பட்டாசுக் கடை வெடி விபத்தில் 14 பேர் பலி – அத்திப்பள்ளியில் நடந்தது என்ன?
Aug 12, 2026, 04:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பட்டாசுக் கடை வெடி விபத்தில் 14 பேர் பலி – அத்திப்பள்ளியில் நடந்தது என்ன?

Murugesan M by Murugesan M
Oct 8, 2023, 01:14 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கர்நாடக மாநில எல்லைப் பகுதியான அத்திப்பள்ளியில் உள்ள ஒரு பட்டாசுக் கடையில் திடீரென ஏற்பட்ட பட்டாசுக் கடை வெடிவிபத்தில், 14 பேர் பலியாகினர். பலர் காயம் அடைந்தனர்.

கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளியில் சோதனைச் சாவடி உள்ளது. இங்கு, நவீன்குமார் என்பவருக்கு சொந்தமான பட்டாசுக்கடை உள்ளது. அதில், தீபாவளி பண்டிகையையொட்டி,
பட்டாசு விற்பனை செய்ய கடை அமைத்து வந்தனர். இதில், வாணியம்பாடி, அரூர் டி. அம்மாபேட்டை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட தமிழகத்தைச் சேர்ந்த 30 பேர் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

நேற்று கடைக்கு ஒரு கன்டெய்னர் லாரி மற்றும் இரு சரக்கு வாகனங்களில் பட்டாசுகள் கொண்டு வரப்பட்டன. அதனைத் தொழிலாளர்கள் இறக்கிக் கொண்டிருந்தபோது யாரும் எதிர்பாராத விதமாக லாரியில் இருந்த பட்டாசுகள் வெடித்துச் சிதறின.

இதில், தீப்பொறி கடைக்குள் விழுந்ததால், அங்கிருந்த பட்டாசுகள் வெடித்துத் தீப்பிடித்து எரிந்தன. காற்றில் தீ மளமளவென சரக்கு வாகனங்களிலிருந்த பட்டாசுகளுக்கும் பரவியது. இதனால், அந்த பகுதியே புகை மண்டலமாக காட்சியளித்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் 2 மணி நேரத்துக்கும் மேலாகப் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த விபத்தில், 13 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். இதில், 2 பேர் உடல் மட்டும் அடையாளம் காணப்பட்டது. தருமபுரி மாவட்டம் டி.அம்மாபேட்டையைச் சேர்ந்த சச்சின் மற்றும் வேடியப்பன் ஆகியோர் உடல்கள் மட்டும் அடையாளம் காணப்பட்டன. மற்றவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.

இந்த விபத்தில், கடை உரிமையாளர் நவீன உள்ளிட்ட பலர் பலத்த காயமடைந்தனர். அவர்களை மீட்டு அப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பிவைத்தனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்தில் ஒரு ஒரு கன்டெய்னர் லாரி, 3 சரக்கு வாகனங்கள், 7 இருசக்கர வாகனங்கள் என மொத்தம் 11 வாகனங்கள் எரிந்து சேதமடைந்தன. இதன் மொத்த மதிப்பு சுமார் 5 கோடி ரூபாய் இருக்கும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. விபத்திற்கான காரணம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும். கடை நடத்த உரிய அனுமதி பெறப்பட்டுள்ளதா? அல்லது விதி மீறி பட்டாசு விற்பனை செய்யப்பட்டதா? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags: Fire accident14 killed in fire cracker shop blast
Share
Tweet
SendShare
Previous Post

இஸ்ரேல் பலி எண்ணிக்கை 300 ஆக உயர்வு!

Next Post

கோவை: உயிர் தப்பிய 50 கல்லூரி மாணவர்கள் – நடந்தது என்ன?

Related News

அடுத்த 15 நாட்களுக்கு தினமும் ஒரு டிஎம்சி நீர் திறக்க வேண்டு; கர்நாடகாவுக்கு உத்தரவு

குறையும் குழந்தை பிறப்பு : அதிகரிக்கும் முதியோர் ஜனத்தொகை : முடங்கும் ஐரோப்பிய பொருளாதாரம்? – சிறப்பு தொகுப்பு!

73 லட்சமா 73 ஆயிரமா? – பட்டா தொடர்பாக கேகேஎஸ்எஸ்ஆர், செங்கோட்டையன் விவாதம்!

தனியார் பங்களிப்புடன் அடையாறு கூவம் ஆறு தூர்வாரும் பணிகள் – அமைச்சர் ஆனந்த்

நீட் ரத்து இல்லையென்றால் பணம் படைத்தவர்களின் குழந்தைகள் தான் மருத்துவபடிப்பில் சேர முடியும் – பாஜக எம்எம்ஏ போஜராஜன்

இடமாற்றமும், நெஞ்சில் இருக்கும் புகைப்பட மாற்றமும் – ஓபிஎஸ், செங்கோட்டையன் காரசார விவாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

நீட் நுழைவுத் தேர்வு – தமிழக மாணவர்கள் சாதனை!

ஈரான் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் – ட்ரம்ப் வலியுறுத்தல்!

இன்றைய தங்கம் விலை!

தஞ்சை அருகே கோயில் நிலத்தில் ஈ.வெ.ரா சிலை – ஆய்வு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!

கருக்கலைப்புக்கு எதிரான பேரணியில் பங்கேற்ற சபாநாயகர் சட்டத்தின் காவலரா அல்லது மதத்தின் பிரதிநிதியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

தமிழகத்தில் மட்டும் No Delimitation நாடகம் ஏன்? : தயாநிதி மாறன் கேள்வி!

நவோதயா பள்ளிகளை அனுமதிக்க முடியாது – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு எதிர்ப்பு!

சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியுள்ளள ரஷ்ய விண்வெளி வீரர்கள் – இந்திய மக்களுக்கு தந்திர தின வாழ்த்து!

அமலாக்கத்துறை கடிதம் எழுதியும், முந்தைய திமுக அரசு, முன்னாள் அமைச்சர் நேருவை பாதுகாத்தது – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் ஒவ்வொருவரின் உணர்வில் கலந்துள்ளது – பாஜக எம்எல்ஏ போஜராஜன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies