இஸ்ரேல் - காஸா போர்: 700 இஸ்ரேலியர்கள், 800 பாலஸ்தீனியர்கள் பலி!
Jul 26, 2025, 06:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இஸ்ரேல் – காஸா போர்: 700 இஸ்ரேலியர்கள், 800 பாலஸ்தீனியர்கள் பலி!

இன்றும் போர் நீடிப்பதால் பலி எண்ணிக்கை உயரும் அபாயம்!

Web Desk by Web Desk
Oct 9, 2023, 03:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இஸ்ரேல் – காஸாவின் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு இடையே கடந்த 3 நாட்களாக நடந்துவரும் போரில், 700 இஸ்ரேலியர்கள், 800 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டிருப்பதாகவும், 4,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காஸா தன்னாட்சி நகரைச் சேர்ந்த ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த சனிக்கிழமை காலை இஸ்ரேல் மீது திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். சுமார் அரை மணி நேரத்தில் 7,000-க்கும் மேற்பட்ட ஏவுகணை ஏவி தாக்குதல் நடத்தியது. இதனால், இஸ்ரேல் திக்குமுக்காடிப் போனது. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஹமாஸ் தீவிரவாதிகள் வான் வழியாகவும், கடல் மார்க்கமாகவும், தரை வழியாகவும் இஸ்ரேலுக்குள் ஊடுருவி நேரடித் தாக்குதலிலும் ஈடுபட்டனர். இதன் காரணமாக, இஸ்ரேல் ரொம்பவே தடுமாறிப் போனது.

இதன் பிறகு, சுதாரித்துக் கொண்ட இஸ்ரேல், காஸா நகரத்தின் மீது வான்வழி மற்றும் ஏவுகணைத் தாக்குதலில் ஈடுபட்டது. குறிப்பாக, ஹமாஸ் தீவிரவாதத் தலைவர்களின் வீடுகள் மற்றும் முகாம்களை குறிவைத்து வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டது. இதில், ஹமாஸ் தீவிரவாதத் தலைவர் ஒருவரின் வீடு முற்றிலுமாக சேதமடைந்தது. தொடர்ந்து, இஸ்ரேல் கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதுகுறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறுகையில், “இஸ்ரேல் பாதுகாப்புப் படையினரின் மதிப்பை ஹமாஸ் தீவிரவாதிகள் குறைத்து மதிப்பிட்டு விட்டனர். காஸாவுக்கு எங்களது பலத்தைக் காட்டுவோம்” என்று கூறியிருந்தார்.

இதனிடையே, ஹமாஸ் தீவிரவாதிகளின் தாக்குதலில் 700-க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் பலியாகி இருப்பதாகவும், 2,000-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதேபோல, இஸ்ரேல் இராணுவத்தினர் பலரையும், அப்பாவி மக்கள் பலரையும் ஹமாஸ் தீவிரவாதிகள் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்துக் கொண்டு தாக்குதலில் ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், பிணைக் கைதிகள் பலரையும், இஸ்ரேல் இராணுவம் மீட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேபோல, இஸ்ரேல் தரப்பில் காஸா மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 600 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாகவும், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்திருப்பதாகவும் இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் ரோன் டெர்மர் கூறியிருக்கிறார். மேலும், ஹமாஸ் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அத்தீவிரவாதத் தலைவர்களின் இலக்குகளை குறிவைத்து இஸ்ரேல் இராணுவம் வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டு வருவதாகவும், இதில், ஹமாஸ் தீவிரவாதிகளின் தலைமையகம் தகர்க்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

மேலும், மூத்த இராணுவ மற்றும் புலனாய்வு ஆய்வாளர் யோனா ஜெரமி பாப் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “இஸ்ரேல் இராணுவம் 1,140 வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாகவும், திங்கள்கிழமை காலை நிலவரப்படி 800 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். மேலும், காஸா வழித்தடத்திலுள்ள இஸ்ரேல் கிராமங்களில் ஹமாஸ் தீவிரவாதிகளுடன் 6 சண்டைகள் நடந்து வருவதாகவும் கூறியிருக்கிறார். இன்றும் சண்டை தொடர்ந்து நடந்து வருகிறது.

Tags: Kaza1400 killedWARIsrael
ShareTweetSendShare
Previous Post

மார்ச்சுவரியில் மூட்டை மூட்டையாகப் பணம் -ஜெகத் ரெய்டில் திக்..திக்.. சம்பவங்கள்!

Next Post

வருகிறது இரண்டு கிரகணங்கள்!-செய்ய கூடாதவை எவை ?

Related News

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

சிவன் கோயில் உரிமை யாருக்கு? : தாய்லாந்து- கம்போடியா ராணுவ மோதல் பின்னணி!

அசீம் முனீரை அவமானப்படுத்திய சீனா : பூட்டிய அறையில் நடந்தது என்ன? – பாக்.,கிற்கு இறுதி எச்சரிக்கை!

பில்லியனர் ஆனா சுந்தர் பிச்சை : சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

Load More

அண்மைச் செய்திகள்

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் – என்னென்ன இலாபம்?

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

தொழிலாளர்கள் தங்கும் விடுதி : திறந்து 3 மாதங்களாகியும் செயல்படாத அவலம்!

மத்திய அரசின் நிதி எங்கு தான் செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

கோவை குண்டுவெடிப்பில் கைதான டெய்லர் ராஜா மீது மேலும் 2 வழக்குகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies