வெடிகுண்டு மிரட்டல் : என் ஐ ஏ தீவிர விசாரணை !
Aug 24, 2026, 09:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வெடிகுண்டு மிரட்டல் : என் ஐ ஏ தீவிர விசாரணை !

மும்பை காவல்துறைக்கு வந்த இ மெயிலால் பரபரப்பு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 7, 2023, 03:54 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பிரதமர் நரேந்திர மோடி மீதும், அகமதாபாத் கிரிக்கெட் ஸ்டேடியம் மீதும் வெடிகுண்டு தாக்குதல் நடத்துவோம் என்று பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோயின் ஆதரவாளர்கள் மும்பை காவல்துறையினருக்கு இ மெயில் மூலம் மிரட்டல் விடுத்திருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய். தற்போது டெல்லி திகார் சிறையில் இருக்கும் இவர் மீது 25-க்கும் மேற்பட்ட கொலை வழக்குகள் இருக்கின்றன. மேலும், நாடு முழுவதும் உள்ள கேங்ஸ்டர் கும்பலுடன் மிக நெருங்கிய தொடர்பில் இருக்கும் லாரன்ஸ் பிஷ்னோயின் கட்டுப்பாட்டில், 5 மாநிலங்களில் 700-க்கும் மேற்பட்ட துப்பாக்கி சுடும் வீரர்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

பஞ்சாப் பாடகர் மற்றும் இசைக் கலைஞரான சித்து மூஸ்வாலா கொலை வழக்கிலும் முக்கியக் குற்றவாளி இந்த லாரன்ஸ் பிஷ்னோய்தான். பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் உட்பட டாப் 10 பிரபலங்களை கொல்ல இவர் சதித்திட்டம் தீட்டி இருந்தது சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. கனடாவில் கடந்த செப்டம்பர் மாதம் 21-ம் காலிஸ்தான் தீவிரவாதி சுக்தூல் சிங் கொலை செய்யப்பட்ட வழக்கிலும் இவருக்கு தொடர்பு இருக்கிறது.

இந்த நிலையில், மகாராஷ்டிர மாநிலம் மும்பை காவல்துறைக்கு இன்று ஒரு இ-மெயிலில் வந்தது. அந்த இ மெயிலில் தங்களது தலைவர் லாரன்ஸ் பிஷ்னோய்க்கு 500 கோடி ரூபாய் தர வேண்டும். இல்லையெனில், உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறும் அகமதாபாத் கிரிக்கெட் ஸ்டேடியம் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்துவோம்.

மேலும், பிரதமர் மோடி மீதும் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்துவோம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, மேற்கண்ட இ மெயில் மிரட்டல் தொடர்பாக மும்பை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த இ மெயில் கடிதம் குறித்து தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகிறார்கள். பிரதமருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கும் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags: PM ModiGangsterLawrence bishnoyMumbai PoliceE mail
Share
Tweet
SendShare
Previous Post

39 தொகுதிகளுக்கு தேர்தல் பொறுப்பாளர்கள் – அண்ணாமலை உத்தரவு

Next Post

இஸ்ரேலை நோக்கிப் பாய்ந்த 5,000 ஏவுகணைகள்: மேயர் உட்பட 5 பேர் பலி!

Related News

ஒரு கழுதையின் விலை ரூ.3 லட்சம் : சீனாவிற்கு ஏற்றுமதியாகும் பாகிஸ்தான் கழுதைகள் – சிறப்பு தொகுப்பு!

டெல்லியில் நாளை கூடுகிறது காவிரி நீர் மேலாண்மை ஆணையம் – நீர் திறப்பு குறித்து ஆலோசனை!

பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் – பேரவையில் இபிஎஸ் வலியுறுத்தல்!

பரந்தூர் விமான நிலைய விவகாரம் குறித்து பேச அனுமதி மறுப்பு – திமுக வெளிநடப்பு!

பத்மஸ்ரீ விருது பெற்ற தாமோதரனின் சுயசரிதை நூல் – ராம்நாத் கோவிந்த் வெளியிட்டார்!

பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்படுகிறது – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பொங்கல் பண்டிகை முதல் ஆண்டுக்கு 3 விலையில்லா எரிவாயு சிலிண்டர் – முதல்வர் விஜய் அறிவிப்பு!

அக்டோபர் 2 முதல் மகளிருக்கான கட்டணமில்லா பயணத் திட்டம் விரிவுபடுத்தப்படும் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக ஒரு சொட்டு கச்சா எண்ணெய்கூட செல்ல அனுமதிக்க மாட்டோம் – ஈரான் எச்சரிக்கை!

எரிவாயு தட்டுப்பாடு : வங்கதேசத்தில் தொழிற்சாலைகள் மூடல்!

சென்னையில் விடிய விடிய வெளுத்து வாங்கிய மழை: தரமணியில் அதிகபட்சமாக 49.5 மி.மீ பதிவு!

இறுதிக்கட்டத்தில் இந்திய அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் – செர்ஜியோ கோர் தகவல்!

காரைக்காலில் சிகிச்சைக்காக அரசு ஆம்புலன்சில் சென்ற பெண், ஆக்சிஜன் டியூப் வெடித்து உயிரிழந்த சோகம்!

டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் தேசிய பாதுகாப்பு வியூக மாநாடு – பயங்கரவாதம், போதைப்பொருள் தடுப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை!

திறமையாளர்களின் முதல் தேர்வாக இந்தியாவை மாற்ற வேண்டும்; பிரதமர் மோடி

ரூ.1.81 லட்சம் கோடி கடன்; தவிக்கும் தமிழக அரசு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies