வெடிகுண்டு மிரட்டல் : என் ஐ ஏ தீவிர விசாரணை !
Jan 14, 2026, 06:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வெடிகுண்டு மிரட்டல் : என் ஐ ஏ தீவிர விசாரணை !

மும்பை காவல்துறைக்கு வந்த இ மெயிலால் பரபரப்பு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 7, 2023, 03:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரதமர் நரேந்திர மோடி மீதும், அகமதாபாத் கிரிக்கெட் ஸ்டேடியம் மீதும் வெடிகுண்டு தாக்குதல் நடத்துவோம் என்று பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோயின் ஆதரவாளர்கள் மும்பை காவல்துறையினருக்கு இ மெயில் மூலம் மிரட்டல் விடுத்திருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய். தற்போது டெல்லி திகார் சிறையில் இருக்கும் இவர் மீது 25-க்கும் மேற்பட்ட கொலை வழக்குகள் இருக்கின்றன. மேலும், நாடு முழுவதும் உள்ள கேங்ஸ்டர் கும்பலுடன் மிக நெருங்கிய தொடர்பில் இருக்கும் லாரன்ஸ் பிஷ்னோயின் கட்டுப்பாட்டில், 5 மாநிலங்களில் 700-க்கும் மேற்பட்ட துப்பாக்கி சுடும் வீரர்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

பஞ்சாப் பாடகர் மற்றும் இசைக் கலைஞரான சித்து மூஸ்வாலா கொலை வழக்கிலும் முக்கியக் குற்றவாளி இந்த லாரன்ஸ் பிஷ்னோய்தான். பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் உட்பட டாப் 10 பிரபலங்களை கொல்ல இவர் சதித்திட்டம் தீட்டி இருந்தது சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. கனடாவில் கடந்த செப்டம்பர் மாதம் 21-ம் காலிஸ்தான் தீவிரவாதி சுக்தூல் சிங் கொலை செய்யப்பட்ட வழக்கிலும் இவருக்கு தொடர்பு இருக்கிறது.

இந்த நிலையில், மகாராஷ்டிர மாநிலம் மும்பை காவல்துறைக்கு இன்று ஒரு இ-மெயிலில் வந்தது. அந்த இ மெயிலில் தங்களது தலைவர் லாரன்ஸ் பிஷ்னோய்க்கு 500 கோடி ரூபாய் தர வேண்டும். இல்லையெனில், உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறும் அகமதாபாத் கிரிக்கெட் ஸ்டேடியம் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்துவோம்.

மேலும், பிரதமர் மோடி மீதும் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்துவோம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, மேற்கண்ட இ மெயில் மிரட்டல் தொடர்பாக மும்பை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த இ மெயில் கடிதம் குறித்து தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகிறார்கள். பிரதமருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கும் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags: PM ModiGangsterLawrence bishnoyMumbai PoliceE mail
ShareTweetSendShare
Previous Post

39 தொகுதிகளுக்கு தேர்தல் பொறுப்பாளர்கள் – அண்ணாமலை உத்தரவு

Next Post

இஸ்ரேலை நோக்கிப் பாய்ந்த 5,000 ஏவுகணைகள்: மேயர் உட்பட 5 பேர் பலி!

Related News

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

Load More

அண்மைச் செய்திகள்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies