இஸ்ரேல் - காஸா போர்: 700 இஸ்ரேலியர்கள், 800 பாலஸ்தீனியர்கள் பலி!
Sep 12, 2026, 12:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இஸ்ரேல் – காஸா போர்: 700 இஸ்ரேலியர்கள், 800 பாலஸ்தீனியர்கள் பலி!

இன்றும் போர் நீடிப்பதால் பலி எண்ணிக்கை உயரும் அபாயம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 9, 2023, 03:15 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இஸ்ரேல் – காஸாவின் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு இடையே கடந்த 3 நாட்களாக நடந்துவரும் போரில், 700 இஸ்ரேலியர்கள், 800 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டிருப்பதாகவும், 4,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காஸா தன்னாட்சி நகரைச் சேர்ந்த ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த சனிக்கிழமை காலை இஸ்ரேல் மீது திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். சுமார் அரை மணி நேரத்தில் 7,000-க்கும் மேற்பட்ட ஏவுகணை ஏவி தாக்குதல் நடத்தியது. இதனால், இஸ்ரேல் திக்குமுக்காடிப் போனது. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஹமாஸ் தீவிரவாதிகள் வான் வழியாகவும், கடல் மார்க்கமாகவும், தரை வழியாகவும் இஸ்ரேலுக்குள் ஊடுருவி நேரடித் தாக்குதலிலும் ஈடுபட்டனர். இதன் காரணமாக, இஸ்ரேல் ரொம்பவே தடுமாறிப் போனது.

இதன் பிறகு, சுதாரித்துக் கொண்ட இஸ்ரேல், காஸா நகரத்தின் மீது வான்வழி மற்றும் ஏவுகணைத் தாக்குதலில் ஈடுபட்டது. குறிப்பாக, ஹமாஸ் தீவிரவாதத் தலைவர்களின் வீடுகள் மற்றும் முகாம்களை குறிவைத்து வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டது. இதில், ஹமாஸ் தீவிரவாதத் தலைவர் ஒருவரின் வீடு முற்றிலுமாக சேதமடைந்தது. தொடர்ந்து, இஸ்ரேல் கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதுகுறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறுகையில், “இஸ்ரேல் பாதுகாப்புப் படையினரின் மதிப்பை ஹமாஸ் தீவிரவாதிகள் குறைத்து மதிப்பிட்டு விட்டனர். காஸாவுக்கு எங்களது பலத்தைக் காட்டுவோம்” என்று கூறியிருந்தார்.

இதனிடையே, ஹமாஸ் தீவிரவாதிகளின் தாக்குதலில் 700-க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் பலியாகி இருப்பதாகவும், 2,000-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதேபோல, இஸ்ரேல் இராணுவத்தினர் பலரையும், அப்பாவி மக்கள் பலரையும் ஹமாஸ் தீவிரவாதிகள் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்துக் கொண்டு தாக்குதலில் ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், பிணைக் கைதிகள் பலரையும், இஸ்ரேல் இராணுவம் மீட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேபோல, இஸ்ரேல் தரப்பில் காஸா மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 600 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாகவும், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்திருப்பதாகவும் இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் ரோன் டெர்மர் கூறியிருக்கிறார். மேலும், ஹமாஸ் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அத்தீவிரவாதத் தலைவர்களின் இலக்குகளை குறிவைத்து இஸ்ரேல் இராணுவம் வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டு வருவதாகவும், இதில், ஹமாஸ் தீவிரவாதிகளின் தலைமையகம் தகர்க்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

மேலும், மூத்த இராணுவ மற்றும் புலனாய்வு ஆய்வாளர் யோனா ஜெரமி பாப் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “இஸ்ரேல் இராணுவம் 1,140 வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாகவும், திங்கள்கிழமை காலை நிலவரப்படி 800 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். மேலும், காஸா வழித்தடத்திலுள்ள இஸ்ரேல் கிராமங்களில் ஹமாஸ் தீவிரவாதிகளுடன் 6 சண்டைகள் நடந்து வருவதாகவும் கூறியிருக்கிறார். இன்றும் சண்டை தொடர்ந்து நடந்து வருகிறது.

Tags: WARIsraelKaza1400 killed
Share
Tweet
SendShare
Previous Post

மார்ச்சுவரியில் மூட்டை மூட்டையாகப் பணம் -ஜெகத் ரெய்டில் திக்..திக்.. சம்பவங்கள்!

Next Post

வருகிறது இரண்டு கிரகணங்கள்!-செய்ய கூடாதவை எவை ?

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies