இஸ்ரேல் - காஸா போர்: 700 இஸ்ரேலியர்கள், 800 பாலஸ்தீனியர்கள் பலி!
Jun 13, 2026, 03:48 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இஸ்ரேல் – காஸா போர்: 700 இஸ்ரேலியர்கள், 800 பாலஸ்தீனியர்கள் பலி!

இன்றும் போர் நீடிப்பதால் பலி எண்ணிக்கை உயரும் அபாயம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 9, 2023, 03:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இஸ்ரேல் – காஸாவின் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு இடையே கடந்த 3 நாட்களாக நடந்துவரும் போரில், 700 இஸ்ரேலியர்கள், 800 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டிருப்பதாகவும், 4,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காஸா தன்னாட்சி நகரைச் சேர்ந்த ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த சனிக்கிழமை காலை இஸ்ரேல் மீது திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். சுமார் அரை மணி நேரத்தில் 7,000-க்கும் மேற்பட்ட ஏவுகணை ஏவி தாக்குதல் நடத்தியது. இதனால், இஸ்ரேல் திக்குமுக்காடிப் போனது. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஹமாஸ் தீவிரவாதிகள் வான் வழியாகவும், கடல் மார்க்கமாகவும், தரை வழியாகவும் இஸ்ரேலுக்குள் ஊடுருவி நேரடித் தாக்குதலிலும் ஈடுபட்டனர். இதன் காரணமாக, இஸ்ரேல் ரொம்பவே தடுமாறிப் போனது.

இதன் பிறகு, சுதாரித்துக் கொண்ட இஸ்ரேல், காஸா நகரத்தின் மீது வான்வழி மற்றும் ஏவுகணைத் தாக்குதலில் ஈடுபட்டது. குறிப்பாக, ஹமாஸ் தீவிரவாதத் தலைவர்களின் வீடுகள் மற்றும் முகாம்களை குறிவைத்து வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டது. இதில், ஹமாஸ் தீவிரவாதத் தலைவர் ஒருவரின் வீடு முற்றிலுமாக சேதமடைந்தது. தொடர்ந்து, இஸ்ரேல் கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதுகுறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறுகையில், “இஸ்ரேல் பாதுகாப்புப் படையினரின் மதிப்பை ஹமாஸ் தீவிரவாதிகள் குறைத்து மதிப்பிட்டு விட்டனர். காஸாவுக்கு எங்களது பலத்தைக் காட்டுவோம்” என்று கூறியிருந்தார்.

இதனிடையே, ஹமாஸ் தீவிரவாதிகளின் தாக்குதலில் 700-க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் பலியாகி இருப்பதாகவும், 2,000-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதேபோல, இஸ்ரேல் இராணுவத்தினர் பலரையும், அப்பாவி மக்கள் பலரையும் ஹமாஸ் தீவிரவாதிகள் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்துக் கொண்டு தாக்குதலில் ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், பிணைக் கைதிகள் பலரையும், இஸ்ரேல் இராணுவம் மீட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேபோல, இஸ்ரேல் தரப்பில் காஸா மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 600 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாகவும், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்திருப்பதாகவும் இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் ரோன் டெர்மர் கூறியிருக்கிறார். மேலும், ஹமாஸ் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அத்தீவிரவாதத் தலைவர்களின் இலக்குகளை குறிவைத்து இஸ்ரேல் இராணுவம் வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டு வருவதாகவும், இதில், ஹமாஸ் தீவிரவாதிகளின் தலைமையகம் தகர்க்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

மேலும், மூத்த இராணுவ மற்றும் புலனாய்வு ஆய்வாளர் யோனா ஜெரமி பாப் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “இஸ்ரேல் இராணுவம் 1,140 வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாகவும், திங்கள்கிழமை காலை நிலவரப்படி 800 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். மேலும், காஸா வழித்தடத்திலுள்ள இஸ்ரேல் கிராமங்களில் ஹமாஸ் தீவிரவாதிகளுடன் 6 சண்டைகள் நடந்து வருவதாகவும் கூறியிருக்கிறார். இன்றும் சண்டை தொடர்ந்து நடந்து வருகிறது.

Tags: WARIsraelKaza1400 killed
ShareTweetSendShare
Previous Post

மார்ச்சுவரியில் மூட்டை மூட்டையாகப் பணம் -ஜெகத் ரெய்டில் திக்..திக்.. சம்பவங்கள்!

Next Post

வருகிறது இரண்டு கிரகணங்கள்!-செய்ய கூடாதவை எவை ?

Related News

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு!

நீட் மறு தேர்வுக்கு 15 நிமிடம் கூடுதல் நேரம் ஒதுக்கீடு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் – இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கனடா, போஸ்னியா அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிரா!

2026ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த உணவு வகைகள் கொண்ட நகரங்களின் பட்டியல் : 13-வது இடத்தில் பெங்களூரு!

கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் தமிழக முதலமைச்சர் விஜய் தரிசனம்!

கீர்த்தி சக்ரா பெற்று சொந்த ஊர் திரும்பிய ராணுவ வீரர்; மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு

G-7 மாநாட்டில் பங்கேற்க பிரான்ஸ் புறப்படும் பிரதமர் மோடி ; சர்வதேச தலைவர்களை சந்திக்க திட்டம்’

உள்நாட்டில் உருவான ஏர்பஸ் C-295 ராணுவப் போக்குவரத்து விமான சோதனை வெற்றி – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies