பஜ்ரங்தள் யாத்திரைக்குத் தடை: தமிழகமா அல்லது தாலிபான் நாடா?
Sep 12, 2026, 11:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பஜ்ரங்தள் யாத்திரைக்குத் தடை: தமிழகமா அல்லது தாலிபான் நாடா?

விஷ்வ ஹிந்து பரிஷத் கேள்வி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 7, 2023, 01:37 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழகத்தில் பஜ்ரங்தள் யாத்திரைக்கு தமிழக அரசு தடை விதித்திருக்கும் நிலையில், இது தமிழகமா அல்லது தாலிபான் நாடா என்று விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு கேள்வி எழுப்பி இருக்கிறது.

இதுகுறித்து விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், “தேசம் காப்போம் தெய்வீகம் காப்போம் என்று இந்து பஜ்ரங்தள் யாத்திரை செப்டம்பர் 29-ம் தேதி முதல் அக்டோபர் 15-ம் தேதி வரை பாரதம் முழுவதும் நடத்தத் திட்டமிடப்பட்டது. இந்த யாத்திரை பிற மாநிலங்களில் இந்துக்களின் ஆதரவுடன் மிகச் சிறப்பாக எந்தவித பிரச்சனைகளும் இல்லாமல் நடந்து வருகிறது. ஆனால், தமிழகத்தில் மட்டும் இந்து விரோத தி.மு.க. அரசு வேண்டுமென்றே விஷ்வ ஹிந்து பரிஷத்தின் 60-வது ஆண்டு துவக்க விழா மற்றும் பொதுக் கூட்டங்கள், இளைஞர்கள் யாத்திரையை நடத்தத் தடை விதித்திருக்கிறது.

கடந்த 30-ம் தேதி கன்னியாகுமரியில் பாரத மாதா பூஜையுடன் தமிழகத்தில் விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங்தள் இளைஞர்கள் இணைந்து தேசபக்தி சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியை நடத்தவிருந்தனர். ஆனால், அவர்களை பாரத மாதா பூஜை செய்யாமல் தடுத்து காவல்துறையினர் கைது செய்தனர். இதனால், மீண்டும் அதே இடத்தில் பாரத மாதா பூஜை செய்ய வேண்டும் என்று விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங்தள் இளைஞர்கள் உணவு உண்ணாமல் தர்ணாவில் ஈடுபட்டனர். பின்னர், இரவு விடுவிக்கப்பட்டு அதே இடத்தில் பாரத மாத பூஜை நடைபெற்றது.

மேலும், அதேநாளில் விஷ்வ ஹிந்து பரிஷத்தின் 60-வது ஆண்டு தொடக்க நிகழ்ச்சி பொதுக் கூட்டம் நாகர்கோவிலில் நடைபெற்றது. இதில், அகில பாரத இணைச் செயலாளர் ஸ்தானுமாலயன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அக்டோபர் 1-ம் தேதி தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் விஷ்வ ஹிந்து பரிஷத் 60-வது ஆண்டு தொடக்க நிகழ்ச்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதேசமயம், அக்டோபர் 3-ம் தேதி தேதி விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங்தள் இளைஞர்கள் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு நினைவு அஞ்சலி செலுத்தும் விதமாகச் சிவகாசி சென்றபோது, அங்கிருந்த காவல்துறை நோட்டீஸ் விநியோகம் செய்யக்கூட அனுமதிக்கவில்லை.

அதேபோல, அக்டோபர் 4-ம் தேதி மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நடைபெறவிருந்த விஷ்வ ஹிந்து பரிஷத் 60-ம் ஆண்டு தொடக்க நிகழ்ச்சி பொதுக்கூட்டத்திற்கும் அனுமதி இல்லை என்று காவல்துறையினர் மறுப்புத் தெரிவித்து விட்டனர். ஆனால், மாநில, மாவட்ட நிர்வாகிகள் அன்றையதினம் மாலை உசிலம்பட்டியில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலை முன்பு இந்து விரோத தி.மு.க. அரசின் இச்செயலை கண்டித்து மனமுருகி வேண்டி முறையிட்டனர். இதில், கலந்து கொண்டவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

இது தவிர, அக்டோபர் 6-ம் தேதி சிவகங்கை மாவட்டம் சிங்கப்புணரி பகுதியில் நடைபெறவிருந்த விஷ்வ ஹிந்து பரிஷத் 60-ம் ஆண்டு தொடக்க நிகழ்ச்சி பொதுக்கூட்டத்துக்கும் அனுமதி இல்லை என்கிற உத்தரவை காவல்துறை பிறப்பித்திருந்தது. அதேபோல, அக்டோபர் 8-ம் தேதியான நாளை திருச்சியில் நடைபெறவுள்ள விஷ்வ ஹிந்து பரிஷத் 60-ம் ஆண்டு தொடக்க நிகழ்ச்சி மற்றும் பொதுக்கூட்டத்துக்கும் காவல்துறை அனுமதி மறுத்திருக்கிறது. இதனால், இது தமிழகமா அல்லது தாலிபான் நாடா? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது” என்று விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங்தள் நிர்வாகிகள் கேள்வி எழுப்பி இருப்பதோடு, கடும் கண்டனமும் தெரிவித்திருக்கின்றனர்.

Tags: tamilnaduVHP
Share
Tweet
SendShare
Previous Post

கேரளாவில் டாக்டர் மோகன் பகவத்!

Next Post

தூதரக அதிகாரிகளை திரும்பப் பெற்ற கனடா!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies