சிக்கிம் வெள்ளம்: பலி எண்ணிக்கை 45 ஆக உயர்வு! 103 பேரின் கதி?
Mar 15, 2026, 07:41 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிக்கிம் வெள்ளம்: பலி எண்ணிக்கை 45 ஆக உயர்வு! 103 பேரின் கதி?

22,000-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 7, 2023, 01:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிக்கிம் மாநிலத்தில் திடீர் மேகவெடிப்பால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்திருக்கிறது. அதேசமயம், 23 இராணுவ வீரர்கள் உட்பட 103 பேரின் கதி என்னவானது என்பது தெரியவில்லை.

சிக்கிம் மாநிலத்தில் கடந்த 2-ம் தேதி மழை பெய்யத் தொடங்கிய நிலையில், 3-ம் தேதி நள்ளிரவுக்கு மேல், வடக்கு பகுதியான லாச்சென் பள்ளத்தாக்கில் திடீரென மேக வெடிப்பு ஏற்பட்டது. இதனால், 100 மி.மீ. அளவுக்கு கனமழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக, லோனாக் ஏரியின் கரை உடைந்து டீஸ்டா ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், ஆற்றின் இருபுற கரைகளையும் உடைத்துக் கொண்டு சீறிப் பாய்ந்த வெள்ளம் கிராமங்கள் மற்றும் நகரங்களை மூழ்கடித்தது.

மேலும், வெள்ளத்தால் சுங்தாங் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. இதையடுத்து, அணை உடையும் அபாயம் ஏற்பட்டதால், அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக, அணையின் கீழ் பகுதிகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இந்த காட்டாற்று வெள்ளத்தில் 23 ராணுவ வீரர்கள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் அடித்துச் செல்லப்பட்டனர். இந்த வெள்ளத்தால் காங்டாக், நாம்சி, மங்கன் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன.

குறிப்பாக, மங்கன் மாவட்டத்தின் சுங்தாங் நகரம் மிகவும் மோசமான பாதிப்பை எதிர்கொண்டிருக்கிறது. இந்நகரின் 80 சதவீத பகுதிகள் வெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்டிருக்கின்றன. மங்கன், காங்டாக் மற்றும் நாம்சி ஆகிய மாவட்டங்களில் 11 பாலங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு விட்டன. அதேபோல, நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் முழுமையாக சேதமடைந்து விட்டன. ஏராளமான வீடுகளில் பாதியளவு சேதமடைந்திருக்கின்றன.

எல்லாவற்றுக்கும் மேலாக, இந்த வெள்ளப்பெருக்கால் இதுவரை 45 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். 26 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது தவிர, 23 இராணுவ வீரர்கள் உட்பட 103 பேரின் கதி என்ன? என்பது இதுவரை தெரியவில்லை. எனவே, பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. எனினும், மாயமானவர்களை தேடும் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.

மழை, வெள்ளத்தால் 22,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், இதுவரை சுமார் 2,000 பேர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் பாதித்த பகுதிகளை நேரில் பார்வையிட்ட மாநில முதல்வர் பிரேம் சிங் தமாங், மக்கள் விழிப்புடன் இருக்குமாறும், பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடையுமாறும் கேட்டுக்கொண்டார்.

மேலும், பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வுக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் அரசு செய்து வருவதாகவும், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 4 லட்சம் ரூபாய் நிவாரணமும், வீடுகளை இழந்த மக்களுக்கு உடனடி நிவாரணமாக 2,000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்.

Tags: Floodssikkim
ShareTweetSendShare
Previous Post

தூதரக அதிகாரிகளை திரும்பப் பெற்ற கனடா!

Next Post

தமிழகத்தை வஞ்சிக்கும் காங்கிரஸ் – 11 -ம் தேதி டெல்டாவில் முழு அடைப்பு போராட்டம்

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies