பஜ்ரங்தள் யாத்திரைக்குத் தடை: தமிழகமா அல்லது தாலிபான் நாடா?
Mar 15, 2026, 12:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பஜ்ரங்தள் யாத்திரைக்குத் தடை: தமிழகமா அல்லது தாலிபான் நாடா?

விஷ்வ ஹிந்து பரிஷத் கேள்வி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 7, 2023, 01:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் பஜ்ரங்தள் யாத்திரைக்கு தமிழக அரசு தடை விதித்திருக்கும் நிலையில், இது தமிழகமா அல்லது தாலிபான் நாடா என்று விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு கேள்வி எழுப்பி இருக்கிறது.

இதுகுறித்து விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், “தேசம் காப்போம் தெய்வீகம் காப்போம் என்று இந்து பஜ்ரங்தள் யாத்திரை செப்டம்பர் 29-ம் தேதி முதல் அக்டோபர் 15-ம் தேதி வரை பாரதம் முழுவதும் நடத்தத் திட்டமிடப்பட்டது. இந்த யாத்திரை பிற மாநிலங்களில் இந்துக்களின் ஆதரவுடன் மிகச் சிறப்பாக எந்தவித பிரச்சனைகளும் இல்லாமல் நடந்து வருகிறது. ஆனால், தமிழகத்தில் மட்டும் இந்து விரோத தி.மு.க. அரசு வேண்டுமென்றே விஷ்வ ஹிந்து பரிஷத்தின் 60-வது ஆண்டு துவக்க விழா மற்றும் பொதுக் கூட்டங்கள், இளைஞர்கள் யாத்திரையை நடத்தத் தடை விதித்திருக்கிறது.

கடந்த 30-ம் தேதி கன்னியாகுமரியில் பாரத மாதா பூஜையுடன் தமிழகத்தில் விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங்தள் இளைஞர்கள் இணைந்து தேசபக்தி சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியை நடத்தவிருந்தனர். ஆனால், அவர்களை பாரத மாதா பூஜை செய்யாமல் தடுத்து காவல்துறையினர் கைது செய்தனர். இதனால், மீண்டும் அதே இடத்தில் பாரத மாதா பூஜை செய்ய வேண்டும் என்று விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங்தள் இளைஞர்கள் உணவு உண்ணாமல் தர்ணாவில் ஈடுபட்டனர். பின்னர், இரவு விடுவிக்கப்பட்டு அதே இடத்தில் பாரத மாத பூஜை நடைபெற்றது.

மேலும், அதேநாளில் விஷ்வ ஹிந்து பரிஷத்தின் 60-வது ஆண்டு தொடக்க நிகழ்ச்சி பொதுக் கூட்டம் நாகர்கோவிலில் நடைபெற்றது. இதில், அகில பாரத இணைச் செயலாளர் ஸ்தானுமாலயன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அக்டோபர் 1-ம் தேதி தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் விஷ்வ ஹிந்து பரிஷத் 60-வது ஆண்டு தொடக்க நிகழ்ச்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதேசமயம், அக்டோபர் 3-ம் தேதி தேதி விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங்தள் இளைஞர்கள் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு நினைவு அஞ்சலி செலுத்தும் விதமாகச் சிவகாசி சென்றபோது, அங்கிருந்த காவல்துறை நோட்டீஸ் விநியோகம் செய்யக்கூட அனுமதிக்கவில்லை.

அதேபோல, அக்டோபர் 4-ம் தேதி மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நடைபெறவிருந்த விஷ்வ ஹிந்து பரிஷத் 60-ம் ஆண்டு தொடக்க நிகழ்ச்சி பொதுக்கூட்டத்திற்கும் அனுமதி இல்லை என்று காவல்துறையினர் மறுப்புத் தெரிவித்து விட்டனர். ஆனால், மாநில, மாவட்ட நிர்வாகிகள் அன்றையதினம் மாலை உசிலம்பட்டியில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலை முன்பு இந்து விரோத தி.மு.க. அரசின் இச்செயலை கண்டித்து மனமுருகி வேண்டி முறையிட்டனர். இதில், கலந்து கொண்டவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

இது தவிர, அக்டோபர் 6-ம் தேதி சிவகங்கை மாவட்டம் சிங்கப்புணரி பகுதியில் நடைபெறவிருந்த விஷ்வ ஹிந்து பரிஷத் 60-ம் ஆண்டு தொடக்க நிகழ்ச்சி பொதுக்கூட்டத்துக்கும் அனுமதி இல்லை என்கிற உத்தரவை காவல்துறை பிறப்பித்திருந்தது. அதேபோல, அக்டோபர் 8-ம் தேதியான நாளை திருச்சியில் நடைபெறவுள்ள விஷ்வ ஹிந்து பரிஷத் 60-ம் ஆண்டு தொடக்க நிகழ்ச்சி மற்றும் பொதுக்கூட்டத்துக்கும் காவல்துறை அனுமதி மறுத்திருக்கிறது. இதனால், இது தமிழகமா அல்லது தாலிபான் நாடா? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது” என்று விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங்தள் நிர்வாகிகள் கேள்வி எழுப்பி இருப்பதோடு, கடும் கண்டனமும் தெரிவித்திருக்கின்றனர்.

Tags: tamilnaduVHP
ShareTweetSendShare
Previous Post

கேரளாவில் டாக்டர் மோகன் பகவத்!

Next Post

தூதரக அதிகாரிகளை திரும்பப் பெற்ற கனடா!

Related News

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies