மத அடிப்படைவாத பயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டும் - இந்து முன்னணி கருத்து!
Oct 25, 2025, 08:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மத அடிப்படைவாத பயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டும் – இந்து முன்னணி கருத்து!

Web Desk by Web Desk
Oct 10, 2023, 05:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலகத்திலிருந்து மத அடிப்படைவாத பயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டிய தருணம் இது என இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

அது தொடர்பாக, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இஸ்ரேலியர்கள் விரதம் இருக்கும் நாளில் சதி செய்து ஹமாஸ் எனும் இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதிகள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திப் பல நூறு பேரைக் கொன்றனர்.

மேலும், பல வெளிநாட்டினரைக் கொடூரமாகத் தாக்கி துப்பாக்கி முனையில் கடத்தி, சிலரைக் கொன்ற விடீயோக்கள் சமூக ஊடகங்களில் வரலானது. இது உலக மக்களின் மனங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈவிரக்கமற்ற மனித மிருகங்களாக நடந்துகொண்ட ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு போன்றவை முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும் என்ற கருத்து உலக அளவில் எழுந்துள்ளது. பொறுப்புணர்ச்சியைத் தூண்டி மனிதர்களை வேட்டையாடும் இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதம் நாகரிக உலகிற்கு அச்சுறுத்தல் என்ற கருத்து வலுப்பெற்றுள்ளது.

இஸ்ரேல் நாட்டின் இருபுறமும் மத அடிப்படைவாத பயங்கரவாத குழுக்கள் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் பாரத பிரதமர் நரேந்திர மோடி இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் இஸ்ரேலுக்கு உறுதுணையாகப் பாரதம் இருக்கும் எனக் கூறியுள்ளார். அதேபோல் அமெரிக்கா, பிரிட்டன், உக்கரையன் என உலகின் பல நாடுகளும் இஸ்ரேலுக்குத் துணை நின்று பயங்கரவாதிகளை முறியடிக்க ஆதரவு தெரிவித்து உள்ளன.

எனவே இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டிய தருணம் இது என்பதை உலக நாடுகள் உணர்ந்துள்ளன. மேலும் பாகிஸ்தானைச் சேர்ந்த மதபோதகர் காலித் மெஹ்மூத் அப்பாசி என்பவன் “ஹமாஸ் இஸ்ரேலுக்கு என்ன செய்ததோ, அதை‌ நாங்கள் காஷ்மீருக்குச் செய்வோம்” என்று கூறியுள்ளான் அதே சமயம் இந்தியாவில் சில இஸ்லாமியர்கள் இஸ்ரேல் தேசத்திற்கு எதிராகக் கருத்திடுகின்றனர்.

இஸ்ரேலை எதிர்ப்பதாகக் கூறி ஹமாஸ் பயங்கரவாதிகளை ஆதரித்தும், பயங்கரத்தை எதிர்க்கும் பாரத அரசிற்கு அச்சுறுத்தல் விடுத்தும் வருகின்றன. இவர்களின் உள்நோக்கம் இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு இந்தியாவில் ஆள் சேர்ப்பது என்பது தெரியவந்துள்ளது.

எனவே, மத்திய மாநில உளவு நிறுவனங்கள் இவர்களைத் தீவிர கண்காணிப்பில் வைக்க வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக் கொள்கிறது.. இஸ்ரேல் உடன் உலக நாடுகள் இணைந்து ஒட்டுமொத்த இஸ்லாமிய அடிப்படைவாதம் அழிப்பதற்கு உற்ற துணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்.

Tags: bharath hindu munnani
ShareTweetSendShare
Previous Post

ஆ.ராசாவின் சொத்துகளை முடக்கிய அமலாக்கத்துறை!

Next Post

ஹமாஸ் படையை நிலைகுலைய வைத்த இஸ்ரேல் – 200 இடங்களில் வான்வெளி தாக்குதல்!

Related News

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

Load More

அண்மைச் செய்திகள்

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது!

கோவையில் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி விநாயகர் கோயில் இடிப்பு – திமுக நிர்வாகியே காரணம் என பக்தர்கள் குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies