இஸ்ரேலில் இந்தியர்கள் உஷார்: இந்திய தூதரகம் எச்சரிக்கை!
Mar 15, 2026, 02:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இஸ்ரேலில் இந்தியர்கள் உஷார்: இந்திய தூதரகம் எச்சரிக்கை!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 7, 2023, 07:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இஸ்ரேல் நாட்டின் மீது காஸா நாட்டிலுள்ள ஹமாஸ் தீவிரவாதிகளும், பாலஸ்தீன இஸ்லாமிய ஜிகாத் தீவிரவாதிகளும் இன்று அதிகாலை முதல் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தி இருக்கிறது.

இஸ்ரேல் நாட்டுக்கும், பாலஸ்தீன நாட்டுக்கும் இடையே நீண்டகாலமாகவே மோதல் இருந்து வருகிறது. இந்த சூழலில், இரு நாடுகளுக்கும் இடையே இருக்கும் தன்னாட்சி அதிகாரம் பெற்ற காஸா நாட்டில் இருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகள், பாலஸ்தீன இஸ்லாமிய ஜிகாத் தீவிரவாதிகள் உள்ளிட்ட ஆயுதக் குழுக்கள் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக இருந்து வருகின்றன. இதனால், இஸ்ரேலுக்கு எதிராக அவ்வப்போது தீவிரவாத செயல்களை அரங்கேற்றி வருகின்றன.

இந்த நிலையில், இன்று அதிகாலை முதல் இத்தீவிரவாதிகள் இஸ்ரேல் நாட்டின் மீது ஏவுகணைத் தாக்குதல், நேரடித் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், அந்நாட்டைச் சேர்ந்த மேயர் உட்பட 22 பேர் உயிரிழந்தும், 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் இருக்கும் நிலையில், இஸ்ரேல் நாட்டில் வசிக்கும் இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து இஸ்ரேல் நாட்டிலுள்ள இந்திய தூதரகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “இஸ்ரேலின் தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, இஸ்ரேலில் உள்ள அனைத்து இந்தியக் குடிமக்களும் விழிப்புடன் இருக்குமாறும், உள்ளூர் அதிகாரிகளின் ஆலோசனைப்படி பாதுகாப்பு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தயவு செய்து எச்சரிக்கையுடன் செயல்படவும். தேவையற்ற நடமாட்டத்தைத் தவிர்க்கவும். தனியாக இருப்பதை விட பாதுகாப்பு முகாம்களில் தங்க வேண்டும். உள்ளூர் நிர்வாகம் வெளியிடும்பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றவும். கூடுதல் தகவலுக்கு தயவுசெய்து இஸ்ரேலிய ஹோம் ஃப்ரண்ட் கமாண்ட் இணையதளத்தைப் பார்க்கவும் (https://www.oref.org.il/en).

அவசரத் தேவை ஏற்பட்டால், தயவுசெய்து இஸ்ரேலில் உள்ள தூதரக அதிகாரிகளான எங்களை +97235226748 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும். அல்லது cons1.telaviv@mea.gov.in என்ற மெயிலுக்கு குறுஞ்செய்தி அனுப்பவும். மேலதிக வழிகாட்டுதல்களுக்கு தூதரகப் பணியாளர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள்” என்று தெரிவித்திருக்கிறது.

Tags: INDIANSadviceIsrael
ShareTweetSendShare
Previous Post

சிறுதானியம் மீதான வரி குறைப்பு: ஜிஎஸ்டி கவுன்சிலில் முடிவு

Next Post

செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பு : அடையாறு கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies