உலகின் பெரிய சவாலாக விளங்கும் தீவிரவாதம்: பிரதமர் மோடி!
Oct 17, 2025, 05:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலகின் பெரிய சவாலாக விளங்கும் தீவிரவாதம்: பிரதமர் மோடி!

ஜி20 நாடாளுமன்றத் தலைவர்களின் 9-வது உச்சி மாநாடு (பி20)!

Web Desk by Web Desk
Oct 13, 2023, 01:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜி20 நாடாளுமன்றத் தலைவர்களின் உச்சி மாநாட்டை (பி20) தொடங்கி வைத்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, மனித நேயத்திற்கும், பூமிக்கும் தீவரவாதம் மிகப்பெரிய சவாலாக மாறி இருக்கிறது என்பது உலக நாடுகள் உணர்ந்திருக்கின்றன என்று கூறியிருக்கிறார்.

தேசியத் தலைநகர் டெல்லியிலுள்ள யஷோபூமியில், ஜி20 நாடாளுமன்றத் தலைவர்களின் 9-வது உச்சி மாநாடு (பி20) தொடக்க விழா இன்று நடந்தது. இம்மாநாட்டை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்துப் பேசுகையில், “இந்த உச்சி மாநாடு ஒரு மஹாகும்பமாகும். ஏனெனில், இது உலகின் நாடாளுமன்ற நடைமுறைகளின் ஒருங்கிணைப்பை பிரதிபலிக்கிறது. இந்தியா நிலவில் தரையிறங்கியது. ஜி20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியது. இன்று நாங்கள் பி20 உச்சி மாநாட்டை நடத்துகிறோம்.

இந்த உச்சி மாநாடு உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் (இந்தியா) மக்கள் சக்தியைக் கொண்டாடுவதற்கான ஒரு தளமாகும். 9-வது பி20 உச்சி மாநாட்டை இந்தியாவில் நடத்துவதை நாங்கள் பாக்கியமாகக் கருதுகிறோம். பி20 உச்சி மாநாட்டை நடத்துவதில் ஜனநாயகத்தின் தாயான உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டை நாங்கள் பிரதிநிதித்துவப்படுத்துகிறோம். உலகெங்கிலும் உள்ள நாடாளுமன்றங்கள் அல்லது சட்டமன்ற அமைப்புகள் ஆலோசனைகள் மற்றும் விவாதங்களை நடத்துவதற்கான முக்கிய இடங்கள்.

நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. நாடு முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் 32 லட்சம் பேர் மக்களால் தேர்வு செய்யப்பட்டனர். இதில் 50 சதவீதம் பேர் பெண்கள். அனைத்து துறைகளிலும் பெண்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர். மோதல்கள் மற்றும் குழப்பங்கள் நிறைந்த உலகம் யாருக்கும் பயனளிக்காது. பிளவுபட்ட உலகம், நம் முன்னால் இருக்கும் சவால்களுக்கு தீர்வைக் கொடுக்காது. இது அமைதி மற்றும் சகோதரத்துவத்திற்கான நேரம். ஒன்றாக முன்னேற வேண்டிய நேரம். அனைவரின் வளர்ச்சி மற்றும் நலனுக்காக உழைக்க இதுவே நேரம்.

பல ஆண்டுகளாக எல்லை தாண்டிய தீவிரவாதத்தால் இந்தியா பாதிக்கப்பட்டிருக்கிறது. 20 ஆண்டுகளுக்கு முன்னர், கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தினர். பூமிக்கும், மனித நேயத்திற்கும் தீவிரவாதம் எவ்வளவு பெரிய சவால் என்பதை உலகம் உணர்ந்து கொண்டிருக்கிறது. தீவிரவாதத்திற்கு எதிராக எவ்வாறு ஒருங்கிணைந்து போராடுவது என்பது குறித்து உலகில் உள்ள நாடாளுமன்றங்களும், உறுப்பினர்களும் சிந்திக்க வேண்டும். ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற நோக்கில் உலகத்தை பார்க்க வேண்டும்” என்றார்.

இம்மாநாட்டில், இந்தோனேசியா, மெக்சிகோ, சவூதி அரேபியா, ஓமன், ஸ்பெயின், ஐரோப்பிய நாடாளுமன்றம், இத்தாலி, தென்னாப்பிரிக்கா, ரஷ்யா, துருக்கியே, நைஜீரியா, ஆஸ்திரேலியா, பிரேசில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சிங்கப்பூர், ஜப்பான், எகிப்து மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளின் நாடாளுமன்றத் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் குழுவின் தலைவர்கள் கலந்து கொண்டனர். அதேசமயம், இந்த உச்சி மாநாட்டில் (பி20) கனடா கலந்து கொள்ளாதது குறிப்பிடத்தக்கது.

இந்த உச்சி மாநாடு 2 தனித்தனி அமர்வுகளாக நடைபெறுகிறது. முதல் அமர்வில், ‘ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்’ என்கிற தலைப்பிலான விவாதம், 2030 நிகழ்ச்சி நிரலுடன் நிலையான வளர்ச்சி இலக்குகள், சாதனைகளை வெளிப்படுத்துதல் மற்றும் முன்னேற்றத்தை விரைவுபடுத்துதல் ஆகியவற்றை உள்ளடக்கியது. 2-வது அமர்வு ‘ஒரே பூமி நிலையான ஆற்றல் மாற்றம் – பசுமை எதிர்காலத்திற்கான நுழைவாயில்’ என்கிற தலைப்பில் நடைபெறுகிறது.

Tags: PM ModiG20P20 Summit
ShareTweetSendShare
Previous Post

திருப்பதி ஆர்ஜித சேவை: எந்த நாளில் எந்த டிக்கெட் கிடைக்கும்?

Next Post

ஆப்கானிஸ்தானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

Related News

கண்துடைப்புக்காக, ஆணையம், குழு என அமைத்து மக்கள் வரிப்பணத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறார் முதல்வர் – அண்ணாமலை குற்றச்சாட்டு!

கரூர் துயரச் சம்பவத்தில் எதை மறைக்கப் பார்க்கிறது திமுக அரசு? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

கடலூர் அருகே மின்னல் தாக்கி 4 பெண்கள் உயிரிழப்பு – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

நெல்லையில் தீபாவளி போனஸ் வழங்க கோரி மாகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட தூய்மை பணியாளர்கள்!

பேரவையில் அன்புமணி தரப்பு எம்எல்ஏக்கள் சபாநாயகர் இருக்கை முன் தர்ணா!

கோவை ஜி.டி.நாயுடு மேம்பால சாலை பாதுகாப்பை சீர்படுத்த நடவடிக்கை தேவை – வானதி சீனிவாசன் வலியுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு ஆவணங்களை ஒப்படைக்காவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு – சென்னை காவல் ஆணையருக்கு நோட்டீஸ்!

ஐப்பசி மாத பூஜை – சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறப்பு!

தவெக கூட்ட நெரிசல் வழக்கு – கரூர் வந்த சிபிஐ அதிகாரிகள்!

கோவையில் மயக்க ஊசி செலுத்தி ரோலக்ஸ் காட்டு யானையை மடக்கிய வனத்துறையினர்!

சட்டவிரோத கல்குவாரி – தகவல் கொடுத்தவருக்கு கொலை மிரட்டல்!

திருமாவளவன் கார் மோதிய விவகாரம் – வழக்கறிஞர் மீது வழக்குப்பதிவு!

மதுரை மாநகராட்சி மாமன்ற அவசர கூட்டம் – மேயர் இந்திராணியின் ராஜினாமா ஏற்பு!

54-ம் ஆண்டில் அதிமுக – ராயப்பேட்டை அலுவலகத்தில் உற்சாக கொண்டாட்டம்!

தமிழக பாஜக சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளர் வைஜயந்த் பாண்டா அன்புமணியுடன் சந்திப்பு – கூட்டணி குறித்து ஆலோசனை என தகவல்!

தேர்தல் பொறுப்பாளர் பைஜெயந்த் பாண்டா தலைமையில் தமிழக பாஜக மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies