இஸ்ரேல் பலி எண்ணிக்கை 300 ஆக உயர்வு!
Sep 12, 2026, 12:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இஸ்ரேல் பலி எண்ணிக்கை 300 ஆக உயர்வு!

1,500-க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 8, 2023, 01:01 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள். மேலும், 1,500-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்துக்கு இடையே இருக்கும் தன்னாட்சி அதிகாரம் பெற்ற நகரம் காஸா. இந்நகரத்தின் காஸா முனைப் பகுதி ஹமாஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. மேலும், இங்கு பாலஸ்தீன இஸ்லாமிய ஜிகாத் உள்ளிட்ட பல்வேறு தீவிரவாத இயக்கங்களும் செயல்பட்டு வருகின்றன. ஒட்டுமொத்த தீவிரவாதிகளும் ஒருங்கிணைந்து பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக இஸ்ரேலுக்கு எதிராக தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அடிக்கடி தாக்குதல் நடத்துவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது.

இந்த நிலையில், நேற்று அதிகாலை திடீரென காஸா தீவிரவாதிகள் இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தினர். ஒரே நேரத்தில் 5,000-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் தாக்கியதில் இஸ்ரேல் திக்குமுக்காடிப் போனது. மேலும், இஸ்ரேல் சுதாரிப்பதற்குள், காஸா தீவிரவாதிகள் அந்நாட்டுக்குள் ஊடுருவி, கண்ணில் பட்ட மக்களை எல்லாம் சுட்டுத் தள்ளினர். இக்காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி காண்போர் நெஞ்சை பதைபதைக்க வைத்திருக்கிறது.

காஸா தீவிரவாதிகளின் இத்தாக்குதலில் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த குழந்தைகள், முதியோர், பெண்கள் என 300-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் பலியாகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், 1,500-க்கம் மேற்பட்டோர் படுகாயமடைந்த மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. மேலும், இத்தாக்குதலில், இஸ்ரேல் நாட்டின் மேயர் ஒருவரும் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

இது ஒருபுறம் இருக்க, இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த ஏராளமான இராணுவ வீரர்களை சிறைப்பிடித்துச் சென்றிருக்கிறார்கள். அதேபோல, அப்பாவிப் பொதுமக்கள் பலரையும் காஸா தீவிரவாதிகள் பணையக் கைதிகளாக சிறைப்பிடித்து வைத்திருக்கிறார்கள். மேலும், இத்தாக்குதலை அல் அக்ஸா புயல் என்று ஹமாஸ் தீவிரவாதப் படையின் தளபதி முகமது அல்டைஃப் கூறியிருக்கிறார்.

Tags: WARIsraelKaza
Share
Tweet
SendShare
Previous Post

இஸ்ரேல் பதிலடி: பாலஸ்தீனியர்கள் 200 பேர் பலி!

Next Post

பட்டாசுக் கடை வெடி விபத்தில் 14 பேர் பலி – அத்திப்பள்ளியில் நடந்தது என்ன?

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies