இஸ்ரேல் பதிலடி: பாலஸ்தீனியர்கள் 200 பேர் பலி!
Jan 14, 2026, 05:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இஸ்ரேல் பதிலடி: பாலஸ்தீனியர்கள் 200 பேர் பலி!

1,600-க்கும் மேற்பட்டோர் காயம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 8, 2023, 01:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஹமாஸ் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் காஸா பகுதியில் வசிக்கும் பாலஸ்தீனியர்கள் 198 பேர் உயிரிழந்ததாகவும், 1,600-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன நாடுகளுக்கு இடையே இருக்கும் நகரம் காஸா. இது தன்னாட்சி பெற்ற நகரமாக இருந்தாலும், பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஹமாஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில்தான் இருந்து வருகிறது. மேலும், இந்நகரத்தில் ஹமாஸ் தீவிரவாதிகளைப் போல, பாலஸ்தீன இஸ்லாமிய ஜிகாத் தீவிரவாதிகள் உள்ளிட்ட பல்வேறு தீவிரவாதக் குழுக்களும் செயல்பட்டு வருகின்றன. இத்தீவிரவாதக் குழுக்கள் அனைத்தும் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதால், அவ்வப்போது இஸ்ரேல் நாட்டின் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்த நிலையில், காஸாவில் இருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகள் நேற்று காலை இஸ்ரேல் நாட்டின் மீது ஏவுகணைத் தாக்குதல் மழை பொழிந்தனர். மேலும், இஸ்ரேல் நகருக்குள் புகுந்து கண்ணில் பட்ட மக்களை எல்லாம் சுட்டுக்கொன்று ருத்ர தாண்டவமாடினர். மேலும், இஸ்ரேல் இராணுவத்தினர் பலரையும், அப்பாவி பொதுமக்களையும் பணையக் கைதிகளாகச் சிறைப்பிடித்துச் சென்றனர். ஹமாஸ் தீவிரவாதிகளின் இத்தாக்குதலில் 300-க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் பலியானதாகவும், 1,500-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

இதையடுத்து, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “ஹமாஸ் தீவிரவாதிகள் ஒரு கொடூரமான மற்றும் தீய போரை ஆரம்பித்து, அப்பாவி பொதுமக்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்களைக் கொன்றிருக்கிறார்கள். இப்போரில் நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம். அதேசமயம், எங்களது எதிரி யோசித்துப் பார்க்க முடியாத அளவுக்கான விலையைக் கொடுக்க நேரிடும்” என்று கூறியிருந்தார்.

இதைத் தொடர்ந்து, ஹமாஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக, இஸ்ரேல் இராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதல் மூலம் காஸா நகரம் முழுவதும் மரண ஓலங்களை கேட்க வைத்திருக்கிறது. தாக்குதல் நடந்த சிறிது நேரத்திலேயே சுதாரித்துக் கொண்ட இஸ்ரேல் இராணுவம், கடும் பதிலடித் தாக்குதலில் ஈடுபட்டது. இத்தாக்குதலின் விளைவை உணர்ந்த காஸா பகுதி மக்கள், குறிப்பாக இஸ்ரேல் எல்லையை ஒட்டிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் அங்கிருந்து குடும்பம் குடும்பமாக வெளியேறி வருகின்றனர்.

இவ்வாறு இஸ்ரேல் எல்லைப் பகுதியிலிருந்து காஸாவாசிகள் வெளியேறிக் கொண்டிருக்க, இஸ்ரேல் படைகள் தெற்கு நோக்கி விரைந்து கொண்டிருக்கின்றன. இதுகுறித்துீ இஸ்ரேல் பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி, “தெற்கை நோக்கி இஸ்ரேல் வீரர்கள் விரைந்துள்ளனர். காஸாவில் இருந்து இஸ்ரேலுக்குள் ஊடுருவிய ஹமாஸ் பயங்கரவாதிகள் எங்கெங்கு இருக்கின்றனர் என்பதை அறிந்து முன்னேறுகின்றனர்” என்று கூறியிருக்கிறார்.

இவர் இவ்வாறு தெரிவித்த சில மணி நேரங்களில் காஸா நகரம் கடும் தாக்குதலுக்கு உள்ளானது. காஸா நகரத்தின் மீது இஸ்ரேல் குண்டு மழைகளை பொழிந்தது. இதனால், எங்கு பார்த்தாலும் மரண ஓலங்கள் கேட்டுக் கொண்டிருக்கின்றன. மருத்துவமனைகள் நிரம்பி வழியும் நிலையில், மருத்துவப் பணியாளர்கள் பலரும் தாக்குதலில் கொல்லப்பட்டதாக தகவல்கள் வருகின்றன. காஸா நகரம் முழுவதிலும் வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டது. இத்தாக்குதலில் 200-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் பலியானதாகவும், 1,600-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

Tags: WARIsraelKaza
ShareTweetSendShare
Previous Post

ஆப்கானில்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 2,000 பேர் பலி!

Next Post

இஸ்ரேல் பலி எண்ணிக்கை 300 ஆக உயர்வு!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies