ஆவினில் புதிய விஞ்ஞான மோசடி - பொது மக்கள் அதிர்ச்சி!
Oct 23, 2025, 04:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆவினில் புதிய விஞ்ஞான மோசடி – பொது மக்கள் அதிர்ச்சி!

Web Desk by Web Desk
Oct 10, 2023, 03:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திமுக ஆட்சி என்றாலே, விஞ்ஞான மோசடிகள் அரங்கேறும். அந்த வகையில், தற்போது ஆவினில் புதிய விஞ்ஞான மோசடி நடைபெற்றுள்ளதைக் கண்டு பொது மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அதாவது, சென்னை மாதவரம் ஆவின் பால் பண்ணையில் உற்பத்தி செய்யப்படும் பால் பாக்கெட்டுகள் வடசென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.

யாரும் எதிர்பாராத நேரத்தில், அதாவது, திருவிழாக்கள் முக்கிய நாட்களில், மக்கள் மிகுந்த பரபரப்புடன் உள்ள போது எடை குறைந்த பாலை விநியோகம் செய்தால் யாரும் கண்டுபிடிக்க முடியாது என புதிய விஞ்ஞான மோசடியை அரங்கேற்றியுள்ளது ஆவின் நிர்வாகம்.

அப்படித்தான், திங்கட்கிழமையான 9 -ம் தேதி, வடசென்னை பகுதிகளில் விநியோகம் செய்த ஊதா நிற ஆவின் டிலைட் பால் பாக்கெட்டுகள் 100 கிராம் எடை குறைவாக, அதாவது 415 கிராம் மட்டுமே இருந்துள்ளது. இதனால், பொது மக்கள் கொதித்தெழுந்து பால் முகவர்களிடம் எடை குறைந்த பாலை ஏன் வழங்கினீர்கள் எனக் காய்ச்சி எடுத்துவிட்டனர்.

இந்த சம்பவம் நடந்து முடிந்த அடுத்த 24 மணி நேரத்திற்குள் மேலும் ஒரு அதிர்ச்சி. 10 -ம் தேதியான இன்று அதிகாலை மத்தியச் சென்னை பகுதியில் விநியோகம் செய்யப்பட்ட ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டில் 135 கிராம் எடை குறைவாக இருந்துள்ளது. அதாவது, 385 கிராம் பால் பாக்கெட்டுகள் மட்டுமே வந்துள்ளது. இந்த விவகாரம் பால் முகவர்கள் மற்றும் பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முதல் நாள் 100 கிராம், இரண்டாவது நாள் 135 கிராம் எனத் தொடர்ந்து பால் பண்ணையிலிருந்து எடையளவு குறைவாக பால் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

எடையளவு குறைவான பால் பாக்கெட்டுகளை விநியோகம் செய்தால் யார் கண்டு பிடிக்கப்போகிறார்கள்? என்ற தைரியத்தில் ஆவினில் தொடர் மோசடிகள் நடைபெற்று வருகிறது.

ஏழை, எளிய மக்கள் வாங்கும் ஆவின் பாலில் இப்படி நித்தமும் அரங்கேறும் விஞ்ஞான ஊழலுக்கு முதல்வர் பொறுப்பேற்பாரா? எனக் கேள்வி கேட்கின்றனர் பொது மக்கள். பதில் சொல்வாரா முதல்வர் ஸ்டாலின்?

Tags: aavinaavin milkNew Scientific Fraud in aavin
ShareTweetSendShare
Previous Post

பழனி முருகன் கோவிலில் தங்கத் தேர் ரத்து – ஏன் தெரியுமா?

Next Post

பாஜக மையக்குழு கூட்டம் – இன்று முக்கிய ஆலோசனை!

Related News

இந்தியாவின் புதிய பிரம்மாஸ்திரம் : எதிரிகள் இனி தப்ப முடியாது – வல்லுநர்கள் பெருமிதம்!

பீகார் தேர்தலில் பலவீனமாகும் மகா கூட்டணி – ஆர்.ஜே.டி. காங்., உறவில் விரிசல்!

இந்தியர்களை அடிமைகளாக்கும் கஃபாலா : சவுதி அரேபியா ரத்து செய்தது ஏன்?

தீபாவளி வாழ்த்து சொன்ன ட்ரம்ப் : பயங்கரவாதத்தை அனுமதிக்க மாட்டோம் என மோடி பதில்!

அமெரிக்காவுடன் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகிறது : இந்தியா மீதான வரி 16 சதவீதமாக குறைய வாய்ப்பு!

ஹிஜாப் சட்டத்தை மீறிய ஈரான் அதிகாரிகள் : கொந்தளித்த மக்கள் -“STRAPLESS” உடையில் தென்பட்ட மணமகளின் வீடியோவால் சர்ச்சை…!

Load More

அண்மைச் செய்திகள்

PM SHRI திட்டத்தில் இணையும் கேரள அரசு : வீம்பு செய்யும் தமிழக அரசால் வீணாகும் மாணவர் எதிர்காலம்!

புதின்-ட்ரம்ப் சந்திப்பு ரத்து : ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்த முயற்சி தோல்வி ஏன்?

தஞ்சையில் தொடர் மழை : மழையில் நனைந்து முளைக்கத் தொடங்கிய 30 ஆயிரம் நெல் மூட்டைகள்!

மாறும் தெற்காசிய அரசியல் : புதிய பாதையில் பயணிக்கும் இந்தியா- ஆப்கனிஸ்தான்!

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையில் புதிய திருப்புமுனை : A ரத்த வகை சிறுநீரகத்தை Universal Kidney- ஆக மாற்றி சாதனை!

ராமநாதபுரம் : நீரில் மூழ்கிய ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் – கண்ணீரில் விவசாயிகள்!

உக்ரைன் போரை நிறுத்த புதிய முயற்சி : ரஷ்யா மீது கூடுதல் பொருளாதார தடை விதிக்க வாய்ப்பு!

முதல்வர் ஸ்டாலின் சத்தமே இல்லாமல் சாராய விற்பனையில் கல்லா கட்டுக்கிறார் – நயினார் நாகேந்திரன்

ஹலால் நிதி பயங்கரவாதத்திற்கு பயன்படுத்தப்படுகிறது – முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் குற்றச்சாட்டு!

செயற்கை மழைக்கான நடவடிக்கைகள் தயார் – மஜிந்தர் சிங் சிர்சா

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies