காஸாவிலிருந்து வெளியேறிய 4.50 லட்சம் மக்கள்!
Jul 26, 2025, 06:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காஸாவிலிருந்து வெளியேறிய 4.50 லட்சம் மக்கள்!

இஸ்ரேல் கெடுவால் பாதுகாப்பு முகாம்களில் தஞ்சம்!

Web Desk by Web Desk
Oct 13, 2023, 12:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காஸா மீது இஸ்ரேல் போர் தொடுத்திருக்கும் நிலையில், அங்கு வசிக்கும் 10 லட்சம் மக்களும் அடுத்த 24 மணி நேரத்துக்குள் வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் கெடு விதித்திருந்த நிலையில், 4.50 பேர் வெளியேறி பாதுகாப்பு முகாம்களில் தஞ்சமடைந்திருக்கின்றனர்.

காஸா தன்னாட்சி நகரை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகள், கடந்த 7-ம் தேதி இஸ்ரேல் நாட்டின் மீது அறிவிக்கப்படாத தாக்குதலை நடத்தினர். காலையில் சுமார் அரை மணி நேரத்திற்குள் 7,000 ஏவுகணை வீசி இஸ்ரேலை திக்குமுக்காட வைத்தனர். இத்தாக்குதால் ஆத்திரமடைந்த இஸ்ரேல், காஸா மீது போரை அறிவித்தது. மேலும், ஹமாஸ் தீவிரவாதிகள் இருக்கும் இடம் தெரியாமல் அழிக்கப்படுவார்கள் என்று அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சூளுரைத்திருந்தார்.

இதையடுத்து, காஸா நகரின் மீது வான்வழித் தாக்குதலைத் தொடங்கிய இஸ்ரேல், குண்டு மழை பொழிந்தது. இதில், ஹமாஸ் தீவிரவாத அமைப்பின் தலைமையகம், தீவிரவாதத் தலைவரின் வீடு, மசூதியின் மையப்பகுதியில் இருந்து தீவிரவாத முகாம் உட்பட பல்வேறு கட்டடங்கள் தரைமட்டமாகின. மேலும், 1,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களும், நூற்றுக்கணக்கான ஹமாஸ் தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர். மேலும், காஸா நகரத்தில் வசிக்கும் 10 லட்சம் மக்களும் அடுத்த 24 மணி நேரத்திற்குள் வெளியேறி, ஐ.நா. அமைத்திருக்கும் பாதுகாப்பு முகாம்களில் தஞ்சமடைய வேண்டும் என்று கெடு விதித்திருந்தது.

மேலும், காஸாவில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பு முகாம்களுக்குச் செல்லுமாறு இஸ்ரேல் விமானப்படையினர் வானில் இருந்து நோட்டீஸ்களையும் வீசி எச்சரிக்கை விடுத்தனர். இதையடுத்து, காஸா நகர மக்கள் சாரை சாரையாக வெளியேறத் தொடங்கினர். இதுவரை சுமார் 4.50 லட்சம் பேர் வெளியேறி இருக்கின்றனர். இவர்களில் 3 லட்சம் பேர் ஐ.நா. பாதுகாப்பு முகாம்களிலும், 50,000 பேர் பாலஸ்தீன அரசின் நிவாரண முகாம்களிலும், மற்றவர்கள் காஸா நகரின் தெற்கு பகுதியில் மைதானங்களிலும், பொது கட்டடங்களிலும் தஞ்சமடைந்திருக்கின்றனர்.

இதற்கிடையே, பல்வேறு நாடுகளில் இருக்கும் இஸ்ரேல் விமானப் படையினர் உடனடியாக நாடு திரும்ப வேண்டும் என்று இஸ்ரேல் அழைப்பு விடுத்திருக்கிறது. ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் இராணுவத்தின் பலத்தை அதிகரிக்க இஸ்ரேல் நடவடிக்கை எடுத்து வருகிறது. 7-வது நாளான இன்று தரைவழித் தாக்குதலை இஸ்ரேல் தொடங்கி இருக்கிறது. காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், குடியிருப்புகள், பள்ளிகள், மசூதிகள், மருத்துவமனைகள் என இதுவரை 752 கட்டடங்கள் தரைமட்டமாகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், 1948-க்குப் பிறகு இதுவே மிக மோசமாக தாக்குதல் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Tags: WARIsraelHamas
ShareTweetSendShare
Previous Post

தேங்க்யூ மோடி – கண்ணீர் விட்ட இஸ்ரேல் இந்தியர்கள்!

Next Post

கோவை மார்ட்டின் வீட்டில் 2-வது நாளாகச் சோதனை – ஏன்? எதற்கு?

Related News

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

சிவன் கோயில் உரிமை யாருக்கு? : தாய்லாந்து- கம்போடியா ராணுவ மோதல் பின்னணி!

அசீம் முனீரை அவமானப்படுத்திய சீனா : பூட்டிய அறையில் நடந்தது என்ன? – பாக்.,கிற்கு இறுதி எச்சரிக்கை!

பில்லியனர் ஆனா சுந்தர் பிச்சை : சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் – என்னென்ன இலாபம்?

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

தொழிலாளர்கள் தங்கும் விடுதி : திறந்து 3 மாதங்களாகியும் செயல்படாத அவலம்!

மத்திய அரசின் நிதி எங்கு தான் செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies