மேட்டூர் அணை நீர்மட்டம் 38.60 அடியாக உயர்வு
Aug 24, 2025, 05:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மேட்டூர் அணை நீர்மட்டம் 38.60 அடியாக உயர்வு

Web Desk by Web Desk
Oct 14, 2023, 01:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மேட்டூர் அணையில் குடிநீருக்காக தொடர்ந்து வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் மாதம் 12 ஆம் தேதியில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது. பாசன தேவைக்கு ஏற்ப அணையில் இருந்து தண்ணீர் அதிகரித்தும், குறைத்தும் வெளியேற்றப்பட்டு வந்தது.

இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்தது. அதே போல் கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் பருவமழை கைகொடுக்கவில்லை. மேலும் கர்நாடகா அணைகளில் இருந்தும் தமிழகத்துக்கு உரிய தண்ணீரை திறக்கவில்லை.

இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்தது. இதன் காரணமாக அணையில் மூழ்கி இருந்த கோவில் மற்றும் கிறிஸ்துவ கோபுரங்கள் வெளியே தெரிந்தது.

அதோடு இல்லாமல் நீர்த்தேக்க பகுதிகள் வறண்டு பாளம், பாளமாக நிலப்பரப்பு வெடித்து காணப்பட்டது. மேலும் பாறைகள் மற்றும் கற்களாக காட்சியளித்தது. அணையில் போதுமான தண்ணீர் இல்லாததால் கடந்த 10ஆம் தேதி காலை 6 மணியுடன் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படுவது நிறுத்தப்பட்டது.

ஆனாலும் குடிநீருக்காக தொடர்ந்து வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

இதற்கிடையே தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் திடீரென பெய்த மழை காரணமாக கடந்த சில நாட்களாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. நேற்று காலை வினாடிக்கு 15 ஆயிரத்து 606 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து 15 ஆயிரத்து 260 கனஅடியாக குறைந்தது. மேலும் கடந்த 10-ந் தேதி அணையின் நீர்மட்டம் 30.99 அடியாக இருந்த நிலையில் இன்று காலை 38.60 அடியாக உயர்ந்து உள்ளது. மேலும் அணையில் தற்போது 11.38 டி.எம்.சி.தண்ணீர் இருப்பு உள்ளது. கடந்த 5 நாட்களில் அணையின் நீர்மட்டம் 7.61 அடி உயர்ந்து உள்ளது.

நீண்ட நாட்களுக்கு பின்பு மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். இதே அளவில் நீர்வரத்து இருந்தால் இன்னும் 2 வாரங்களில் அணையின் நீர்மட்டம் 50 அடியை எட்டிவிடும்.

Tags: mettur dam
ShareTweetSendShare
Previous Post

மக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தும் ஹமாஸ் தீவிரவாதிகள்!

Next Post

சதுரகிரியில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் !

Related News

அமெரிக்காவை அழிவின் விளிம்பிற்கு அழைத்துச் செல்லும் இந்தியா மீதான வரிவிதிப்பு : எச்சரிக்கை விடுக்கும் நிபுணர்கள் – சிறப்பு தொகுப்பு !

சட்டவிரோத சூதாட்டம், காங். எம்எல்ஏ கைது : அமலாக்கத்துறை சோதனையில் அள்ள அள்ள பணம் – சிறப்பு தொகுப்பு!

இபிஎஸ் தான் என்டிஏ கூட்டணி முதல்வர் வேட்பாளர் – நயினார் நாகேந்திரன் உறுதி!

புற்று நோயாளிகளுக்கு GOOD NEWS : நம்பிக்கை தரும் தடுப்பூசி – சிறப்பு தொகுப்பு!

பழனி அருகே தேனீர் அருந்திக்கொண்டிருந்தவர் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை!

திருமணம் செய்து கொள்ள காதலன் மறுப்பு : 7-வது மாடியில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை!

Load More

அண்மைச் செய்திகள்

ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு ஆயுத அமைப்பின் முதல் சோதனை வெற்றி!

திருத்தணி அருகே மின்சாரம் தாக்கியவர் மருத்துவமனையில் அனுமதி – பழுதை சரி செய்ய மின்மாற்றியில் ஏறியபோது நிகழ்ந்த சோகம்!

காரைக்குடி அருகே வணிகர் சங்கத்தின் சார்பில் மாட்டுவண்டி எல்கை பந்தயம்!

கூடலுார் பகுதியில் சாமந்தி பூ விளைச்சல் சரிவு – விவசாயிகள் கவலை!

உலக விண்வெளி சக்திகளிடையே உயர்ந்து நிற்கும் இந்தியாவிற்கு ககன்யான் திட்டம் சான்று – ராஜ்நாத் சிங் பெருமிதம்!

மழை வருது… மழை வருது… குடை கொண்டு வா – அரசுப்பேருந்தின் அவலம்!

ஊழியரை மதுபோதையில் தாக்கியதாக குற்றச்சாட்டு – கோவிலம்பாக்கம் ஊராட்சி செயலர் பணியிடை நீக்கம்!

கூடலூர் அருகே குடியிருப்பு பகுதியின் சுற்றுச்சுவரை இடித்து சேதப்படுத்திய காட்டு யானை!

மசினகுடி அருகே உடல் மெலிந்த நிலையில் சுற்றித் திரியும் புலி – தீவிர கண்காணிப்பு பணியில் வனத்துறையினர்!

பாரிவேந்தர் பிறந்த நாள் – தலைவர்கள் வாழ்த்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies