சென்னிமலையை கிறிஸ்துவ மலையாக மாற்றுவோம் - திமிர் பேச்சைக் கண்டித்து பாஜக, இந்து முன்னணி போராட்டம்!
Jun 14, 2026, 08:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னிமலையை கிறிஸ்துவ மலையாக மாற்றுவோம் – திமிர் பேச்சைக் கண்டித்து பாஜக, இந்து முன்னணி போராட்டம்!

Murugesan M by Murugesan M
Oct 13, 2023, 04:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னிமலையில் மலை மீதுள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலை, கிறிஸ்துவ மலையாக மாற்றுவோம் என்று கூறிய கிறிஸ்தவ முன்னணி அமைப்பினரைக் கைது செய்யக் கோரி, சென்னிமலையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என பாஜக, இந்து முன்னணி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம், சென்னிமலை முருகன் திருக்கோவில் பிரசித்தி பெற்ற ஸ்தலம். இங்குதான் கந்த சஷ்டி கவசம் முதல் முறையாக அரங்கேற்றப்பட்டது. அவ்வளவு பெருமை வாய்ந்த ஸ்தலம்.

சென்னிமலையில் இருந்து அரச்சலூர் செல்லும் சாலையில் கத்தக்கொடி காடு என்ற பகுதியில், ஜான் பீட்டர் என்பவர் வீடு வாங்கி மத போதகராகக் கிறிஸ்துவ மதப் பிரச்சாரம் செய்து வந்துள்ளார்.

கடந்த 2 வருடங்களுக்கு மேலாக ஜெபக் கூட்டங்கள் நடத்துவதும், ஒலிபெருக்கி மூலம் இந்து தெய்வங்களைச் சாத்தான் என அவமதித்து பேசுவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார். இதனைக் கண்டித்து, அப்பகுதி மக்கள் சென்னிமலை காவல் நிலையத்தில் பல முறை புகார் செய்துள்ளனர். ஆனால், நடவடிக்கை இல்லை.

இந்த நிலையில், மாதம் செப்டம்பர் 17 -ம் தேதி அன்று, வெளியூரிலிருந்து மக்களைத் திரட்டி வந்து ஜெபக்கூடம் நடத்தியுள்ளார். அப்போது, ஒலிபெருக்கி மூலம் ஹிந்து தெய்வங்களைச் சாத்தான் எனக்கூறி இழிவுபடுத்தியுள்ளார். இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கூட்டம் நடந்த பகுதிக்குச் சென்ற பாஜகவினர் மற்றும் ஹிந்து முன்னணி அமைப்பினர் இது குறித்து கேள்வி எழுப்பினர். சென்னிமலையில் மலை மீதுள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலை, கிறிஸ்துவ மலையாக மாற்றுவோம் என்று கூறிய கிறிஸ்தவ முன்னணி அமைப்பினர் கூறியதால் இரு தரப்புக்கும் இடையே வாக்கு வாதம் முற்றி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

இந்த நிலையில், கிறிஸ்துவ அமைப்பினர் வலியுறுத்தல் காரணமாகக் கொடுக்கப்பட்ட புகாரின் மீது மட்டும் கைது செய்து காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இந்துக்கள் கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனிடையே, சென்னிமலையில் மலை மீதுள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலை, கிறிஸ்துவ மலையாக மாற்றுவோம் என்று கூறிய கிறிஸ்தவ முன்னணி அமைப்பினரைக் கைது செய்ய வேண்டும் என சென்னிமலையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அங்கு பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Tags: hindu munnaniMurugan Temple
ShareTweetSendShare
Previous Post

வருமானத்துக்கு அதிகமாக 354 சதவீதம் சொத்து சேர்ப்பு!- ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளர் மீது வழக்குப் பதிவு!

Next Post

ஐ.ஐ.டி. மாணவர்கள் இஸ்ரோவில் பணிபுரிய விரும்பவில்லை !- இஸ்ரோ தலைவர்

Related News

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies