டிஜிட்டல் தீர்வுகளைப் பகிர்ந்து கொள்ளும் ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
Jun 15, 2025, 05:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டிஜிட்டல் தீர்வுகளைப் பகிர்ந்து கொள்ளும் ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

Web Desk by Web Desk
Oct 11, 2023, 07:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வெற்றிகரமான டிஜிட்டல் தீர்வுகளைப் பகிர்ந்து கொள்ளும் வகையில், இந்தியா, டிரினிடாட் மற்றும் டொபாகோ இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இந்தியக் குடியரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், டிரினிடாட் மற்றும் டொபாகோ குடியரசின் டிஜிட்டல் தொழில்நுட்ப அமைச்சகம் ஆகியவற்றுக்கு இடையே  ஆகஸ்ட் 11 அன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. டிஜிட்டல் மாற்றத்திற்கான மக்கள்தொகை அளவுகோலில் செயல்படுத்தப்பட்ட வெற்றிகரமான டிஜிட்டல் தீர்வுகளைப் பகிர்வதில் ஒத்துழைப்பது தொடர்பாக இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது.

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் இரு நாடுகளின் டிஜிட்டல் முன்முயற்சிகளை செயல்படுத்துவதில் நெருக்கமான ஒத்துழைப்பு மற்றும் அனுபவங்கள், டிஜிட்டல் தொழில்நுட்ப அடிப்படையிலான தீர்வுகள் ஆகியவற்றை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் இரு தரப்பினரும் கையொப்பமிட்ட நாளிலிருந்து நடைமுறைக்கு வரும் மற்றும் 3 ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும்.

டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு (டிபிஐ) துறையில், அரசுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கிடையே இருதரப்பு ஒத்துழைப்பு மேம்படுத்தப்படும்.

தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை வாய்ப்புகளுக்கு வழிவகுக்கும் மேம்பட்ட ஒத்துழைப்பை இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

தகவல் தொடர்பு தொழில்நுட்பத் துறையில் இருதரப்பு மற்றும் பலதரப்பு ஒத்துழைப்பை வளர்ப்பதற்காகப் பல நாடுகள் மற்றும் பலதரப்பு முகமைகளுடன், மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஒத்துழைத்து வருகிறது. தகவல் தொடர்பு தொழில்நுட்பத் துறையில் ஒத்துழைப்பு மற்றும் தகவல் பரிமாற்றத்தை ஊக்குவிப்பதற்காக பல்வேறு நாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் / உடன்படிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

டிஜிட்டல் இந்தியா, தற்சார்பு இந்தியா, மேக் இன் இந்தியா போன்ற மத்திய அரசு எடுத்து வரும் பல்வேறு முன்முயற்சிகளுடன் இணைந்து, நாட்டை டிஜிட்டல் அதிகாரம் பெற்ற சமூகமாகவும், அறிவுசார் பொருளாதாரமாகவும் மாற்ற இது உதவுகிறது.

Tags: central cabinet meetingPM Modi
ShareTweetSendShare
Previous Post

டிஜிட்டல் தொழில்நுட்பத் துறையில் இந்தியா, பிரான்ஸ் இடையே ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு- மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

Next Post

சிறையில் உள்ள தீவிரவாதிகளை விடுதலை செய்யக்கூடாது – அண்ணாமலை ஆவேசம்!

Related News

ஈரான் மீது இஸ்ரேல் அதிரடி தாக்குதல் : பற்றி எரியும் நகரங்கள், பதுங்கு குழியில் மக்கள் – வெடிக்குமா அணுஆயுத போர்?

வனவிலங்குகளுக்கு பாதிப்பு : நெகிழியில்லா மருதமலை நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

செவி சாய்க்குமா அரசு? – சேலம் வந்த முதல்வருக்கு கோரிக்கை!

நவீன உபகரணங்களின் அணிவகுப்பு : மாற்றுத்திறனாளிகள் வியந்த கண்காட்சி!

அகமதாபாத் விமான விபத்துக்கான காரணம் 3 மாதங்களில் கண்டறியப்படும் : ராம் மோகன் நாயுடு

அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் கைது : நயினார் நாகேந்திரன் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

நீட் தேர்வுக்கு எதிரான திமுகவின் பொய் பிரசாரங்களை உடைக்கும் தமிழக மாணவர்கள் : அண்ணாமலை பெருமிதம்!

மத்திய அரசின் திட்டங்களுக்கு திமுகவின் பெயரை பொறித்து மக்களை ஏமாற்றுவது இனியும் நடக்காது : அண்ணாமலை திட்டவட்டம்!

தமிழகத்தில் 2026-ம் ஆண்டு ஆட்சி மாற்றம் நிகழும் : நயினார் நாகேந்திரன்

குஜராத் : லாரி மறைத்து கடத்தி வந்த ரூ.89.32 லட்சம் மதுபாட்டில்கள் பறிமுதல்!

பஹல்காமில் உயிர் நீத்த குதிரை சவாரி தொழிலாளியின் மனைவிக்கு அரசு வேலை!

முருக பக்தர்கள் மாநாடு சிறப்பாக நடக்கும் : இந்து முன்னணி

கர்நாடகாவில் நாளை மறுநாள் முதல் பைக் டாக்சிகளுக்கு தடை!

சுபான்ஷு சுக்லா வரும் 19-ம் தேதி விண்வெளி மையம் பயணம்!

ஒடிசாவில் கள்ளத்தனமாக ஆயுதம் விற்பனை – 5 பேர் கைது!

நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு : தமிழக மாணவர் சூர்ய நாராயணன் இந்திய அளவில் 27 ஆம் இடம் பிடித்து அசத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies