அடுத்த ஆண்டு, அதாவது 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, கூடுவோம், கூட்டுவோம் என்ற பெயரில் பாஜக புதிய திட்டத்தை வடிவமைத்துள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக வரும் நாடாளுமன்றத் தேர்தலில், வெற்றி பெறுவதற்கான வியூகங்களை வகுத்து வருகிறது. இந்த முறை வெற்றி பெறுவதன் மூலம் பாஜக ஹாட்ரிக் வெற்றியை ருசிக்க உள்ளது.
கடந்த 9 ஆண்டுகளாக மத்தியில் பாஜக உள்ளது. நாடு முழுவதும் அனைத்துத் தரப்பு மக்களும் பயன் பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வந்துள்ளது.
மேலும், பாஜக ஆட்சிக்கு வரவேண்டும் என ஆர்.எஸ்., எஸ், வி.ஹெச்.பி., ஏ.பி.வி.பி. உள்ளிட்ட சங் பரிவார் அமைப்புகளில் பணியாற்றிவிட்டு, ஒரு சில காரணங்களால் ஒதுங்கியுள்ளவர்களை மீண்டும் ஒருங்கிணைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்காக ஒரு வாட்ஸ் அப் கணக்கு துவங்கப்பட்டு, கடந்த இரண்டு மாதங்களாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் அமைப்புப் பணிகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
இதனிடையே, தேர்தல் பணியில் ஆர்வம், திறமை, அனுபவம் உள்ளவர்களை முழு நேரப்பணியில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, வரும் 15 -ம் தேதி அன்று, கூடுவோம், கூட்டுவோம் என்ற பெயரில் பாஜக புதிய திட்டத்தை வடிவமைத்துள்ளது. இந்த திட்டம் பாஜகவின் ஹாட்ரிக் வெற்றிக்கு கைகொடுக்க உள்ளது.