இந்தியா சுயசார்பு மிக்க நாடாக வலிமையோடு திகழ்கிறது - எல் முருகன்!
Jan 14, 2026, 11:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியா சுயசார்பு மிக்க நாடாக வலிமையோடு திகழ்கிறது – எல் முருகன்!

Murugesan M by Murugesan M
Oct 12, 2023, 10:38 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலக நாடுகளை மிஞ்சும் வகையில் இந்தியா சுயசார்பு மிக்க நாடாக வலிமையோடு திகழ்கிறது என மத்திய இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் குன்னூரில்  புரோவிடென்ஸ் மகளிர் கல்லூரியில் இன்று தகவல் ஒலிபரப்பு அமைச்சகம், மத்திய மக்கள் தொடர்பகம் சார்பில் சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு, சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை மற்றும் மக்கள் நலத்திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சியை மத்திய இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் தொடங்கிவைத்தார்.

கூட்டதில் பேசிய எல் முருகன், சிறுதானிய உணவுகளின் பயன்கள் குறித்து அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற வகையில் இந்தாண்டு சிறுதானிய உணவு ஆண்டாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.

அங்கு அமைக்கப்பட்டிருக்கும் அரங்கில் பல்வேறு மத்திய அரசு நலத்திட்டங்கள், சிறுதானியங்களின் நன்மைகள் குறித்து காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகவும்  அதனை மாணவர்கள் பின்பற்றி பயன் பெறவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.  பிரதமரின் செயல்பாடுகள் காரணமாக உலக நாடுகளை மிஞ்சும் அளவிற்கு நமது நாடு வலிமை மிக்க  நாடாகவும் சுயசார்பு கொண்ட நாடாகவும்  உருவாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மகளிருக்கு நாடாளுமன்றத்தில் 33 சதவீத இடஒதுக்கீட்டை பிரதமர் அறிவித்துள்ளதாகக் கூறிய அவர், இது நாட்டில் உள்ள பெண்களுக்கு அதிகாரம்  அளிப்பதாக அமையும் என்று தெரிவித்தார். புத்தொழில் நிறுவனங்கள் ஒரு லட்சத்திற்கும் மேலாக உருவாகியுள்ளது என்றும் இவை அனைத்தும், 30 வயதுக்கு கீழ் உள்ள இளைஞர்களால்  நடத்தப்படுவது என்று கூறினார்.

வேலைக்காக காத்திருந்த காலம் மறைந்து இப்போது பிறருக்கு வேலை அளிப்பவர்களாக நமது நாட்டு இளைஞர்கள் மாறியிருக்கிறார்கள் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

பாதுகாப்புத் துறையில் கூட நமது நாட்டில் தயாரிக்கும் பொருள்களை நாம்  பயன்படுத்துவதோடு  வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் அளவிற்கு வளர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக மத்திய அரசின் 9 ஆண்டு கால சாதனைகள் குறித்த புத்தகத்தை அமைச்சர் திரு எல் முருகன் வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள், பதக்கங்களை அவர் வழங்கினார். இந்நிகழ்வின் போது, பழங்குடியின மக்கள் அமைச்சரை கௌரவித்தனர்.

Tags: L Murugan
ShareTweetSendShare
Previous Post

நாட்டின் நலனுக்காக சாத்தியமற்ற பணிகளைப் பிரதமர் மோடியால் மட்டுமே செய்ய முடியும் என்று மஹந்த் சந்த்நாத் யோகி நம்பினார்!

Next Post

சரித்திரச் சாதனை படைத்த சரித்திர நாயகன் !

Related News

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies