காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சோபியானில் 2 தீவிரவாதிகள் ஊடுருவியதைக் கண்டறிந்த இந்திய ராணுவ வீரர்கள், தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றனர்.
இந்தியாவில் பயங்கரவாத செயல்களைச் செய்யவும், அதனை ஊக்குவிக்கவும் பாகிஸ்தான் மறைமுகமாகத் தீவிரவாத அமைப்புகளுக்கு உதவி செய்கிறது. அந்த அமைப்புகள் இந்தியாவில் ஊடுருவி தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக, குண்டு வெடிப்பு, அப்பாவி பொது மக்களைக் கொலை செய்வது எனத் தீவிரவாத செயல்களில் ஈடுபடுகின்றனர்.
இந்த நிலையில், காஷ்மீரின் சோபியானில் 2 தீவிரவாதிகள் நுழைந்துள்ளதாகக் கிடைத்த உளவுத் தகவலை அடுத்து, அங்கு ராணுவம் சிஆர்பிஎஸ் போலீசார் மற்றும் காஷ்மீர் காவல்துறை இணைந்து நடத்திய ஆபரேஷனில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
அக்டோபர் 9 மற்றும் 10 -ம் தேதி இரவில் இந்த என்கவுண்டர் சோபியானின் அலிஷாபூர் என்னும் இடத்தில் நடைபெற்றது.
இதில் தீவிரவாதிகளிடம் இருந்து பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும், தீவிரவாதிகளிடம் இருந்து 2 ஏகே 47 துப்பாக்கிகள் மற்றும் ஒரு பிஸ்டல் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதனிடையே, இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியாக கருதப்பட்ட சகீத் லத்திப் என்பவன் பாகிஸ்தானில் அடையாளம் தெரியாத மர்ம நபரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளான்.