பட்டாசுக் கடை வெடி விபத்தில் 14 பேர் பலி – அத்திப்பள்ளியில் நடந்தது என்ன?
Apr 29, 2026, 09:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பட்டாசுக் கடை வெடி விபத்தில் 14 பேர் பலி – அத்திப்பள்ளியில் நடந்தது என்ன?

Murugesan M by Murugesan M
Oct 8, 2023, 01:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கர்நாடக மாநில எல்லைப் பகுதியான அத்திப்பள்ளியில் உள்ள ஒரு பட்டாசுக் கடையில் திடீரென ஏற்பட்ட பட்டாசுக் கடை வெடிவிபத்தில், 14 பேர் பலியாகினர். பலர் காயம் அடைந்தனர்.

கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளியில் சோதனைச் சாவடி உள்ளது. இங்கு, நவீன்குமார் என்பவருக்கு சொந்தமான பட்டாசுக்கடை உள்ளது. அதில், தீபாவளி பண்டிகையையொட்டி,
பட்டாசு விற்பனை செய்ய கடை அமைத்து வந்தனர். இதில், வாணியம்பாடி, அரூர் டி. அம்மாபேட்டை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட தமிழகத்தைச் சேர்ந்த 30 பேர் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

நேற்று கடைக்கு ஒரு கன்டெய்னர் லாரி மற்றும் இரு சரக்கு வாகனங்களில் பட்டாசுகள் கொண்டு வரப்பட்டன. அதனைத் தொழிலாளர்கள் இறக்கிக் கொண்டிருந்தபோது யாரும் எதிர்பாராத விதமாக லாரியில் இருந்த பட்டாசுகள் வெடித்துச் சிதறின.

இதில், தீப்பொறி கடைக்குள் விழுந்ததால், அங்கிருந்த பட்டாசுகள் வெடித்துத் தீப்பிடித்து எரிந்தன. காற்றில் தீ மளமளவென சரக்கு வாகனங்களிலிருந்த பட்டாசுகளுக்கும் பரவியது. இதனால், அந்த பகுதியே புகை மண்டலமாக காட்சியளித்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் 2 மணி நேரத்துக்கும் மேலாகப் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த விபத்தில், 13 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். இதில், 2 பேர் உடல் மட்டும் அடையாளம் காணப்பட்டது. தருமபுரி மாவட்டம் டி.அம்மாபேட்டையைச் சேர்ந்த சச்சின் மற்றும் வேடியப்பன் ஆகியோர் உடல்கள் மட்டும் அடையாளம் காணப்பட்டன. மற்றவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.

இந்த விபத்தில், கடை உரிமையாளர் நவீன உள்ளிட்ட பலர் பலத்த காயமடைந்தனர். அவர்களை மீட்டு அப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பிவைத்தனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்தில் ஒரு ஒரு கன்டெய்னர் லாரி, 3 சரக்கு வாகனங்கள், 7 இருசக்கர வாகனங்கள் என மொத்தம் 11 வாகனங்கள் எரிந்து சேதமடைந்தன. இதன் மொத்த மதிப்பு சுமார் 5 கோடி ரூபாய் இருக்கும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. விபத்திற்கான காரணம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும். கடை நடத்த உரிய அனுமதி பெறப்பட்டுள்ளதா? அல்லது விதி மீறி பட்டாசு விற்பனை செய்யப்பட்டதா? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags: Fire accident14 killed in fire cracker shop blast
ShareTweetSendShare
Previous Post

இஸ்ரேல் பலி எண்ணிக்கை 300 ஆக உயர்வு!

Next Post

கோவை: உயிர் தப்பிய 50 கல்லூரி மாணவர்கள் – நடந்தது என்ன?

Related News

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

Load More

அண்மைச் செய்திகள்

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

சிக்கிம் மாநில உதய தின விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மும்பை அருகே கலிமா ஓதக் கூறி பாதுகாவலர்களை கத்தியால் தாக்கிய இளைஞர் கைது!

விழுப்புரத்தில் நடைபெற்ற மிஸ் கூவாகம் 2026 அழகி போட்டி – கோவை சூர்யாகுட்டி முதலிடம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies