இஸ்ரேலில் இந்தியர்கள் உஷார்: இந்திய தூதரகம் எச்சரிக்கை!
Jul 25, 2025, 08:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இஸ்ரேலில் இந்தியர்கள் உஷார்: இந்திய தூதரகம் எச்சரிக்கை!

Web Desk by Web Desk
Oct 7, 2023, 07:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இஸ்ரேல் நாட்டின் மீது காஸா நாட்டிலுள்ள ஹமாஸ் தீவிரவாதிகளும், பாலஸ்தீன இஸ்லாமிய ஜிகாத் தீவிரவாதிகளும் இன்று அதிகாலை முதல் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தி இருக்கிறது.

இஸ்ரேல் நாட்டுக்கும், பாலஸ்தீன நாட்டுக்கும் இடையே நீண்டகாலமாகவே மோதல் இருந்து வருகிறது. இந்த சூழலில், இரு நாடுகளுக்கும் இடையே இருக்கும் தன்னாட்சி அதிகாரம் பெற்ற காஸா நாட்டில் இருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகள், பாலஸ்தீன இஸ்லாமிய ஜிகாத் தீவிரவாதிகள் உள்ளிட்ட ஆயுதக் குழுக்கள் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக இருந்து வருகின்றன. இதனால், இஸ்ரேலுக்கு எதிராக அவ்வப்போது தீவிரவாத செயல்களை அரங்கேற்றி வருகின்றன.

இந்த நிலையில், இன்று அதிகாலை முதல் இத்தீவிரவாதிகள் இஸ்ரேல் நாட்டின் மீது ஏவுகணைத் தாக்குதல், நேரடித் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், அந்நாட்டைச் சேர்ந்த மேயர் உட்பட 22 பேர் உயிரிழந்தும், 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் இருக்கும் நிலையில், இஸ்ரேல் நாட்டில் வசிக்கும் இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து இஸ்ரேல் நாட்டிலுள்ள இந்திய தூதரகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “இஸ்ரேலின் தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, இஸ்ரேலில் உள்ள அனைத்து இந்தியக் குடிமக்களும் விழிப்புடன் இருக்குமாறும், உள்ளூர் அதிகாரிகளின் ஆலோசனைப்படி பாதுகாப்பு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தயவு செய்து எச்சரிக்கையுடன் செயல்படவும். தேவையற்ற நடமாட்டத்தைத் தவிர்க்கவும். தனியாக இருப்பதை விட பாதுகாப்பு முகாம்களில் தங்க வேண்டும். உள்ளூர் நிர்வாகம் வெளியிடும்பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றவும். கூடுதல் தகவலுக்கு தயவுசெய்து இஸ்ரேலிய ஹோம் ஃப்ரண்ட் கமாண்ட் இணையதளத்தைப் பார்க்கவும் (https://www.oref.org.il/en).

அவசரத் தேவை ஏற்பட்டால், தயவுசெய்து இஸ்ரேலில் உள்ள தூதரக அதிகாரிகளான எங்களை +97235226748 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும். அல்லது cons1.telaviv@mea.gov.in என்ற மெயிலுக்கு குறுஞ்செய்தி அனுப்பவும். மேலதிக வழிகாட்டுதல்களுக்கு தூதரகப் பணியாளர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள்” என்று தெரிவித்திருக்கிறது.

Tags: INDIANSadviceIsrael
ShareTweetSendShare
Previous Post

சிறுதானியம் மீதான வரி குறைப்பு: ஜிஎஸ்டி கவுன்சிலில் முடிவு

Next Post

செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பு : அடையாறு கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!

Related News

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் – என்னென்ன இலாபம்?

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

Load More

அண்மைச் செய்திகள்

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

தொழிலாளர்கள் தங்கும் விடுதி : திறந்து 3 மாதங்களாகியும் செயல்படாத அவலம்!

மத்திய அரசின் நிதி எங்கு தான் செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

கோவை குண்டுவெடிப்பில் கைதான டெய்லர் ராஜா மீது மேலும் 2 வழக்குகள்!

சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு : நாடு போலீஸ் ராஜ்ஜியத்திற்கு செல்கிறதோ?- சென்னை உயர்நீதிமன்றம் காட்டம்!

கங்கை கொண்ட சோழபுரம் பிரதமர் மோடி வருகை : ஹெலிகாப்டரை தரையிறக்கி பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை!

டிரான்ஸ்பார்மர்களை கொள்முதல் டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு : செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

நவீன ட்ரோன்களை உருவாக்க வேண்டியது அவசியம் : முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சவுஹான்

திருப்பூர் : கர்ப்பிணி பெண்ணுக்கு காலாவதியான ஓ.ஆர்.எஸ் பவுடர் வழங்கியதால் அதிர்ச்சி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies