இஸ்ரேல்- ஹமாஸ் தீவிரவாதிகள் மோதல் - 3,000 தாண்டிய உயிரிழப்பு!
Sep 13, 2026, 01:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இஸ்ரேல்- ஹமாஸ் தீவிரவாதிகள் மோதல் – 3,000 தாண்டிய உயிரிழப்பு!

Murugesan M by Murugesan M
Oct 11, 2023, 02:57 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இஸ்ரேலுக்கும், ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் போர் நடந்து வருகிறது. இதில், இதில், இரண்டு தரப்பிலும் 3,000 பேர் உயிரிழந்திருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

இஸ்ரேல் – பாலஸ்தீன மோதல் தற்போது புதிய உச்சத்தை அடைந்துள்ளது. இஸ்ரேலுக்கு எதிராகச் செயல்பட்டு வரும் பாலஸ்தீன ஆதரவு ஹமாஸ் தீவிரவாதிகள் படை, மிகப்பெரிய தாக்குதல்களை இஸ்ரேல்மீது நடத்தியது.

அதாவது, அக்டோபர் 7-ம் தேதி அன்று தொடங்கிய இந்தத் தாக்குதலில், முதல் 20 நிமிடங்களில் 5,000 ராக்கெட்டுகளை ஏவி இஸ்ரேலின் முக்கியப் பகுதிகளை ஹமாஸ் தீவிரவாத படை நிர்மூலமாக்கியது.

இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாகக் காசா பகுதியை இஸ்ரேல் நிர்மூலமாக்கி வருகிறது. காசாவில் ஏராளமான கட்டிடங்கள், இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல்களால் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. மேலும், காசாவில் உணவு, தண்ணீர் மற்றும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு செவ்வாய்க்கிழமை 3-வது முறையாக அமெரிக்க ஜனாதிபதி பிடனுடன் தொலைப்பேசியில் பேசினார். அப்போது, அமெரிக்க அதிபர் ஜோ பிடன், இஸ்ரேலுடன் அமெரிக்கா எப்போதும் துணை நிற்கும் என உறுதிப்படத் தெரிவித்தார்.

இந்த நிலையில், ஹமாஸ் தீவிரவாத படைக்கு எதிரான 5 நாட்கள் போரில், இஸ்ரேல் பாதுகாப்புப் படை IDF அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில், இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இது தவிர, 2,800 -க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து உள்ளனர். மேலும், 50 பேர் பணயக்கைதிகளாக உள்ளனர். மேலும், சிலர் காணாமல் போனது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, அமெரிக்க அதிபர் ஜோ பிடனின் அரசு, இஸ்ரேலுக்கு போர் உபகரணங்களை வழங்கத் தொடங்கியுள்ளது.

அதன் ஒரு பகுதியாக அமெரிக்க ஆயுதங்களை ஏற்றிச் சென்ற முதல் விமானம் செவ்வாய்க்கிழமை மாலை தெற்கு இஸ்ரேலில் தரையிறங்கியதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

விமானம் தாங்கி போர்க்கப்பல். கடற்படைக்கு தேவையான 5,000 மாலுமிகள் மற்றும் போர் விமானங்கள் ஆகியவற்றை இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags: Israel-Hamas terrorists conflict3000 casualties!
Share
Tweet
SendShare
Previous Post

காஷ்மீரில் ஊடுருவிய 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

Next Post

மிசோரமில் 5 சுயேட்சை எம்எல்ஏக்கள் ராஜினாமா – காரணம் என்ன?

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies