இஸ்ரேல் பலி எண்ணிக்கை 300 ஆக உயர்வு!
Apr 29, 2026, 08:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இஸ்ரேல் பலி எண்ணிக்கை 300 ஆக உயர்வு!

1,500-க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 8, 2023, 01:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள். மேலும், 1,500-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்துக்கு இடையே இருக்கும் தன்னாட்சி அதிகாரம் பெற்ற நகரம் காஸா. இந்நகரத்தின் காஸா முனைப் பகுதி ஹமாஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. மேலும், இங்கு பாலஸ்தீன இஸ்லாமிய ஜிகாத் உள்ளிட்ட பல்வேறு தீவிரவாத இயக்கங்களும் செயல்பட்டு வருகின்றன. ஒட்டுமொத்த தீவிரவாதிகளும் ஒருங்கிணைந்து பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக இஸ்ரேலுக்கு எதிராக தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அடிக்கடி தாக்குதல் நடத்துவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது.

இந்த நிலையில், நேற்று அதிகாலை திடீரென காஸா தீவிரவாதிகள் இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தினர். ஒரே நேரத்தில் 5,000-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் தாக்கியதில் இஸ்ரேல் திக்குமுக்காடிப் போனது. மேலும், இஸ்ரேல் சுதாரிப்பதற்குள், காஸா தீவிரவாதிகள் அந்நாட்டுக்குள் ஊடுருவி, கண்ணில் பட்ட மக்களை எல்லாம் சுட்டுத் தள்ளினர். இக்காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி காண்போர் நெஞ்சை பதைபதைக்க வைத்திருக்கிறது.

காஸா தீவிரவாதிகளின் இத்தாக்குதலில் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த குழந்தைகள், முதியோர், பெண்கள் என 300-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் பலியாகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், 1,500-க்கம் மேற்பட்டோர் படுகாயமடைந்த மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. மேலும், இத்தாக்குதலில், இஸ்ரேல் நாட்டின் மேயர் ஒருவரும் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

இது ஒருபுறம் இருக்க, இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த ஏராளமான இராணுவ வீரர்களை சிறைப்பிடித்துச் சென்றிருக்கிறார்கள். அதேபோல, அப்பாவிப் பொதுமக்கள் பலரையும் காஸா தீவிரவாதிகள் பணையக் கைதிகளாக சிறைப்பிடித்து வைத்திருக்கிறார்கள். மேலும், இத்தாக்குதலை அல் அக்ஸா புயல் என்று ஹமாஸ் தீவிரவாதப் படையின் தளபதி முகமது அல்டைஃப் கூறியிருக்கிறார்.

Tags: WARIsraelKaza
ShareTweetSendShare
Previous Post

இஸ்ரேல் பதிலடி: பாலஸ்தீனியர்கள் 200 பேர் பலி!

Next Post

பட்டாசுக் கடை வெடி விபத்தில் 14 பேர் பலி – அத்திப்பள்ளியில் நடந்தது என்ன?

Related News

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

சிக்கிம் மாநில உதய தின விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மும்பை அருகே கலிமா ஓதக் கூறி பாதுகாவலர்களை கத்தியால் தாக்கிய இளைஞர் கைது!

விழுப்புரத்தில் நடைபெற்ற மிஸ் கூவாகம் 2026 அழகி போட்டி – கோவை சூர்யாகுட்டி முதலிடம்!

சிக்கிமில் கால்பந்து விளையாடிய பிரதமர் – உத்வேகமும், புத்துணர்ச்சியும் அளிப்பதாக பதிவு!

கட்டண சீட்டு வாங்கியும் வெளியே காத்திருந்தோம் – மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தை காண சென்ற பக்தர்கள் குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies