மத அடிப்படைவாத பயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டும் - இந்து முன்னணி கருத்து!
Mar 15, 2026, 10:38 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மத அடிப்படைவாத பயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டும் – இந்து முன்னணி கருத்து!

Murugesan M by Murugesan M
Oct 10, 2023, 05:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலகத்திலிருந்து மத அடிப்படைவாத பயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டிய தருணம் இது என இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

அது தொடர்பாக, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இஸ்ரேலியர்கள் விரதம் இருக்கும் நாளில் சதி செய்து ஹமாஸ் எனும் இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதிகள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திப் பல நூறு பேரைக் கொன்றனர்.

மேலும், பல வெளிநாட்டினரைக் கொடூரமாகத் தாக்கி துப்பாக்கி முனையில் கடத்தி, சிலரைக் கொன்ற விடீயோக்கள் சமூக ஊடகங்களில் வரலானது. இது உலக மக்களின் மனங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈவிரக்கமற்ற மனித மிருகங்களாக நடந்துகொண்ட ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு போன்றவை முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும் என்ற கருத்து உலக அளவில் எழுந்துள்ளது. பொறுப்புணர்ச்சியைத் தூண்டி மனிதர்களை வேட்டையாடும் இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதம் நாகரிக உலகிற்கு அச்சுறுத்தல் என்ற கருத்து வலுப்பெற்றுள்ளது.

இஸ்ரேல் நாட்டின் இருபுறமும் மத அடிப்படைவாத பயங்கரவாத குழுக்கள் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் பாரத பிரதமர் நரேந்திர மோடி இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் இஸ்ரேலுக்கு உறுதுணையாகப் பாரதம் இருக்கும் எனக் கூறியுள்ளார். அதேபோல் அமெரிக்கா, பிரிட்டன், உக்கரையன் என உலகின் பல நாடுகளும் இஸ்ரேலுக்குத் துணை நின்று பயங்கரவாதிகளை முறியடிக்க ஆதரவு தெரிவித்து உள்ளன.

எனவே இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டிய தருணம் இது என்பதை உலக நாடுகள் உணர்ந்துள்ளன. மேலும் பாகிஸ்தானைச் சேர்ந்த மதபோதகர் காலித் மெஹ்மூத் அப்பாசி என்பவன் “ஹமாஸ் இஸ்ரேலுக்கு என்ன செய்ததோ, அதை‌ நாங்கள் காஷ்மீருக்குச் செய்வோம்” என்று கூறியுள்ளான் அதே சமயம் இந்தியாவில் சில இஸ்லாமியர்கள் இஸ்ரேல் தேசத்திற்கு எதிராகக் கருத்திடுகின்றனர்.

இஸ்ரேலை எதிர்ப்பதாகக் கூறி ஹமாஸ் பயங்கரவாதிகளை ஆதரித்தும், பயங்கரத்தை எதிர்க்கும் பாரத அரசிற்கு அச்சுறுத்தல் விடுத்தும் வருகின்றன. இவர்களின் உள்நோக்கம் இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு இந்தியாவில் ஆள் சேர்ப்பது என்பது தெரியவந்துள்ளது.

எனவே, மத்திய மாநில உளவு நிறுவனங்கள் இவர்களைத் தீவிர கண்காணிப்பில் வைக்க வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக் கொள்கிறது.. இஸ்ரேல் உடன் உலக நாடுகள் இணைந்து ஒட்டுமொத்த இஸ்லாமிய அடிப்படைவாதம் அழிப்பதற்கு உற்ற துணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்.

Tags: bharath hindu munnani
ShareTweetSendShare
Previous Post

ஆ.ராசாவின் சொத்துகளை முடக்கிய அமலாக்கத்துறை!

Next Post

ஹமாஸ் படையை நிலைகுலைய வைத்த இஸ்ரேல் – 200 இடங்களில் வான்வெளி தாக்குதல்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies