ஐ.ஐ.டி. மாணவர்கள் இஸ்ரோவில் பணிபுரிய விரும்பவில்லை !- இஸ்ரோ தலைவர்
Jan 14, 2026, 03:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஐ.ஐ.டி. மாணவர்கள் இஸ்ரோவில் பணிபுரிய விரும்பவில்லை !- இஸ்ரோ தலைவர்

இஸ்ரோ தலைவர் சோம்நாத் வேதனை!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 13, 2023, 04:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவின் மதிப்புமிக்க பொறியியல் கல்லூரிகளான, அரசாங்கத்தால் நடத்தப்படும் இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (IIT) மாணவர்கள், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவில் பணிபுரிய விரும்பவில்லை. இஸ்ரோவில் பணிபுரியும் ஐ.ஐ.டி. மாணவர்கள் 1 சதவீதத்திற்கும் குறைவாகவே இருக்கிறார்கள் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் வேதனையுடன் தெரிவித்திருக்கிறார்.

தனியார் தொலைக்காட்சி நிறுவனம் நடத்திய நேர்காணல் நிகழ்ச்சியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் தலைவர் சோம்நாத் கலந்துகொண்டு பேசுகையில், “நமது நாட்டின் சிறந்த திறமைசாலிகளாக ஐ.ஐ.டி.யில் இருந்து வெளிவரும் பொறியாளர்களாக இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் இஸ்ரோவில் சேர விரும்பவில்லை. இஸ்ரோவில் பணிபுரியும் ஐ.ஐ.டி. மாணவர்கள் 1 சதவீதத்திற்கும் குறைவானவர்களே.

இந்திய அரசாங்கத்தின் உயர் தொழில்நுட்பக் கல்வியால் ஐ.ஐ.டி. மாணவர்கள் பெரிதும் பயனடையும்போது, ​​அவர்கள் ஏன் இஸ்ரோ போன்ற அரசாங்கத்தால் நடத்தப்படும் அறிவியல் நிறுவனத்தில் பணிபுரிய மறுக்கிறார்கள்? சிறந்த பொறியியல் திறமையாளர்கள் தேசத்திற்கு சேவை செய்வதை உறுதி செய்ய இந்திய அரசு ஏன் முயற்சி எடுக்கவில்லை? கவர்ச்சியான ஐ.ஐ.டி.யில் உள்ளவர்களுக்கு அரசுத் துறை அறிவியல் வேலைகள் ஏன் கவர்ச்சிகரமானதாக இல்லை?

நம் நாட்டில் அரசுத் துறையில் வேலை தேடுவோர் இன்றளவும் அதிகளவில் இருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் தனியார் துறையில் நல்ல சம்பளத்தில் வேலை பார்த்தாலும், விடுமுறை, ஓய்வூதியம், கிராஜுவிட்டி, பி.எஃப். உள்ளிட்ட சலுகைகள் மற்றும் வசதிகள் காரணமாக அரசுத் துறையில் சேர விரும்புகின்றனர். ஆனால், ஐ.ஐ.டி. மாணவர்கள் இஸ்ரோ வேலைவாய்ப்பை தேர்வு செய்வதில்லை.

இஸ்ரோவில் நிறைய காலியிடங்கள் இருக்கின்றன. தற்போது ஆட்சேர்ப்புக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால், நாட்டின் முன்னணி கல்வி நிறுவனங்களில் ஒன்றான ஐ.ஐ.டி.யில் பயின்ற பொறியாளர்கள் அல்லது பயின்று வரும் மாணவர்கள் இஸ்ரோவில் இணைய விரும்புவதில்லை. இஸ்ரோவில் சிறந்த திறமையான பொறியாளர்கள் வேண்டும் என்றும், இவர்கள் ஐ.ஐ.டி. போன்ற சிறந்த நிறுவனத்தில் இருந்து வரும் மாணவர்களாக இருக்க வேண்டும் என்றும் விரும்புகிறோம். ஆனால், ஐ.ஐ.டி.யில் வேலை வாய்ப்பு முகாம் நடத்தியும் யாரும் சேரவில்லை.

ஒரு சதவீதம் அல்லது அதற்கும் குறைவான மாணவர்கள் மட்டுமே விண்வெளித் துறையை தேசிய அளவில் முக்கியமான வேலை வாய்ப்பாகக் கருதுகின்றனர். மீதமுள்ளவர்கள் இந்த வாய்ப்பைப் பற்றி யோசிக்கக்கூட மறுக்கிறார்கள். இதற்குப் பின்னால் உள்ள காரணம் இஸ்ரோ வழங்கும் சம்பளம். இஸ்ரோ குழு, தொழில் வாய்ப்புகள் குறித்து விரிவான தகவல்களை அளித்து வருகிறது. தொழில் வாய்ப்புகள் மற்றும் வேலை முறை பற்றிய அனைத்துத் தகவல்களையும் வழங்கிய பிறகு, சம்பளம் குறித்த தகவல்களை கூறுகின்றனர்.

பொதுவாகவே, மாணவர்கள் உறுதியான மற்றும் நிறைவான சம்பளத்தை எதிர்பார்க்கிறார்கள். ஆனால், இஸ்ரோவின் சம்பளம் பற்றிக் கேள்விப்பட்டதும், கிட்டத்தட்ட 60 சதவீத ஐ.ஐ.டி. மாணவர்கள் வேலை வாய்ப்பை நிராகரித்து விடுகின்றனர். ஐ.ஐ.டி.யில் தேர்ச்சி பெறும் அல்லது இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கு வளாக நேர்காணல் நடத்தும்போது, இஸ்ரோவில் உள்ள மூத்த அதிகாரிக்கு எவ்வளவு சம்பளம் வழங்கப்படுகிறது என்கிற தகவலும் தெரிவிக்கப்படுகிறது. இதைக் கேட்டவுடன் வேலைவாய்ப்பை நிராகரித்து விடுகின்றனர்” என்றார்.

Tags: SomnathISROChairman
ShareTweetSendShare
Previous Post

சென்னிமலையை கிறிஸ்துவ மலையாக மாற்றுவோம் – திமிர் பேச்சைக் கண்டித்து பாஜக, இந்து முன்னணி போராட்டம்!

Next Post

இந்திய பாகிஸ்தான் போட்டியில் இசை நிகழ்ச்சி !

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies