உலகின் பெரிய சவாலாக விளங்கும் தீவிரவாதம்: பிரதமர் மோடி!
Sep 10, 2026, 08:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலகின் பெரிய சவாலாக விளங்கும் தீவிரவாதம்: பிரதமர் மோடி!

ஜி20 நாடாளுமன்றத் தலைவர்களின் 9-வது உச்சி மாநாடு (பி20)!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 13, 2023, 01:32 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஜி20 நாடாளுமன்றத் தலைவர்களின் உச்சி மாநாட்டை (பி20) தொடங்கி வைத்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, மனித நேயத்திற்கும், பூமிக்கும் தீவரவாதம் மிகப்பெரிய சவாலாக மாறி இருக்கிறது என்பது உலக நாடுகள் உணர்ந்திருக்கின்றன என்று கூறியிருக்கிறார்.

தேசியத் தலைநகர் டெல்லியிலுள்ள யஷோபூமியில், ஜி20 நாடாளுமன்றத் தலைவர்களின் 9-வது உச்சி மாநாடு (பி20) தொடக்க விழா இன்று நடந்தது. இம்மாநாட்டை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்துப் பேசுகையில், “இந்த உச்சி மாநாடு ஒரு மஹாகும்பமாகும். ஏனெனில், இது உலகின் நாடாளுமன்ற நடைமுறைகளின் ஒருங்கிணைப்பை பிரதிபலிக்கிறது. இந்தியா நிலவில் தரையிறங்கியது. ஜி20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியது. இன்று நாங்கள் பி20 உச்சி மாநாட்டை நடத்துகிறோம்.

இந்த உச்சி மாநாடு உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் (இந்தியா) மக்கள் சக்தியைக் கொண்டாடுவதற்கான ஒரு தளமாகும். 9-வது பி20 உச்சி மாநாட்டை இந்தியாவில் நடத்துவதை நாங்கள் பாக்கியமாகக் கருதுகிறோம். பி20 உச்சி மாநாட்டை நடத்துவதில் ஜனநாயகத்தின் தாயான உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டை நாங்கள் பிரதிநிதித்துவப்படுத்துகிறோம். உலகெங்கிலும் உள்ள நாடாளுமன்றங்கள் அல்லது சட்டமன்ற அமைப்புகள் ஆலோசனைகள் மற்றும் விவாதங்களை நடத்துவதற்கான முக்கிய இடங்கள்.

நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. நாடு முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் 32 லட்சம் பேர் மக்களால் தேர்வு செய்யப்பட்டனர். இதில் 50 சதவீதம் பேர் பெண்கள். அனைத்து துறைகளிலும் பெண்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர். மோதல்கள் மற்றும் குழப்பங்கள் நிறைந்த உலகம் யாருக்கும் பயனளிக்காது. பிளவுபட்ட உலகம், நம் முன்னால் இருக்கும் சவால்களுக்கு தீர்வைக் கொடுக்காது. இது அமைதி மற்றும் சகோதரத்துவத்திற்கான நேரம். ஒன்றாக முன்னேற வேண்டிய நேரம். அனைவரின் வளர்ச்சி மற்றும் நலனுக்காக உழைக்க இதுவே நேரம்.

பல ஆண்டுகளாக எல்லை தாண்டிய தீவிரவாதத்தால் இந்தியா பாதிக்கப்பட்டிருக்கிறது. 20 ஆண்டுகளுக்கு முன்னர், கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தினர். பூமிக்கும், மனித நேயத்திற்கும் தீவிரவாதம் எவ்வளவு பெரிய சவால் என்பதை உலகம் உணர்ந்து கொண்டிருக்கிறது. தீவிரவாதத்திற்கு எதிராக எவ்வாறு ஒருங்கிணைந்து போராடுவது என்பது குறித்து உலகில் உள்ள நாடாளுமன்றங்களும், உறுப்பினர்களும் சிந்திக்க வேண்டும். ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற நோக்கில் உலகத்தை பார்க்க வேண்டும்” என்றார்.

இம்மாநாட்டில், இந்தோனேசியா, மெக்சிகோ, சவூதி அரேபியா, ஓமன், ஸ்பெயின், ஐரோப்பிய நாடாளுமன்றம், இத்தாலி, தென்னாப்பிரிக்கா, ரஷ்யா, துருக்கியே, நைஜீரியா, ஆஸ்திரேலியா, பிரேசில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சிங்கப்பூர், ஜப்பான், எகிப்து மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளின் நாடாளுமன்றத் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் குழுவின் தலைவர்கள் கலந்து கொண்டனர். அதேசமயம், இந்த உச்சி மாநாட்டில் (பி20) கனடா கலந்து கொள்ளாதது குறிப்பிடத்தக்கது.

இந்த உச்சி மாநாடு 2 தனித்தனி அமர்வுகளாக நடைபெறுகிறது. முதல் அமர்வில், ‘ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்’ என்கிற தலைப்பிலான விவாதம், 2030 நிகழ்ச்சி நிரலுடன் நிலையான வளர்ச்சி இலக்குகள், சாதனைகளை வெளிப்படுத்துதல் மற்றும் முன்னேற்றத்தை விரைவுபடுத்துதல் ஆகியவற்றை உள்ளடக்கியது. 2-வது அமர்வு ‘ஒரே பூமி நிலையான ஆற்றல் மாற்றம் – பசுமை எதிர்காலத்திற்கான நுழைவாயில்’ என்கிற தலைப்பில் நடைபெறுகிறது.

Tags: PM ModiG20P20 Summit
Share
Tweet
SendShare
Previous Post

திருப்பதி ஆர்ஜித சேவை: எந்த நாளில் எந்த டிக்கெட் கிடைக்கும்?

Next Post

ஆப்கானிஸ்தானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

Related News

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பாஜகவிடம் திருமாவளவன் அமைச்சர் பதவி கேட்டதை சொல்ல வேண்டி வரும் – பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

சட்டப்பேரவையில் ரத்தீஷ் பெயரை முதல்வர் பதிவு செய்தது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கை – துணை நிலை ஆளுநர், முதல்வர் ஆலோசனை!

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை கடும் பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies