆண்டு தொடக்க நிகழ்ச்சி பொதுக்கூட்டத்துக்கும் அனுமதி இல்லை என்கிற உத்தரவை காவல்துறை பிறப்பித்திருந்தது. அதேபோல, அக்டோபர் 8-ம் தேதியான நாளை திருச்சியில் நடைபெறவுள்ள விஷ்வ ஹிந்து பரிஷத் 60-ம் ஆண்டு தொடக்க நிகழ்ச்சி மற்றும் பொதுக்கூட்டத்துக்கும் காவல்துறை அனுமதி மறுத்திருக்கிறது. இதனால், இது தமிழகமா அல்லது தாலிபான் நாடா? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது” என்று விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங்தள் நிர்வாகிகள் கேள்வி எழுப்பி இருப்பதோடு, கடும் கண்டனமும் தெரிவித்திருக்கின்றனர்.

Tags: tamilnaduVHP
ShareTweetSendShare
Previous Post

கேரளாவில் டாக்டர் மோகன் பகவத்!

Next Post

தூதரக அதிகாரிகளை திரும்பப் பெற்ற கனடா!

Related News

பிரதமர் மோடி இன்று தூத்துக்குடி வருகை : பலத்த பாதுகாப்பு!

மடப்புரம் அஜித் குமார் லாக்கப் கொலை : சிபிஐ அதிகாரிகள் இரு குழுக்களாகப் பிரிந்து விசாரணை!

பிரதமர் மோடியை ஆரத்தழுவி வரவேற்ற மாலத்தீவு அதிபர் முய்சு!

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை : கைது செய்யப்பட்ட அசாமை சேர்ந்த நபரிடம் விசாரணை!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

Load More

அண்மைச் செய்திகள்

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

சிவன் கோயில் உரிமை யாருக்கு? : தாய்லாந்து- கம்போடியா ராணுவ மோதல் பின்னணி!

அசீம் முனீரை அவமானப்படுத்திய சீனா : பூட்டிய அறையில் நடந்தது என்ன? – பாக்.,கிற்கு இறுதி எச்சரிக்கை!

பில்லியனர் ஆனா சுந்தர் பிச்சை : சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் – என்னென்ன இலாபம்?

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies